என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது குழந்தையை கொன்ற தாய்
Byமாலை மலர்31 Jan 2019 10:45 AM IST (Updated: 31 Jan 2019 10:45 AM IST)
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகனை தலையணையால் அமுக்கி தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி அகரத்தான்வட்டத்தை சேர்ந்தவர் சந்தியா (வயது 21). திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இவரும் தகரகுப்பத்தை அடுத்த தொட்டிகிணறை சேர்ந்த சரவணன் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ரோஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு சந்தியா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் சரவணன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில், கட்டிலில் ரோஷன் வாயில் நுரை தள்ளியவாறு முகத்தின் மீது தலையணை வைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி கூச்சலிட்டனர்.
இதையறிந்த சந்தியா குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். மேலும் அவன் தூங்கி கொண்டிருக்கும்போது முகத்தில் தலையணை விழுந்து மூச்சு திணறி இறந்திருப்பதாக கூறினார்.
ஆனால் அங்குள்ள பொதுமக்கள், மர்மமான முறையில் குழந்தை இறந்திருப்பதாகவும், குழந்தை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் பரபரப்பாக பேசினர்.
இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் திருமால், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தியாவிடம் விசாரணை நடத்தினர்.
இதில் சந்தியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரது மகனை தலையணையால் அமுக்கி கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் சந்தியாக அவரது மகனுக்கு விஷ ஊசி போட்டு கொன்றாரா? இந்த கொலையில் சந்தியாவின் கள்ளக்காதலனுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி அகரத்தான்வட்டத்தை சேர்ந்தவர் சந்தியா (வயது 21). திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இவரும் தகரகுப்பத்தை அடுத்த தொட்டிகிணறை சேர்ந்த சரவணன் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ரோஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு சந்தியா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் சரவணன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில், கட்டிலில் ரோஷன் வாயில் நுரை தள்ளியவாறு முகத்தின் மீது தலையணை வைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி கூச்சலிட்டனர்.
இதையறிந்த சந்தியா குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். மேலும் அவன் தூங்கி கொண்டிருக்கும்போது முகத்தில் தலையணை விழுந்து மூச்சு திணறி இறந்திருப்பதாக கூறினார்.
ஆனால் அங்குள்ள பொதுமக்கள், மர்மமான முறையில் குழந்தை இறந்திருப்பதாகவும், குழந்தை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் பரபரப்பாக பேசினர்.
இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் திருமால், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தியாவிடம் விசாரணை நடத்தினர்.
இதில் சந்தியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரது மகனை தலையணையால் அமுக்கி கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் சந்தியாக அவரது மகனுக்கு விஷ ஊசி போட்டு கொன்றாரா? இந்த கொலையில் சந்தியாவின் கள்ளக்காதலனுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X