search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் விருது வென்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.

    இந்தப் பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானின் குர்பாசும் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஜூன் மாதத்துக்கன சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனா வென்றுள்ளார்.

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா என 2 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாசும் இடம்பெற்றுள்ளார்.

    இதேபோல், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குணரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • வீடியோ ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.
    • 900க்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர்.

    இந்தியாவை சேர்ந்த பல்லவி வெங்கடேஷ் தனது தாயாரை துபாய் அழைத்துச் சென்று புகழ்பெற்ற 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தார். அங்கு வழக்கமான குடும்பப் பணிகளை கவனித்த தாயார், இந்தியாவில் செய்வதைப்போல நட்சத்திர ஓட்டலின் பால்கனி பகுதிக்கு சென்று கம்பியில் துணியை உலர வைக்கப் போனார். ஆனால் அங்கு அப்படி துணியை உலர்த்துவது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். சிறு குழந்தைகள் செய்யும் சுட்டித்தனத்தை பெற்றோர் ரசிப்பதுபோல, தாயார் அறியாமையால் செய்த இந்த செயலை ரசித்துப் பார்த்த பல்லவி, அதை வீடியோவாக பதிவு செய்துகொண்டார்.

    இங்கே இப்படி துணியை உலர்த்தக்கூடாது என்று சொல்லியபடியே மற்ற தளங்களையும் காட்டி படம்பிடிக்கிறார். பலநூறு அறைகள் கொண்ட அந்த பிரமாண்ட ஓட்டலில் மற்றொரு தளத்திலும் யாரோ துணியை பால்கனியில் உலர்த்தி இருப்பது காட்டப்படுகிறது.

    இந்த வீடியோவை பல்லவி வலைத்தளத்திலும் பகிர்ந்தார். அந்த வீடியோ ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். லட்சக்கணக்கானவர்கள் விருப்பப் பொத்தனை அழுத்தி இருந்தார்கள்.


    • கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது.
    • கோவில் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது.

    கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முதல் முறையாக சென்றபோது அங்கு வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக கோவில் கட்ட மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதை ஏற்றுக்கொண்டு இந்து கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது. கோவிலை கட்டுவதற்கு துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

    கோவிலின் கட்டுமான பணிகள் மற்றும் நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பிஏபிஎஸ் என்ற ஆன்மிக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் சில ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் பணிகள் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது.

    இந்நிலையில், அபுதாபி கோவிலுக்கு இதுவரை வருகை தந்த பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அபுதாபி இந்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அபுதாபியில் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான ஆன்மீக சோலை என போற்றப்படும் மணற்கல் ஆலயம் உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் நடப்பு ஆண்டின் ஜூன் 14-ந் தேதி வரை பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவில் திறக்கப்பட்டு இதுவரை வருகை புரிந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.

    10 லட்சம் பேரின் பிரார்த்தனைகள், இதயங்கள், நம்பிக்கைகள், அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கதைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். தற்போது இந்த ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்துகொண்டு மட்டுமே வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த விடுமுறை நாட்களில் சுவாமி தரிசன நேரம் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இன்று (திங்கட்கிழமை) கோவிலுக்கு விடுமுறையாகும். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கோவில் திறந்திருக்கும். பார்வையாளர்களின் வசதிக்காக அபுதாபி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 203 வழித்தட எண் கொண்ட பஸ் அல் முரைக்காவில் கோவிலுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தம் வரை இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • ஒரு பயனர், துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    சமூக ஊடகங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சிலர் வித்தியாசமான செயல்களை செய்து அதனை வீடியோவாக வெளியிடுகிறார்கள். அந்த வகையில், நாடியா கர் என்ற பெண் உலக அளவில் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் அடிக்கடி சொகுசு கார்களில் வலம் வருவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஆவார்.

    இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அவர் துபாயில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள பூங்காவிற்குள் புலியுடன் நடந்து செல்வது போன்றும், அப்போது புலியின் கழுத்தில் சங்கிலி கட்டி இழுத்து செல்வது போன்றும் காட்சி உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், துபாயில் எனது செல்ல புலியை அழைத்து செல்வது வித்தியாசமானது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்.
    • டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அமீரகத்தில் தற்போது கோடைக்காலம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் நிலவுகிறது. இதனை கவனத்தில் கொண்டு மோட்டார் சைக்கிளில் டெலிவரி செய்யும் ஊழியர்களின் உடல்நலன் கருதி அவர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துபாயில் இந்த ஓய்வெடுக்கும் அறைகள் அரேபியன் ரேஞ்சஸ், இன்டர்நேசனல் சிட்டி, பிசினஸ் பே, அல் கூஸ், அல் கராமா, அல் சத்வா, அல் ஜதாப் மற்றும் மிர்திப் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் 24 மணி நேரமும் சுய சேவை முறையில் செயல்படுகிறது.

    இந்த அறைகள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஓய்வறையில் அமரும் இருக்கைகள், குளிர்ந்த தண்ணீர், செல்போன் சார்ஜ் ஏற்றும் வசதி, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் எந்திரம், சிற்றுண்டி வினியோகம் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் நிழலான பகுதியில் மோட்டார் சைக்கிள்களை வரிசையில் நிறுத்திக்கொள்ளலாம். இடத்தை பொறுத்து இந்த அறையில் ஒரே நேரத்தில் 10 பேர் வரை ஓய்வெடுக்கலாம்.

    கடும் கோடை நிலவும் நேரத்தில் அல்லது ஆர்டருக்காக காத்திருந்து மிகவும் சோர்வடையும்போது டெலிவரி ஊழியர்கள் இங்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லலாம். இதன் மூலம் களைப்பு மற்றும் சோர்வு நீக்கப்பட்டு சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்த வசதி துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் டெலிவரியில் ஈடுபட்டு வரும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் கட்டாய மதிய இடைவேளை வருகிற 15-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைமுறைக்கு வருகிறது.

    தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். இந்த நேரங்களில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    • டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்தது.

    துபாய்:

    வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ளன.இதில் வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றின.

    இந்நிலையில், டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

    இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்துள்ளது. நியூசிலாந்து மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-இடம் சரிந்து 7-வது இடத்திலும் உள்ளது. கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    துபாய்:

    ஐ.சி.சி.யின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

    இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தூதராக இந்தியாவின் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான போட்டித் தூதராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சோதனை அடிப்படையில் மின்சார பஸ் இயக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • பொதுமக்களுக்கு மின்சார பஸ்சின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    துபாய்:

    துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    துபாயில் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் வகையில் பஸ், மெட்ரோ ரெயில், டிராம், டாக்சி, படகு உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து சேவையில் இயக்கப்படும் வாகனங்களின் மூலம் கார்பன் உமிழ்தலை தடுக்கும் வகையில் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. துபாய் அரசின் பூஜ்ய கார்பன் உமிழ்தல் போக்குவரத்து திட்டத்தின் அடிப்படையில் அரசு பஸ் போக்குவரத்தில் இயக்கப்பட்டு வரும் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சோதனை அடிப்படையில் மின்சார பஸ் இயக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

    அப்போது மின்சார பஸ் லா மெர் முதல் அல் சுபூ வரை இயக்கப்பட்டது. இந்த பஸ் சேவையில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் மின்சார பஸ் சேவையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். பொதுமக்களுக்கு மின்சார பஸ்சின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    துபாய் அரசின் கொள்கைக்கு ஏற்ப பூஜ்ய கார்பன் உமிழ்தல் மூலம் துபாய் நகரின் முக்கிய பகுதிகளில் 30 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. இந்த பஸ்கள் பிசினஸ் பே, அல் வாசல் சாலை மற்றும் துபாய் மால் ஆகிய இடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பொதுமக்கள் லா மெர், ராஷித் பின் பகைத் பள்ளிவாசல், அல் கொரைபா, உம்சுகிம் 1, உம்சுகிம் பூங்கா, வைல்ட் வாடி, மெர்கடோ மால், புர்ஜ் அல் அரப், அல் சுபு டிராம் நிலையம் மற்றும் துபாய் ஆப்சோர் செய்லிங் கிளப் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

    இந்த பயணத்துக்கு ஏற்ப டீசல் என்ஜினால் இயக்கப்பட்டு வரும் 30 பஸ்கள் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். மேலும் படிப்படியாக மற்ற பஸ்களையும் இதேபோல் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது.
    • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

    இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

    நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், கமல்ஹாசன் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

    நடிகைகள் மீரா ஜாஸ்மின், திரிஷா, ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பாடகி சித்ரா மற்றும் இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

    இந்நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து விசா அங்கீகாரம் பெற்றதற்கு பெருமைப் படுகிறேன் என தெரிவித்தார்.

    ரஜினிகாந்த் கோல்டன் விசா பெற்றது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 714 புள்ளிகள் பெற்று 6-வது இடம் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் அக்ஷர் பட்டேல் 4-வது இடமும், ரவி பிஷ்னோய் 5-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹசரங்கா மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசன் ஆகியோர் 228 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    • துபாயில் வசித்துவரும் இந்திய சிறுவனை அவனது நன்னடத்தைக்காக துபாய் போலீசார் பாராட்டினர்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    துபாய்:

    துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் ஒருவன் அவனது நன்னடத்தை செயலுக்காக துபாய் போலீசாரால் பாராட்டப்பட்டார்.

    துபாய்க்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் அவரது கைக்கடிகாரத்தை அங்கு தொலைத்துள்ளார். அந்த கடிகாரத்தை இந்தியாவை சேர்ந்த சிறுவன் யூனிஸ் பார்த்துள்ளார். அதை எடுத்துச்சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.

    அந்த பயணி அவரது சொந்த ஊர் திரும்பிய நிலையில், மீண்டும் அவரை தொடர்பு கொண்டு துபாய் போலீசார் கடிகாரத்தைக் கொடுத்துள்ளனர். இதற்கு அந்த பயணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில், சுற்றுலா காவல்துறை இயக்குநர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜலாப், துணை லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல் ரகுமான், சுற்றுலா துறை தலைவர் கேப்டன் ஷஹாப் அல் சாடி ஆகியோர் இந்திய சிறுவன் யூனிஸை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.

    இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், சுற்றுலா பயணியின் தொலைந்த கடிகாரத்தை திருப்பி அளித்த சிறுவனின் நேர்மையை துபாய் போலீஸ் கவுரவிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

    ×