search icon
என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து இந்திய அணி சாதனை படைத்தது.
    • தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார்.

    சிட்டகாங்:

    இந்தியா, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார். அவர் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களுக்கு வெளியேறினார்.

    இந்நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்துள்ள இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 182 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும். அவருக்கு பக்கபலமாக ஆடிய விராட் கோலி சதமடித்தார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது, எபாட் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும்,

    மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

    • எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷேக் ஹசீனா.

    இந்நிலையில், கோலாபாக் மைதானத்தில் எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசிய கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷேக் ஹசீனா வாக்குகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.

    மேலும் அவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.

    பாராளுமன்றத்தை கலைத்து, நடுநிலையான காபந்து அரசாங்கம் அமைக்க சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை என எதிர்க்கட்சியின் தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது..
    • இஷான் கிஷன் இரட்டைச் சதமடித்தார். விராட் கோலி சதமடித்தார்.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.

    டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.

    இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடினார். கோலி சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.

    • இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
    • காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை வீழ்த்திய வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. கேப்டனாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடரை இழந்த நிலையில், இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    • இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 51 ரன்களை விளாசினார்.

    மிர்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக கடைசி கட்டத்தில் இறங்கி அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 51 ரன்களை விளாசினார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

    ஒருநாள் போட்டிகளில் 256 சிக்சர்களும், டி20 தொடரில் 182 சிக்சர்களும், டெஸ்ட் தொடரில் 64 சிக்சர்களும் ரோகித் சர்மா விளாசியுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் (553) அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவின் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

    • 2-வது ஒருநாள் போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது வங்காளதேச அணி.
    • அத்துடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    மிர்புர்:

    இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது.

    இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது.

    இந்நிலையில் , வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    • வங்காளதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
    • விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார்.

    மிர்புர்:

    வங்காளதேசத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய வங்காளதேச அணி 271 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இப்போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பேட்டிங்கின்போது 9வது வீரராக களமிறங்கினார்.

    இந்தியா 213 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 46வது ஓவரில் தீபக் சாஹரின் விக்கெட்டை இந்தியா இழந்ததும், ரோகித் பேட்டிங் செய்ய வந்தார். விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் நிச்சயம் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தம் 28 பந்துகளை எதிர்கொண்ட அவர், 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்து கடைசி பந்து வரை சேஸிங்கை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

    இப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோதிலும், காயத்தின் வலியையும் பொருட்படுத்தாமல் ரோகித் சர்மா ஆடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக டுவிட்டரில் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

    'தலை வணங்குகிறேன் ரோஹித் சர்மா. கட்டைவிரல் காயத்துடன் பேட்டிங் செய்வதற்கு துணிச்சலான முடிவை எடுத்தார். அத்துடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தபோதும், அவர் தனது சக்தி முழுவதையும் கொடுத்து வெற்றியை நெருங்கினார். காயம்பட்ட கட்டைவிரலுடன் என்ன ஒரு அதிரடி..!' என ரசிகர்கள் ரோகித்தை பாராட்டி உள்ளனர்.

    • கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார்.
    • 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.

    மிர்புர்:

    வங்காளதேசம் மற்றம் இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. மெகிடி ஹசன் மிராஸ் சதம் அடித்தார். மஹ்முதுல்லா 77 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி (5 ரன்), ஷிகர் தவான் (8 ரன்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 82 ரன்கள் விளாசினார். அக்சர் பட்டேல் 56 ரன்கள் சேர்த்தார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் போதிய ரன்ரேட்டை எட்டவில்லை.

    கடைசி நேரத்தில் போராடிய கேப்டன் ரோகித் சர்மா, பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விரட்டி வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் எபடோட் உசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மெஹிடி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் அசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    • வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது.
    • 8வது வீரராக களமிறங்கிய மெகிடி ஹசன் மிராஸ் சதம் அடித்து அசத்தினார்

    மிர்புர்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறிய நிலையில், 6வது வீரராக களமிறங்கிய மஹ்முதுல்லா 77 ரன்களும், 8வது வீரராக களமிறங்கிய மெகிடி ஹசன் மிராஸ் 100 ரன்களும் விளாசியதால் அணி நல்ல ஸ்கோரை எட்டியது.

    இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உம்ரான் மாலிக், முகமது சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
    • இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

    மிர்புர்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் அனாமுல் ஹக் 11 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்திய வீரர் சிராஜ் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். 

    • மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மிர்பூர்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

    இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோற்றால் ஒரு நாள் தொடரை இழந்துவிடும். இதனால் இந்திய அணி வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் போட்டியில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல் ஒருவரே நிலைத்து நின்று ஆடினார். அதுவும் கடைசிகட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள். இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    இதேபோல பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் முக்கியமான கட்டத்தில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இது அணியின் வெற்றியை பாதித்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லிட்டன் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு நம்பிக் கையை அதிகரித்துள்ளது.

    கேப்டன் லிட்டன் தாஸ், சகீப்-அல்-ஹசன், முஸ்பிகுர் ரகீம், ஹசன் மிராஸ், எபொதத் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    வெற்றி நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    ×