search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சர்வதேச காத்தாடி திருவிழா அமைச்சர்களை கவர்ந்த ஜல்லிக்கட்டு காளை காத்தாடி
    X

    "சர்வதேச காத்தாடி திருவிழா" அமைச்சர்களை கவர்ந்த ஜல்லிக்கட்டு காளை காத்தாடி

    • ஜல்லிக்கட்டு காளை காத்தாடி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
    • ஆணையர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 3வது சர்வதேச காத்தாடி திருவிழா கோவளம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடந்து வருகிறது., இதில் ஜல்லிக்கட்டு காளை காத்தாடி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது மற்றும் பல்வேறு வனவிலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என, வெவ்வேறு வடிவ காத்தாடிகள், கண்கவர் வண்ணங்களில், நீலவான பின்னணியில் வானில் பறந்து பார்வையாளர் அனைவரையும் கவர்ந்து வருகிறது.


    இந்தியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த, 40 காத்தாடி கலைஞர்கள், 200க்கும் மேற்பட்ட காத்தாடிகளை பறக்க விட்டுள்ளனர்., போட்டியை துவக்கி வைத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் வெளிநாட்டவர் பறக்க விட்ட ஜல்லிக்கட்டு காளை காத்தாடியை அருகில் சென்று பார்த்து ரசித்தனர்., சுற்றுலாத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


    வரும் 18ம் தேதி வரை தினசரி பிற்பகல் 2:00 மணி முதல், மாலை 6மணி வரை காத்தாடிகள் பறக்க விடப்படுகின்றன., நுழைவு கட்டணம் ரூ.200, 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி. உணவு, வர்த்தக அரங்குகள், கேளிக்கை விளையாட்டுகள், பாட்டுக்கச்சேரி, பேஷன்ஷோ மேடை போன்ற அரங்குகள் வளாகத்தின் உள்ளே இடம் பெற்றுள்ளது.

    Next Story
    ×