என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சேலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்16 Feb 2021 3:48 PM IST (Updated: 16 Feb 2021 3:48 PM IST)
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் இந்த ஆண்டுக்கான திருமண நிதி உதவி, ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சேலம்:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கோவையில் நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.
பின்னர் அவர் மாலையில் கோவையில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் இந்த ஆண்டுக்கான திருமண நிதி உதவி, ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் 2011-2012 முதல் 2017-2018 வரை 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டம், பட்டயம் பயின்ற 38,575 ஏழைப் பெண்களுக்கு ரூ.136 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வீதம் 1,54,300 கிராம் தங்கமும், 2017-2018 முதல் 2019-2020 வரை 16,400 ஏழைப் பெண்களுக்கு ரூ.62.28 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வீதம் 1,31,200 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சேலம் மாவட்டத்திற்கு பட்டம் பயின்ற 4,737 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.23.68 கோடி திருமண நிதிஉதவியும், 10-ம் வகுப்பு பயின்ற 2,363 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.5.90 கோடி திருமண நிதி உதவியும், தலா ஒரு பவுன் தங்கம் வீதம் ரூ.26.88 கோடி மதிப்பீட்டிலான 7,100 பவுன் (37,872 கிராம்) தங்கமும் வரப்பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், எம்.எல்.ஏக்கள் சேலம் மேற்கு வெங்கடாசலம், வீரபாண்டி மனோன்மணி, சங்ககிரி ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கோவையில் நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.
பின்னர் அவர் மாலையில் கோவையில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் இந்த ஆண்டுக்கான திருமண நிதி உதவி, ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் 2011-2012 முதல் 2017-2018 வரை 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டம், பட்டயம் பயின்ற 38,575 ஏழைப் பெண்களுக்கு ரூ.136 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வீதம் 1,54,300 கிராம் தங்கமும், 2017-2018 முதல் 2019-2020 வரை 16,400 ஏழைப் பெண்களுக்கு ரூ.62.28 கோடி திருமண நிதி உதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வீதம் 1,31,200 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சேலம் மாவட்டத்திற்கு பட்டம் பயின்ற 4,737 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.23.68 கோடி திருமண நிதிஉதவியும், 10-ம் வகுப்பு பயின்ற 2,363 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.5.90 கோடி திருமண நிதி உதவியும், தலா ஒரு பவுன் தங்கம் வீதம் ரூ.26.88 கோடி மதிப்பீட்டிலான 7,100 பவுன் (37,872 கிராம்) தங்கமும் வரப்பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், எம்.எல்.ஏக்கள் சேலம் மேற்கு வெங்கடாசலம், வீரபாண்டி மனோன்மணி, சங்ககிரி ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X