என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
திருச்சி திருவெறும்பூர் வாக்குச்சாவடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாக்களித்தார்
Byமாலை மலர்19 Feb 2022 9:16 AM IST (Updated: 19 Feb 2022 9:18 AM IST)
திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்.
திருச்சி:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்து 158 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியவுடன் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
* திருச்சி திருவெறும்பூர் வாக்குச்சாவடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார்.
* விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் பொன்முடி வாக்களித்தார்.
* திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்.
* கோவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் வாக்களித்தார்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்து 158 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியவுடன் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
* திருச்சி திருவெறும்பூர் வாக்குச்சாவடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார்.
* விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் பொன்முடி வாக்களித்தார்.
* திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்.
* கோவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் வாக்களித்தார்.
* வேலூர் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார்.
* சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வாக்கை பதிவு செய்தார்.
இதையும் படியுங்கள்...நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X