search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஜானகி பாணியில் அறிக்கை வெளியிடுங்கள் - சசிகலாவுக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்
    X

    ஜானகி பாணியில் அறிக்கை வெளியிடுங்கள் - சசிகலாவுக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்

    • கள்ளச்சாராய சம்பவங்களை திட்டம் போட்டு தி.மு.க. அரசு மறைத்து வருகிறது.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கட்சியில் உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முடியும்.

    * சசிகலா 2021-ல் பதவியில் இல்லை என அறிவித்துள்ளார்.

    * கட்சி மீது உண்மையில் அக்கறை இருந்தால் ஜானகி பாணியில் சசிகலா ஒரு அறிக்கையை தற்போது வெளியிட வேண்டும்.

    * அ.தி.மு.க. எங்கள் தலைமையில் இருப்பதை ஏற்று சசிகலா அறிக்கை வெளியிட வேண்டும்.

    * ஓ.பி.எஸ்.சை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கும் எண்ணம் ஒரு போதும் இல்லை.

    *தமிழகத்தில் கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    * கள்ளச்சாராய சம்பவங்களை திட்டம் போட்டு தி.மு.க. அரசு மறைத்து வருகிறது.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×