என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற குமரி மாவட்ட மாணவிகள் சென்னை வந்தனர்
Byமாலை மலர்2 March 2022 1:15 PM IST (Updated: 2 March 2022 1:15 PM IST)
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் நாட்டில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை பெற்றோர் வலியுறுத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்ட மாணவிகள் 3 பேர் பத்திரமாக சென்னை வந்தடைந்தனர். அவர்கள் நாளை சொந்த ஊர் திரும்புகிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நித்திரவிளை பகுதியை சேர்ந்த சகாதேவன் பிறீடா தம்பதியரின் மகள் ஸ்ருதி. குளப்புறம் லிட்டில் டாடா மகள் ஆஷிகா, கருங்கல் பகுதியை சேர்ந்த அஷிதா ஆகியோர் 3 மாதங்களுக்கு முன் உக்ரைன் நாட்டின் மேற்கு எல்லை பகுதியில் உள்ள உஷ்ருத் நேஷனல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் படிக்க சென்றனர்.
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் நாட்டில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை பெற்றோர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பஸ்ஸில் ஹங்கேரி வந்தடைந்த மூவரும் அங்கிருந்து விமானத்தில் டெல்லி வந்து அங்கிருந்து நேற்று சென்னை வந்தனர். இதையடுத்து மருத்துவ மாணவர்களின் பெற்றோர் சென்னை சென்றுள்ளனர். அங்கிருந்து மாணவர்களை நாளை சொந்த ஊருக்கு அழைத்து வர உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X