search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மாங்காடு அருகே பர்னிச்சர் கம்பெனியில் தீவிபத்து...
    X

    மாங்காடு அருகே பர்னிச்சர் கம்பெனியில் தீவிபத்து...

    • தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை அடுத்த மாங்காடு அருகே கெருக்கம்பாக்கத்தில் பர்னிச்சர் கம்பெனியில் இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரவாயல், விருகம்பாக்கம், பூவிருந்தவல்லி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்பனி மற்றும் குடோனில் வைத்திருந்த ஷோபா, பெட், கட்டில் என பர்னிச்சர் பொருட்கள் மொத்தம் தீயில் கருகி சேதம் ஆயின. தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.

    தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×