search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரி அருகே இன்று அதிகாலை லாரிகள் மோதியதில் 1 டன் ஆயில் சாலையில் ஆறாக ஓடியது- போக்குவரத்து மாற்றம்
    X

    பொன்னேரி அருகே இன்று அதிகாலை லாரிகள் மோதியதில் 1 டன் ஆயில் சாலையில் ஆறாக ஓடியது- போக்குவரத்து மாற்றம்

    • சாலையில் வழிந்தோடிய ஆயிலால் வாகனங்கள் பாதிக்காமல் இருக்க அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த ஆயிலை வேறொரு லாரியில் மாற்றி மீண்டும் எடுத்து சென்றனர்.

    பொன்னேரி:

    மணலி புதுநகர் அடுத்த ஆண்டார் மடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவிற்கு கண்டெய்னர் லாரியில் 18 டன் எடை கொண்ட போம் மற்றும் வாகனங்களுக்கு தயாரிக்க கூடிய என்ஜின் ஆயில் கொண்டு செல்லப்பட்டது. இந்த ஆயில் கண்டெய்னர் லாரியின் உள்ளே ராட்சத பாதுகாப்பு பலூனில் நிரப்பப்பட்டு இருந்தது.லாரியை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் தர்மராஜ் ஓட்டினார்.

    இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீஞ்சூரை அடுத்த நாளூர் அருகே கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னர் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த பாதுகாப்பு பலூனின் மேல்பகுதி கிழிந்து அதில் இருந்து ஆயில் வெளியேறியது.

    இதனால் சாலை முழுவதும் ஆயில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் சரக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோபிதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

    சாலையில் வழிந்தோடிய ஆயிலால் வாகனங்கள் பாதிக்காமல் இருக்க அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    வாகனங்கள் அனைத்தும் பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் திருப்பி விடப்பட்டது. விபத்துக்குள்ளான லாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையில் வழிந்தோடிய ஆயில் மீது மணல் போடப்பட்டது.

    கண்டெய்னர் லாரியில் இருந்து சுமர் ஒரு டன் ஆயில் வெளியேறி இருந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பலூனில் மேல் பகுதி மட்டுமே கிழிந்ததால் குறைந்த அளவு ஆயில் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9 மணிக்கு பின்னரே அப்பகுதியில வாகன போக்குவரத்து சீரானது. விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த ஆயிலை வேறொரு லாரியில் மாற்றி மீண்டும் எடுத்து சென்றனர்.

    Next Story
    ×