search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுதந்திர தின விழா: அனைவருக்குமான இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம் - மு.க. ஸ்டாலின் - லைவ் அப்டேட்ஸ்

    • சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார்.
    • சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தலைமைச் செயலகத்துக்கு எதிரே முக்கிய விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை நிகழ்த்துவார்.

    அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வீட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார்.

    Live Updates

    • 15 Aug 2024 4:01 AM GMT

      கடந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    • 15 Aug 2024 3:59 AM GMT

      2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

    • 15 Aug 2024 3:56 AM GMT

      சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கயத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

    • 15 Aug 2024 3:50 AM GMT

      முதலமைச்சர்கள் கொடியேற்ற அதிகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

    • 15 Aug 2024 3:45 AM GMT

      இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    • 15 Aug 2024 3:40 AM GMT

      விடுதலை எளிதாக கிடைக்கவில்லை, 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் கிடைத்தது. நாட்டு பன்முகத்தன்மையின் அடையாளம் தான் தேசியக்கொடி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

    • 15 Aug 2024 3:38 AM GMT

      தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

    • 15 Aug 2024 3:37 AM GMT

      சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

    • 15 Aug 2024 3:35 AM GMT

      தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்

    • 15 Aug 2024 3:30 AM GMT

      புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

    Next Story
    ×