என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி- லைவ் அப்டேட்ஸ்
- செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்
- அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் சோதனை
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர். பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றனர்.
Live Updates
- 17 July 2023 11:05 PM IST
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய 16 மணி நேர சோதனை நிறைவு
- 17 July 2023 11:04 PM IST
நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர்கள் வருகை
- 17 July 2023 9:27 PM IST
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
- 17 July 2023 8:29 PM IST
சென்னையில் நடந்த சோதனைக்குப்பிறகு சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மகன் பொன் கவுதம சிகாமணியும் சென்றுள்ளார்.
- 17 July 2023 3:46 PM IST
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
- 17 July 2023 2:36 PM IST
வங்கி பரிவர்த்தனை, பணப் பரிமாற்றம் தொடர்பாக வங்கி அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, பொன்முடியின் வீட்டுக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் வந்தனர்.
- 17 July 2023 2:36 PM IST
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது அவர்களிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் காரில் இருந்து மூன்று பைகளை பொன்முடியின் வீட்டிற்குள் எடுத்து சென்றனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- 17 July 2023 11:59 AM IST
பா.ஜனதா இதுபோன்று செய்தால் கர்நாடகா நிலை நாடுமுழுவதும் ஏற்படும்- ஆர்.எஸ். பாரதி
- 17 July 2023 11:47 AM IST
பா.ஜனதா ஒரு மூழ்கும் கப்பல் என்றும், அமலாக்கத்துறை அதன் இளைஞர் அணி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்