search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் விற்க தடை
    X

    பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் விற்க தடை

    • அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
    • காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி போலீஸ் நிலையம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் போலீசார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக போலீசார் சார்பில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வாங்கவும் கூடாது, வழங்கவும் கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவின்படி, காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி போலீஸ் நிலையம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் போலீசார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் அறிவுரைகளை வழங்கினர்.

    Next Story
    ×