என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை
வேலூர், ஜூன். 29–
ராஜீவ்காந்தி கொலை கைதியான பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக் கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக தொற்று நோய் இருந்தது. இதற்காக அவர் வேலூரில் சிகிச்சை பெற் றார்.
பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு ஆபரேஷன் நடந்தது. தொடர்ந்து அவர் வேலூர் ஜெயிலுக்கு கொண்டு வரப் பட்டார். அவர் அங்கு மருந்து சாப்பிட்டு வருகிறார்.
அவர் மூட்டு வலியாலும் அவதிப்பட்டு வருகிறார். இதற்காகவும், சிறுநீரக தொற்று காரணமாகவும் அவருக்கு மாதந்தோறும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று சிகிச் சைக்காக அவர் வேலூர் ஜெயிலில் இருந்து டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் தலை மையில் பலத்த பாதுகாப் புடன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பேரறிவா ளனுக்கு தேவைப்படும் மூட்டு வலி சிகிச்சைக்கு ஏற்ற வசதிகள் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் இல்லை. எனவே அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
பின்னர் அவர் பாதுகாப் புடன் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறைத்துறை அனுமதி கிடைத்ததும் பேரறிவாளன் சென்னை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவார் என்று தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்