search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீமானின் விடாமுயற்சியை  பாராட்டிய துரை வைகோ
    X

    சீமானின் விடாமுயற்சியை பாராட்டிய துரை வைகோ

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
    • கொள்ளை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் எங்களுக்கும் பல வேறுபாடு இருக்கலாம்.

    கோவை:

    கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கூறியதாவது:

    தமிழகத்தை பொறுத்தவரை பாஜக வாஷ் அவுட். கிட்டத்தட்ட 11 இடங்களில் பாஜக டெபாசிட் இழந்துள்ளனர்.

    உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவிலை வைத்தே இந்த தேர்தலை அவர்கள் சந்தித்தார்கள். அயோத்தி கோவில் அமைந்துள்ள இடத்திலேயே தேர்தலில் தோற்று இருக்கிறார்கள்.

    மதவாத அரசியலுக்கு தமிழ்நாடு மட்டுமல்ல உத்தரபிரதேசத்திலேயே அவர்களுக்கு இடமில்லை என்று மக்கள் காண்பித்து உள்ளனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

    அடுத்து வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும். எங்களை பொறுத்தவரை நாங்கள் தனி இயக்கம். எங்களுக்கு என்று ஒரு சின்னம் உள்ளது. அந்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்.

    நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அவர்கள் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 8 விழுக்காடு வாக்குகளை பெற்று இருக்கிறார்கள்.

    8 விழுக்காடு என்பது அண்ணன் சீமானின் விடாமுயற்சி, பல வருட உழைப்பு, இயக்க தோழர்களின் உழைப்பால் கிடைத்துள்ளது.

    கொள்ளை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் எங்களுக்கும் பல வேறுபாடு இருக்கலாம். கொள்கைகள், சித்தாந்தங்கள்படி நாங்கள் வேறுபடுகிறோம். தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.

    Next Story
    ×