என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
எல்லையில் ஊடுருவிய உக்ரைன் வீரர்கள்: விமான ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்த ரஷியா
- ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியம் அருகே உள்ள எல்லையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் குவிப்பு.
- ரஷியா அதிகப்படியான வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்த போதிலும் இருநாடுகளுக்கு இடையில் போர் முடிவுக்கு வரவில்லை.
தற்போது ஊடுருவல், எல்லையைத் தாண்டி தாக்குதல் போன்றவை இல்லை. ஆனால் டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. அடிக்கடி இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைனில் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியம் அருகே உக்ரைன் ராணுவ வீரர்கள் கடந்த நான்கு நாட்களாக குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரிந்ததும் ரஷியா உடனடியாக அங்கு படைகளை அனுப்பியுள்ளது. மேலும், ஆயுதங்களையும் அனுப்பி வைத்துள்ளது. உக்ரைன் திடீரென குர்ஸ்க் பிராந்திய எல்லையில் வீரர்களை குவித்துள்ளதால் ரஷியா அங்கு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் இது தொடர்பாக விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் இன்று ரஷியா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் கோஸ்டியன்டினிவ் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஷாப்பிங் மால் மக்கள் நிறைந்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏவுகணை தாக்குதல் காரணமாக அப்பகுதியில் மேக அடர்ந்த கருப்பு நிறத்தில் காட்சியளித்தன.
மக்கள் வசிக்கும் இடத்தை குறிவைத்து மற்றொரு தாக்குல். இது ரஷியாவால் பயங்கரவாத தாக்குதல் என டொனெட்ஸ்க் பிராந்திய தலைவர் வேடிம் பிளாஷ்கின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உக்ரைனின் எல்லைத் தாண்டிய சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என ரஷியா தெரிவித்துள்ளது. குர்ஸ்க் பிராந்தியத்தில் செயல்பாட்டு நிலை மிகவும் மோசமாக உள்ளது என அப்பிராந்திய பொறுப்பு கவர்னர் அலெக்செய் ஸ்மிர்னோவ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்