search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பூணூல் அறுப்பு, எல். முருகன் ஆறுதல்.. காவல் துறை மறுப்பு.. நடந்தது என்ன?
    X

    பூணூல் அறுப்பு, எல். முருகன் ஆறுதல்.. காவல் துறை மறுப்பு.. நடந்தது என்ன?

    • நெல்லை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
    • எல். முருகன் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு கண்டனம்.

    திருநெல்வேலியை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் இளைஞரை வழிமறித்த கும்பல், அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பந்தப்பட்ட இளைஞர் தவறான தகவலை பரப்பி வருவதாக நெல்லை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெருவில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ததாகவும், வீடியோவில் இளைஞர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

    முன்னதாக இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் நடைபெறவே இல்லை என்று காவல்துறை அளித்த விளக்கம் இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

    Next Story
    ×