search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Anbumani Ramadoss
    X

    முதலமைச்சரின் அமெரிக்க பயணம் தோல்வி- அன்புமணி ராமதாஸ்

    • போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது.
    • போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் வெளிநாட்டில் 17 நாட்கள் தங்கி 19 நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.7600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். 17 நாட்களில் வெறும் 7,600 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்பதை தோல்வியாக தான் நாங்கள் பார்க்கிறோம். இவ்வளவு நாட்கள் சென்று குறைந்த முதலீடு தான் பெற்றிருக்கிறார்.

    மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், மதுக்கடையை உடனடியாக மூடினால் தமிழ்நாட்டின் சூழல் மோசமாகிவிடும் என தமிழக மக்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். தமிழக இளைஞர்கள் கெடுத்ததே தி.மு.க.தான். தமிழகத்தில் மது இல்லாமல் இருக்கமுடியாத நிலையை உருவாக்கியதே திராடவிட மாடல் அரசுதான்.

    மதுவிலக்கு பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து பேசுகின்ற கனிமொழி மூன்று ஆண்டுகாலம் மவுனமாக இருக்கிறார். அனைத்து விதமான போதைப் பொருட்களும் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. முதலமைச்சர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார். இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள், காவல்துறை எதற்கு இருக்கிறது?

    சென்னை கோவளத்தில் ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வரும் போது சென்னைக்கு தான் மூன்று மடங்கு அதிகமான பறவைகள் வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு நெருக்கடி ஏற்படும். இந்த திட்டத்தை தவிர்த்து மூட வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக் கட்சி. எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். இஸ்லாமியருக்கும் இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார்.

    திருமாவளவன் மது விலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம். மது ஒழிப்பு தொடர்பாக நாங்கள் பி.எச்.டி. படித்துள்ளோம், திருமாவளவன் எல்.கே.ஜி. தான் படித்திருக்கிறார். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற திருமாவளவன் பதிவு சரியானது. அதை ஏன் நீக்க வேண்டும்? தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என கட்சி தொடங்கவில்லை. அதை நீக்கியது தான் சரியில்லை.

    நாடு முழுவதும் மது விலக்கு கோரிக்கையை கண்டிப்பாக வைப்போம். மதுவிலக்கை எல்லா மாநிலங்களிலும் இதை செய்ய வேண்டும் படிப்படியாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசு மதுவை விற்கவில்லை, திணிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×