search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவர்களை காலால் எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்- மாவட்ட ஆட்சியர் அதிரடி
    X

    மாணவர்களை காலால் எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்- மாவட்ட ஆட்சியர் அதிரடி

    • கூடைப்பந்து போட்டியில் பள்ளியின் மாணவர்கள் தோற்றதால் திட்டி தீர்த்த ஆசிரியர்.
    • செல்போனில் வீடியோவாக பார்த்த பெற்றோர் அதிர்ச்சி.

    சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோற்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பான அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

    இதனை செல்போனில் வீடியோவாக பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், மாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×