என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி- லைவ் அப்டேட்ஸ்
- செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்
- அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் சோதனை
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர். பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றனர்.
Live Updates
- 17 July 2023 11:46 AM IST
பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்
- 17 July 2023 11:08 AM IST
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட பொய் வழக்கு. வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. அதன் நடவடிக்கையை தொடங்கி உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 17 July 2023 10:39 AM IST
விழுப்புரத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், பொன்முடி ஆதரவு வக்கீல்கள் வீட்டின் முன் குவிந்துள்ளனர்
- 17 July 2023 10:38 AM IST
பொன்முடியின் காரில் ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? என காரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- 17 July 2023 9:38 AM IST
அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் சோதனை
- 17 July 2023 9:37 AM IST
துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
- 17 July 2023 9:36 AM IST
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவே தொடர்ந்து சோதனை- முத்தரசன் குற்றச்சாட்டு
- 17 July 2023 9:34 AM IST
வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணியில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 17 July 2023 9:34 AM IST
2012ல் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 17 July 2023 9:34 AM IST
2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்