search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    துருக்கியில் சோகம் - லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி
    X

    துருக்கியில் சோகம் - லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி

    • துருக்கியில் லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    அங்காரா:

    கிழக்கு துருக்கியில் அக்ரி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் லாரி மீது பயணிகள் பேருந்து மோதி தீப்பிடித்தது. பயணிகள் சிலர் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கீழே குதித்துத் தப்பினர். எனினும், பேருந்துக்குள் தீ வேகமாக பரவியதால், கீழே இறங்க முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்ட 7 பேர் உடல் கருகி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×