search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    புயலாவது... மழையாவது.. 50 கி.மீ. நடந்தே சென்று மகள் திருமணத்தில் கலந்து கொண்ட தந்தை
    X

    புயலாவது... மழையாவது.. 50 கி.மீ. நடந்தே சென்று மகள் திருமணத்தில் கலந்து கொண்ட தந்தை

    • மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை.
    • இந்த ஆண்டின் சிறந்த தந்தை எனவும் பெயரெடுத்தார்.

    அமெரிக்காவில் தனது மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை, இந்த ஆண்டின் சிறந்த தந்தையாக தேர்வாகியுள்ளார். அந்த தந்தையின் பெயர் டேவிட் ஜோன்ஸ். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஜான்சன் சிட்டியில் வசிக்கிறார்.

    இவரது மகள் எலிசபெத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய நாள் அவர் அங்குள்ள வேறொரு பகுதியில் இருந்தார். அந்த 2 பகுதிகளுக்கும் இடையே உள்ள தூரம் 50 கி.மீ. ஆகும். ஆனால் அந்த பகுதிக்கு காரில் செல்ல வேண்டுமென்றால் 2 மணி நேரம் ஆகும்.

    ஆனால் அங்கு பெய்த புயல் மழை காரணமாக போக்குவரத்து தடைபட்டது. இதனால் திருமணம் நடைபெற்ற பகுதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் மகளின் திருமண விழாவில் பங்கேற்பதில் டேவிட் ஜோன்ஸ் தீவிரமாக இருந்தார்.

    மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை. மகளின் திருமணத்தில் பங்கேற்க அங்கிருந்து 50 கி.மீ. தூரம் நடந்தே செல்வது என்று முடிவு செய்தார். தனது பயணத்துக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்களை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அந்த பையை தனது முதுகில் மாட்டியபடி நடை பயணத்தை தொடங்கினார்.

    கடும் புயல், மழைக்கு மத்தியில் பெரும் சோதனைகளை அனுபவித்து, சுமார் 12 மணி நேரத்தில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்று தனது மகளின் திருமணம் நடைபெற்ற இடத்தை அடைந்தார். அவரை பார்த்ததும் அவரது மகள் எலிசபெத் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    மகளின் திருமணத்தில் பங்கேற்க கடும் புயல், மழைக்கு மத்தியில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்ற தந்தை அனைவருக்கும் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மேலும் இந்த ஆண்டின் சிறந்த தந்தை எனவும் பெயரெடுத்தார்.

    Next Story
    ×