search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பற்றி பேசி மாணவர்களை ஊக்குவித்த முதலமைச்சர்
    X

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பற்றி பேசி மாணவர்களை ஊக்குவித்த முதலமைச்சர்

    • 6- 12 அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
    • 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பற்றி பேசி மாணவர்களை ஊக்குவித்தார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பலவீனமாக வீட்டிற்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் கொண்ட பெண்ணாக போராடி நாம் அனைவரும் பாராட்டும் அளவிற்கு கொடி கட்டி பறக்கிறார்.

    தடைகள் என்பது உடைத்தெறியத்தான். தடைகளை பார்த்து ஒருபோதும் சோர்ந்துவிடக்கூடாது. வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்.

    உங்கள் மேல் உங்களைவிட நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு பின் உங்கள் பெற்றோர் மட்டுமல்ல திமுக அரசும் உள்ளது.

    வரலாற்றில் என்றைக்கும் நம்ம பெயரை சொல்லப் போகிறத் திட்டமாக அது இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக உருவாகியுள்ள 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×