search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழகத்தில் பா.ஜ.க இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்- எல்.முருகன்
    X

    தமிழகத்தில் பா.ஜ.க இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்- எல்.முருகன்

    • 2014 ஆம் ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.
    • 2027-க்குள் 3வது இடத்தை அடைந்து விடுவோம் என்பது, பிரதமர் மோடி கொடுத்துள்ள கேரண்டி. நிச்சயம் நாம் அதை அடைவோம்.

    தூத்துக்குடி:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

    2014 ஆம் ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். 2027-க்குள் 3வது இடத்தை அடைந்து விடுவோம் என்பது, பிரதமர் மோடி கொடுத்துள்ள கேரண்டி. நிச்சயம் நாம் அதை அடைவோம். தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக, மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய வாலிபரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். அந்த சம்பவத்திற்கு தமிழக காவல்துறையினர் இரண்டு நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கேள்வி கேட்ட வாலிபர் மீதும், அவரது தாய் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.


    Next Story
    ×