என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
அமெரிக்காவில் இசைவிழாவின்போது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி- 3 பேர் காயம்
- கூட்டத்தில் இருந்தவர் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்
- இதன்காரணமாக 2-வது நாள் இசைவிழா ரத்து செய்யப்பட்டது
வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் என்ற இடத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் திறந்தவெளி கலையரங்கம் உள்ளது. இங்கு இரண்டு நாட்கள் கொண்ட இசைவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
அதன்படி அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு முதல்நாள் இசைவிழா நடைபெற்று கொண்டிருக்கும்போது, அரங்கத்திற்கு வெளியே உள்ள மைதானத்தில் பலர் கூடியிருந்தனர்.
போலீசார் பாதுகாப்புக்கு நின்றிருந்த போதிலும், ஒரு நபர் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியபின், அந்த நபர் கூட்டத்தை பயன்படுத்தி தப்பி ஓட முயன்றார்.
ஆனால், போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போதிலும் இசைவிழா தொடர்ந்து நடைபெற்றது. மைதானத்தில் இருப்பவர்கள், அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்பின் எந்த அச்சுறுத்தலும் இல்லை என விழா ஒருங்கிணைப்காளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை இசைவிழா ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்