search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    Vanathi Srinivasan
    X

    சர்ச்சையாக மாறிய குலத்தொழில் குறித்த வானதி சீனிவாசன் பேச்சு

    • கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
    • விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் குலத்தொழில் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வானதி சீனிவாசன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு அனுமதிக்கவில்லை. குலத்தொழிலை திமுக அனுமதிக்க மறுக்கிறது. விஸ்வகர்மா சமுதாயத்திற்குரிய பெருமையான விஷயத்தையே குலைக்க நினைக்கிறார்கள். பெருமையை குலைக்க நினைப்பவர்களை கேள்வி கேட்க யாராலும் முடியவில்லை.

    கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும், ஒரு பெருமை இருப்பதை போல குலத்தொழிலுக்கும் பெருமை உள்ளது என்றார்.

    விஸ்வகர்மா சமூகத்தினர் முன்பாக குலத்தொழில் குறித்து பேசிய வானதி சீனிவாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    வானதி சீனிவாசனின் பேச்சு ஆணவத்தின் உச்சம். குலத்தொழிலை பற்றி பேசும் அனைவரும் அவர்களின் குலத்தொழிலை செய்யப்பட்டும். வானதி தனது குலத்தொழிலை செய்ய தயாரா என்று திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    Next Story
    ×