என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
Byமாலை மலர்25 Nov 2021 9:23 AM IST (Updated: 25 Nov 2021 9:23 AM IST)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன் (வயது 35) என்பவர் தமிழ் ஆசிரியராக 5 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி, பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அருள்செல்வன் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக அந்த மாணவி தலைமை ஆசிரியை(பொறுப்பு) லதாவிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இந்தநிலையில், ஆசிரியர் அருள்செல்வன் வழக்கம்போல நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி குற்றத்தை மறைக்க முயற்சித்து மாணவிகளை சமாதானப்படுத்தியது தெரியவந்தது.
விசாரணையை தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் அதனை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரியலூர் அனைத்து மகளிர் போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் இரு வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன் (வயது 35) என்பவர் தமிழ் ஆசிரியராக 5 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி, பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அருள்செல்வன் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக அந்த மாணவி தலைமை ஆசிரியை(பொறுப்பு) லதாவிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இந்தநிலையில், ஆசிரியர் அருள்செல்வன் வழக்கம்போல நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி குற்றத்தை மறைக்க முயற்சித்து மாணவிகளை சமாதானப்படுத்தியது தெரியவந்தது.
விசாரணையை தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் அதனை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரியலூர் அனைத்து மகளிர் போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் இரு வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X