search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருங்கூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு- தங்கம் தென்னரசு
    X

    மருங்கூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு- தங்கம் தென்னரசு

    • இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது.
    • பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன் எக்ஸ் தளத்தில் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் கால வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    தமிழர்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுப்போக்கிற்காக உடல் உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம். மருங்கூரில் வாழ்விடப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    தற்போது, பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெண்களும் சிறுவர்களும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர்.

    இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது. வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாகத் தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் மக்கள் கூடி வாழ்ந்த ஒரு வாழ்விடப்பகுதிதான் என்பது உறுதியாகின்றது.

    Next Story
    ×