என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
Byமாலை மலர்2 Sept 2021 9:24 AM IST (Updated: 2 Sept 2021 9:24 AM IST)
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் வினாடிக்கு 2390 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம்:
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்து கணிசமாக இருப்பதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பவானி சாகர் அணையில் நீர்மட்டம் குறையாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 102 அடியை எட்டியது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2936 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் வினாடிக்கு 2390 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதே போல் காலிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பவானி சாகர் அணைக்கு இன்று காலை முதல் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், அதே அளவில் தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாலும் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள தொட்டம்பாளையம், முடுக்கன் துறை, சத்தியமங்கலம் அக்ரகாரம், பவானி ஈஸ்வரன் கோவில், சதுமுகை, கொமாரபாளையம், கொடிவேரி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க சத்தியமங்கலம் நகராட்சி, பவானி சாகர் பேரூராட்சி சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்து கணிசமாக இருப்பதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பவானி சாகர் அணையில் நீர்மட்டம் குறையாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 102 அடியை எட்டியது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2936 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் வினாடிக்கு 2390 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதே போல் காலிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பவானி சாகர் அணைக்கு இன்று காலை முதல் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், அதே அளவில் தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாலும் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள தொட்டம்பாளையம், முடுக்கன் துறை, சத்தியமங்கலம் அக்ரகாரம், பவானி ஈஸ்வரன் கோவில், சதுமுகை, கொமாரபாளையம், கொடிவேரி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க சத்தியமங்கலம் நகராட்சி, பவானி சாகர் பேரூராட்சி சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X