search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கும்மிடிபூண்டியில் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு
    X

    கும்மிடிபூண்டியில் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

    • 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.
    • ராஜ்குமார் உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்து ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த 4ம் தேதி ஆக்கிரப்பு வீட்டை வருவாய்த் துறையினர் அகற்ற முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ராஜ்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் 85சதவீதம் தீக்காயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் ராஜ்குமார் உயிரிழந்தார்.

    ராஜ்குமார் உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×