search icon
என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • விபத்தில், மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • 52 பேர் பயணிக்க கூடிய பேருந்தில் 60 பேர் பயணித்ததால் விபத்து.

    வங்காளதேசத்தில் சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாஷர் ஸ்மிருதி பரிபாஹன் என்ற பேருந்து நேற்று காலை 9 மணியளவில் பிரோஜ்பூரின் பண்டாரியாவில் இருந்து புறப்பட்டது. அப்போது 10 மணியளவில் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டாவில் உள்ள சாலையோர குளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், மூன்று குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 52 பேர் பயணிக்க கூடிய பேருந்தில் 60 பேர் பயணித்ததே விபத்துக்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    மேலும், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பேருந்தில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    17 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பரிஷால் பிரதேச ஆணையர் எம்.டி ஷவ்கத் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.

    பலியானவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
    • இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழக்கும்

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20  கிரிக்கெட தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினர்.

    தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வங்காளதேசத்திற்கு இந்திய அணி தகுந்த பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேசம் 2-0 என கைப்பற்றியது.
    • ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

    சில்லெட்:

    ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 546 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது.

    அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. அஸ்மதுல்ல 25 ரன்னும், இப்ராகிம் ஜட்ரன் 22 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லித்தன் தாஸ் 35 ரன்னும், அபிப் ஹொசைன் 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேசம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

    • ஸ்மிரிதி மந்தனா 11 ரன்களும், பிரியா புனியா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    • 35.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தனர்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனால், முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர், ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதைதொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

    இதில் முதலில் களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 11 ரன்களும், பிரியா புனியா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 15 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஜெம்மியா ரோட்ரிகியுஸ் 10 ரன்கள், அமன்ஜோத் கவுர் 15 ரன்கள், தீப்தி சர்மா 20 ரன்கள், பூஜா வஸ்த்ரகர் 7 ரன்கள், பாரெட்டி அனுஷா 2 ரன்களும் எடுத்தனர்.

    ஸ்னேஹ் ரானா ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 35.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தனர்.

    இதன்மூலம், 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகளிர் அணியை வீழ்த்தி வங்காளதேச மகளிர் அணி வெற்றிப்பெற்றது.

    • டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனால், முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர், ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

    இதைதொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

    • இந்திய அணியில் அமன்ஜேத் கவுர், அனுஷா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி உள்ளனர்.
    • டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெறுகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அமன்ஜோத் கவுர், அனுஷா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி உள்ளனர்.

    இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜேமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), யஷ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ராகர், ஸ்னே ராணா, தேவிகா வைத்யா, அனுஷா.

    வங்காளதேச அணி: ஷர்மின் அக்டர், முர்ஷிதா காதுன், ஷோர்னா அக்டர், நிகர் சுல்தானா (கேப்டன்), பர்கானா ஹோக், நஹிதா அக்டர், ரிது மோனி, பஹிமா காதுன், நஹிதா அக்டர், ரபேயா கான், மருபா அக்டர்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 126 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 129 ரன்கள் எடுத்து வென்றது.

    சட்டோகிராம்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரு போட்டிகளின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்மத்துல்லா உமர்சாய் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 56 ரன்னில் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 4 விக்கெட்டும், தஸ்கின் அகமது, தைஜூல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். ஷகிப் அல் ஹசன் 39 ரன் எடுத்தார்.

    இறுதியில், வங்காளதேச அணி 23.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லிட்டன் தாஸ் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது ஷோரிபுல் இஸ்லாமுக்கும், தொடர் நாயகன் விருது பசல்ஹக் பரூகிக்கும் வழங்கப்பட்டது.

    இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது

    • இந்திய மகளிர் அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
    • அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்தது.

    ஷதி ராணி 22 ரன்னும், ஷமிமா சுல்தானா 17 ரன்னிலும் அவுட் ஆகினர். சோபனா மோஸ்தரி 23 ரன்னிலும், நிகர் சுல்தானா 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ரகர், மின்னு மணி, ஷபாலி வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி 38 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி 3 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் அதிரடியாக ஆடி 35 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 54 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • ஷான்டோ இரு இன்னிங்சிலும் சதம் விளாசினார்
    • 662 என்ற இமாலய இலக்கை எட்ட முடியாமல் ஆப்கானிஸ்தான் 115 ரன்னில் சுருண்டது

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 382 ரன்கள் குவித்தது. ஷான்டோ 146 ரன்கள் விளாசினார். ஆப்கானிஸ்தான் அணியின் நிஜத் மசூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 146 ரன்னில் சுருண்டது. வங்காளதேச அணியின் எபாடொத் ஹொசனை் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஷான்டோ 2-வது இன்னிங்சிலும் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். மற்றொரு வீரர் மொமினுல் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் சேர்த்தார்.

    ஒட்டுமொத்தமாக வங்காளதேச அணி 661 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்காகும்.

    கடினமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்கை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 115 சுருண்டது. இதனால் 546 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்கில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இரு இன்னிங்சிலும் சதம் அடித்த ஷான்டோ ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

    • வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் வங்காளதேசம் அணி 5 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்துள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 79 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்துள்ளது.

    நஜ்முல் உசைன் ஷான்டோ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 146 ரன்னில் ஆட்டமிழந்தார். மமுதுல் ஹசன் ஜாய் 76 ரன்னில் அவுட்டானார்.

    முதல் நாள் முடிவில் முஷ்பிகுர் ரஹிம் 41 ரன்னுடனும், மெஹதி ஹசன் மிராஸ் 43 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

    • மியான்மர் கிழக்கு சான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • புயலுக்கு 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    டாக்கா:

    தென்கிழக்கு வங்ககடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக மாறியது. நேற்று பிற்பகல் மியான்மர் சிட்வே நகரம் மற்றும் வங்க தேசம் காக்ஸ்பஜார் இடையே மேக்கா புயல் கரையை கடந்தது.

    இதனால் கடலோர பகுதிகளில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டி தீர்த்தது. இதனால் ஏராளமான மரங்கள் வேராடு சாய்ந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ரோடுகளில் ஆறு போல வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆறுகளில் கரையே தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உயிருக்கு பயந்து அவர்கள் வீட்டின் மேற்கூரைகளிலும் கட்டிடங்களின் மேல் மாடியிலும் தஞ்சம் புகுந்தனர்.

    சூறாவளி புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ் பார்மர்கள் சாய்ந்ததால் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இணையதள சேவைகள் அனைத்தும் முடங்கியது. மியான்மர் கிழக்கு சான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி கணவன்- மனைவி பரிதாபமாக இறந்தனர்.

    பியான்யோலாவின் நகரத்தில் மரம் விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.

    இந்த புயலுக்கு 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மோக்கா புயலால் கடலோரபகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மேற்கு மியான்மர் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கரையோரம் இருந்த குடிசைபகுதிக்குள் நீர் புகுந்தது. இதில் ஆயிரம் மக்கள் சிக்கி கொண்டனர். மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று அவர்களை மீட்டனர். கடல் நீர் புகுந்ததால் குடிசைகள் அனைத்தும் சேதம் அடைந்தது.

    வங்காளதேசம் காக்ஸ் பஜார் பகுதியில் உலகில் மிகப்பெரிய அளவிலான அகதிகள் முகாம் உள்ளது. ,இங்கு மூங்கில்களில் ஆன 1300 குடில்கள் உள்ளது. இதில் 3 லட்சம் மக்கள் தங்கி இருந்தனர். அவர்கள் புயல் தாக்குவதற்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நேற்று வங்கதேசத்தை புரட்டி போட்ட புயலுக்கு இந்த முகாமில் அமைக்கப்பட்டு இருந்த குடில்களும் தப்பவில்லை. இந்த குடில்கள் அனைத்தும் கடுமையாக சேதம் அடைந்தது.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்த பணியில் மீட்பு குழுவை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, மற்றும் குடிநீர், மருத்துவ உதவிகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் இறந்தவர்கள் பற்றிய முழு விவரமும் தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    • வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது.
    • இதனால் வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

    டாக்கா:

    வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். முன்னதாக மோக்கா புயல் காரணமாக இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்

    ×