search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை ஓவராக பேசியதால் ஒண்ணுமில்லாமல் போனோம் - எஸ்.பி.வேலுமணி
    X

    அண்ணாமலை ஓவராக பேசியதால் ஒண்ணுமில்லாமல் போனோம் - எஸ்.பி.வேலுமணி

    • 2014-ல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கியதை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் அண்ணாமலை.
    • விமர்சனங்களை விட்டுவிட்டு பாஜக ஆட்சியில் கோவைக்கு திட்டங்களை அண்ணாமலை கொண்டு வரட்டும்.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

    * கடந்த காலங்களிலும் கோவையில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

    * 2019 பாராளுமன்ற தேர்தலில் தோற்ற பின்னரும் 2021-ல் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் முழுமையாக வெற்றி பெற்றது.

    * கோவையில் 2019-ல் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளை விட தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளோம்.

    * பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது அதிகம் பேசியது அண்ணாமலை தான்.

    * அதிமுக- பாஜக கூட்டணி பிரிவுக்கு காரணம் அண்ணாமலை தான்.

    * 2014-ல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கியதை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் அண்ணாமலை.

    * விமர்சனங்களை விட்டுவிட்டு பாஜக ஆட்சியில் கோவைக்கு திட்டங்களை அண்ணாமலை கொண்டு வரட்டும்.

    இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

    Next Story
    ×