search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் வகிக்கிறார்.
    • .பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் டாப்-10 இடத்திற்குள் உள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (886 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டசன் 2-வது இடத்திலும் (777 புள்ளி), பாகிஸ்தானின் பகர் ஜமான் 3-வது இடத்திலும் (755 புள்ளி), இமாம் உல்-ஹக் 4-வது இடத்திலும் (745 புள்ளி) உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் சேர்த்த இந்தியாவின் சுப்மன் கில் இரு இடம் முன்னேறி 5-வது இடத்தை (743 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். விராட் கோலி 9வது இடத்தில் நீடிக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியா சார்பில் சிராஜ் 4வது இடத்தில் உள்ளார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 14-ல் இருந்து 10-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.

    இதேபோல், டி20 கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 907 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (811 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார்.

    • உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
    • மாநாட்டில் ரஷியா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை.

    துபாய்:

    உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன.

    ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக உச்சி மாநாடு ஒன்றை அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடத்த உக்ரைன் முடிவு செய்தது. இதற்காக கடந்த மே மாதம் நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.

    அப்போது போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன. எனவே இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ய உதவும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா அரசாங்கம் செய்து வருகிறது.

    இந்த மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் உயர் மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார்.

    அதேசமயம் இந்த மாநாட்டில் ரஷியா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் இதற்கான தேதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த மாநாடு போரை நிறுத்த உதவுமா? என உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.

    • துபாயில் முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
    • ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது குடும்பத்தை தன்னுடன் வாழ அழைத்து வரும் தனது கனவை இப்போது நிறைவேற்ற முடியும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த முகமது அடில் கான், தான் வாங்கிய முதல் லாட்டரி சீட்டின் மூலம் ஃபாஸ்ட்5 பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார். இதன்மூலம் அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் பெறுகிறார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான முகமது அடில் கான், துபாயில் முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அதை வாங்கும்போது அவர் தன்னை பெரும் பரிசின் வெற்றியாளராக மாற்றும் என்று கற்பனைகூட செய்திருக்க மாட்டார்.

    2018 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து துபாய் சென்ற முகமது அடில், ஒரு நாள் சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்யும்போது அதில் வந்த விளம்பரத்தை கண்டு லாட்டரி சீட்டை வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி லாட்டரி டிக்கெட்டையும் வாங்கியுள்ளார்.

    இந்நிலையில், முகமது அடில் பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார்.

    இதுகுறித்து முகமது அடில் கூறுகையில், " எனது முதல் லாட்டரி டிக்கெட் என்னை முதல் ஃபாஸ்ட்5 பரிசை வென்றவராக மாற்றும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு எனது வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஏஇடி 25,000 (ரூ.5.5 லட்சம்) பெறுவது நம்பமுடியாதது.

    இந்த வெற்றியால், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது குடும்பத்தை தன்னுடன் வாழ அழைத்து வரும் தனது கனவை இப்போது நிறைவேற்ற முடியும். தனது குடும்பத்திற்காக வீடு வாங்க வேண்டும்.

    இதுபோன்ற தனித்துவமான பரிசு வழங்குவதை வேறு எந்த லாட்டரி நிறுவனத்திடம் இருந்தும் நான் பார்த்ததில்லை. இந்த வெற்றி எனது நிதி சுமைகளை நீக்கி, நிலையான இரண்டாம் நிலை வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க எனக்கு உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.

    துபாய்:

    9-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.

    • துபாய் ஷேக்கின் பெரிய ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • பெரிய வாகனத்தில் முன் நிற்கும் 2 ஹம்மர் கார்கள் உண்மையிலேயே எவ்வளவு பெரியவை என்பதை காட்டுகிறது.

    கார் தொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் கொட்டி கிடக்கிறது. அவற்றில் துபாய் ஷேக்கின் பிரமாண்ட ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. துபாயில் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் என அழைக்கப்படும் ரெயின்போ ஷேக்கிடம் 200-க்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது பெரிய ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பெரிய வாகனத்தில் முன் நிற்கும் 2 ஹம்மர் கார்கள் உண்மையிலேயே எவ்வளவு பெரியவை என்பதை காட்டுகிறது. இந்த கார்கள் வழக்கமான ஹம்மர் கார்களைவிட 3 மடங்கு பெரியவை ஆகும். இந்த கார்களின் சிறப்பு என்னவென்றால் இவற்றை சராசரி கார்களை போல சாலைகளில் ஓட்ட முடியும்.

    • இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்தது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது.

    முதலாவது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்த இந்தியா மழையால் டிரா ஆனது. இதனால் இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 1 டிரா கண்டுள்ள இந்திய அணி 2வது இடத்துக்கு (66.67%) சரிந்துள்ளது.

    பாகிஸ்தான் ஒரு ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி (100%) முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (54.17%) 3-வது இடத்திலும், இங்கிலாந்து (29.17%) 4-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி (16.67%) 5-வது இடத்திலும், உள்ளன.

    • துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவருவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் மக்கள்தொகை 35 லட்சத்து 50 ஆயிரத்து 400 ஆக இருந்தது.

    துபாய்:

    துபாய் புள்ளியியல் மையம் கூறியிருப்பதாவது:-

    துபாய் உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

    இதன் காரணமாக துபாய்க்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருவது அதிகரித்துள்ளது.

    துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவருவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 2020-ம் ஆண்டு துபாயின் மக்கள்தொகை குறைந்த போதிலும், அதனைத் தொடர்ந்து நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி இங்கு மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இதற்கு துபாய் அரசு கொரோனா பாதிப்பை சமாளிக்க மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

    இத்தகைய முயற்சிகள் காரணமாக துபாயில் மக்கள்தொகை இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் மக்கள்தொகை 35 லட்சத்து 50 ஆயிரத்து 400 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 36 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.

    இதன் மூலம் துபாயில் மக்கள்தொகை கடந்த ஒரு ஆண்டில் 89 ஆயிரத்து 196 ஆகவும், கடந்த 18 மாதங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 595 ஆகவும் அதிகரித்துள்ளது.

    துபாயில் மக்கள்தொகை கடந்த 1960-ம் ஆண்டு இருந்ததைவிட நகர்ப்பகுதி 80 மடங்கும், கிராமப் பகுதிகளில் 170 மடங்கும் அதிகரித்துள்ளது. அதிகரித்துவரும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. வீட்டு வசதிக்கான தேவைகளும் அதிகரித்துள்ளதால் பொருளாதார மேம்பாடும் அதிகரித்துள்ளது. துபாய் நகர்ப்புற திட்டம் 2040-ன் அடிப்படையில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை மேம்படுத்தவும் வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
    • சிறப்பு விருந்தினர்களாக ஹமீது யாசின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அமீரக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தியாகி கக்கன் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரன் முடக்கத்தான் பாண்டியன் நினைவு நாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் அசோகன், முத்தமிழ் வளவன், பொருளாளர் கண்ணதாசன் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

    மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹமீது யாசின், ஏபிஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் இயக்குனர் ரொட்டேரியன், குடந்தை அசரப், நஜீம் மரிக்கா, கமால் K.V.L, மீடியா அஸ்கர், அமமுக அமீரக நிர்வாகி சாதிக், பால் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதில் அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பிரேம்குமார், முகமது சித்தீக், முத்தழகு, ஜியாவுதீன், வாகை கிரன், வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

    • மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 9 அணிகள் பங்கேற்கின்றன.

    துபாய்:

    மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் உள்நாட்டில் 3 தொடர், வெளிநாட்டில் 3 தொடர் என்ற அடிப்படையில் 6 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. மொத்தம் 27 தொடர்களில் 68 டெஸ்டுகள் இதில் அடக்கம்.

    2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை நடைபெறும் இந்த தொடரின் முடிவில் யார் அதிக புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களைப் பிடிக்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.

    இந்நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கான தொடரில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி மொத்தம் 19 டெஸ்டுகளில் விளையாடுகிறது. உள்ளூர் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், அந்நிய மண்ணில் வெஸ்ட் இண்டீசை எளிதாக வென்றுவிடலாம். ஆஸ்திரேலியாவையும், தென் ஆப்பிரிக்காவையும் இந்திய அணி வீழ்த்தினாலோ, டிரா செய்தாலோ அடுத்த முறையும் இந்தியா பைனலுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தங்களது சொந்த மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை எதிர்கொள்ளும்.

    இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளை சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளையும், அந்நிய மண்ணில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை சொந்த மண்ணிலும், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளை வெளிநாடுகளிலும் எதிர்கொள்ள இருக்கிறது.

    இலங்கை அணியை பொறுத்தவரை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சொந்த மண்ணிலும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய நாடுகளை வெளிநாட்டு மண்ணிலும் எதிர்கொள்ள உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திறப்பு விழாவில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    • மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    ரியாத்:

    வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா-ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு ஷினயட் மதகுரு நிம்ர்-அல் நிம்ரை, சவுதி அரேபியா தூக்கிலிட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் நடந்தது.

    தலைநகர் தெக்ரான் மற்றும் வடமேற்கு நகரமான மஷாத்தில் உள்ள தூதரகங்கள் தாக்கப்பட்டன. இதையடுத்து ஈரானுடனான உறவை சவுதி அரேபியா துண்டித்தது. இதனால் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ஈரான் மூடியது. மேலும் ஏமன் உள்நாட்டு போரில் இரு நாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.

    இதற்கிடையே சவுதி அரேபியா-ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா முயற்சி செய்தது. இதன் பயனாக கடந்த மார்ச் 10-ந்தேதி சவுதி அரேபியா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களை திறக்க 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் ஈரான் தனது தூதரகத்தை இன்று திறக்கிறது. திறப்பு விழாவில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ஈரானில், சவுதி அரேபியா தனது தூதரகத்தை மீண்டும் திறப்பது அல்லது தூதரை தேர்ந்தெடுப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    சவுதி அரேபியா, ஈரான் நாடுகள் தங்களது மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உறவை வலுப்படுத்த தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • துபாயைச் சேர்ந்த இந்த இல்லத்தரசி, ஷாப்பிங், உணவு, பயணம் என ஆடம்பரமாக செலவு செய்வதை இன்றளவும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
    • டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பின் தொடர்பாளர்கள் சௌதிக்கு பின்னால் இருக்கிறார்கள்.

    துபாய்:

    இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

    அப்போது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஜமால் பின் நடக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறி அவரையே திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது அவர்கள் கற்பனைக்கு எட்டாத ஆடம்பரமான வாழ்க்கை முறையில் ஒன்றாக உலகம் சுற்றி வருகிறார்கள். கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த சௌதியின் விருப்பம் பொழுதுபோக்கு ஒன்று மட்டுமே.

    இதற்காக அவர் நாள் ஒன்றுக்கு ரூ.70 லட்சம் வரை செலவு செய்கிறார். ஷாப்பிங் செல்வதில் அதிக நாட்டம் கொண்ட சௌதி தனது கிரெடிட் கார்டுகள் மூலம் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, ஊர் சுற்றுவது என கழித்து வருகிறார்.

    அதனை ஊக்குவிக்கும் வகையில் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களும் உங்கள் ஷாப்பிங்கிற்கு வானமே உச்சம் என்று தெரிவித்துள்ளது.

    துபாயைச் சேர்ந்த இந்த இல்லத்தரசி, ஷாப்பிங், உணவு, பயணம் என ஆடம்பரமாக செலவு செய்வதை இன்றளவும் வாடிக்கையாக கொண்டுள்ளார். டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பின் தொடர்பாளர்கள் இவருக்கு பின்னால் இருக்கிறார்கள்.

    அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் அவர் தயங்கவில்லை. ஏராமான வீடியோக்களை நாள்தோறும் பகிர்ந்து வரும் சௌதி தனது ஷாப்பிங்கில் அதிக அளவில் டிசைனர் பைகள், பளிச்சிடும் புத்தம் புதிய கார்கள் உள்ளிட்ட ஆடம்பரமான பொருட்களை அதிக அளவில் வாங்கி குவித்து வருகிறார்.

    சௌதியும் அவரது கணவரும் கவர்ச்சியான மற்றும் ஆடம்பரமான முறையில் விடுமுறை நாட்களில் ஒன்றாகப் பயணம் செய்து வருகின்றனர். அவரது இந்த வசீகரமாக வாழ்க்கை முறைக்கு கணவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவது துபாய் நாட்டில் பேசும் பொருளாகி இருக்கிறது.

    இந்த ஜோடி சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது அவர்களை அடையாளம் கண்டுகொண்ட பலர் அதிசயத்துடன் பார்த்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அதேபோல் இந்த கோடீஸ்வர தம்பதி அடிக்கடி சீஷெல்ஸ் தீவு, லண்டனுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    அடுத்ததாக விரைவில் ஜப்பான் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள சௌதி தனக்குப் பிடித்த ஆடைகள் வடிவமைப்பாளர்கள் டியோர் என்றும், அவரது கணவர் ஹெர்ம்ஸை விரும்புவதாகவும் கூறியுள்ளார். இந்த ஜோடி தங்களுக்கு பொருந்தக்கூடிய கார்களை விரும்பும் போதெல்லாம் வாங்கி வருகிறது.

    இதுபற்றி சௌதி கூறுகையில், ஷாப்பிங் மீதான எனது அன்பைப் பகிர்ந்து கொள்ளும் போது, டிசைனர் உடைகள் மற்றும் கை நகங்களை அழகுபடுத்தும் ரகங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். இதற்காக ஒவ்வொரு பயணத்திற்கும் எளிதாக ரூ.14 முதல் ரூ.15 லட்சம் வரை செலவழிக்க முடியும். இதன் மூலம் எனது ஆடம்பரமான வாழ்க்கை நகர்ந்து வருகிறது. அதில் ஆடம்பரமான உணவு அனுபவங்கள், நேர்த்தியான ஆடைகள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளும் அடங்கும் என்றார்.

    • ஐசிசியின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அறிவிக்கப்பட்டது.
    • இந்த விருது பாகிஸ்தான் வீரர் பகர் ஜமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.

    இதில் நியூசிலாந்தின் மார்க் சாம்ப்மென், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் பாகிஸ்தானின் பகர் ஜமான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

    இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பாகிஸ்தானை சேர்ந்த பக்கார் ஜமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு தாய்லாந்தின் நருயெமோல் சாய்வாய், ஜிம்பாப்வேயின் கெலிஸ் நத்லோவ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கவிஷா எகோடகே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது தாய்லாந்தின் நருயெமோல் சாய்வாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

    ×