search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு - நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி
    X

    லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு - நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி

    • லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது.
    • லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்தனர்.

    கோவை மாவட்டம் புளியகுளம் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது. அதில் முதியவர் மருதாசலம் என்பவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

    விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×