என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கடலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்
Byமாலை மலர்27 Aug 2019 11:10 AM IST (Updated: 27 Aug 2019 11:10 AM IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ பட்டமேற்படிப்புகளில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
கடலூர் , விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், வேப்பூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் ஒரு சில டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் மருத்துவ சேவைகள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ பட்டமேற்படிப்புகளில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
கடலூர் , விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், வேப்பூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் ஒரு சில டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் மருத்துவ சேவைகள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X