search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொத்தேரியில் கஞ்சா வேட்டை - 500க்கு மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை
    X

    பொத்தேரியில் கஞ்சா வேட்டை - 500க்கு மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை

    • தனியார் கல்லூரியை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவல்.
    • மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.


    இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×