search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.
    • செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அர்ஜெண்டினா வீரரை வென்றார்.

    லண்டன்:

    கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டி வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 67-ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரான்ஸ் வீரர் லாரண்ட் லொகோலியுடன் மோதினார். இதில் காஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஒரு கார் அந்த இடத்திற்கு பின்புறம் ஓட்டிச் செல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தாக்கியவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டதாகவும் தெரிகிறது.

    இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் குஜராத்தி சங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு திருமண விழா நடைபெற்றுள்ளது. 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட ஒரு திருமண விருந்தின்போது ஏற்பட்ட பிரச்சனையில் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்தில், ஒரு கார் அந்த இடத்திற்கு பின்புறம் ஓட்டிச் செல்லப்பட்டிருப்பதாகவும், அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமண விருந்து நடந்த திசையிலிருந்து மற்றொரு நபர், முதலில் தாக்கியவரை நோக்கி துப்பாக்கியால் திருப்பிச் சுட்டதாகவும் தெரிகிறது.

    இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், ஒரு வாகனம் சேதமடைந்துள்ளதால் அது தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வார இறுதியில் தடயவியல் மற்றும் கண்காணிப்பு கேமரா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

    வால்வர்ஹாம்ப்டன் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் பால் சதர்ன் கூறுகையில், "இது ஒரு முற்றிலும் பொறுப்பற்ற தாக்குதல். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு இருந்தவர்களுடனும், பார்த்தவர்கள் அல்லது ஏதேனும் பதிவு செய்தவர்களுடனும் நாங்கள் பேசுவது அவசியம். அதன் மூலம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடியும். மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், பாதுகாப்பு குறித்து உறுதியளிக்கவும் கூடுதல் ரோந்துகளை மேற்கொள்வோம்" என்றார்.

    • 4-வது நாளான நேற்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இறுதியாக இங்கிலாந்து அணி 81.3 ஓவர்களில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 100.4 ஓவர்களில் 416 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆலி ராபின்சன், ஜோஷ் டங்கு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் டக்கட் 98 ரன்னும், ஹாரி புரூக் 50 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

    4-வது நாளான நேற்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக கவாஜா 77 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதையடுத்த களமிறங்கிய இங்கிலாந்து தரப்பில் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து, 5ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், அதிரடியாக விளையாடிய டக்கெட் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களில் அவுட்டானார்.

    தொடர்ந்து, பேர்ஸ்டோவ் அவுட் முறையில் அவுட்டானார். ஆனால், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 155 ரன்களை குவித்தார்.

    அடுத்து களமிறங்கிய பிராட் 11 ரன்களிலும், ராபின்சன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக இங்கிலாந்து அணி 81.3 ஓவர்களில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    இதனால், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

    • ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட் சிலாமை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

    பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டனில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

    நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. ஜோகோவிச் 24-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

    அல்காரஸ் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    • ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட இயக்குனருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
    • விழாவில் மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா விருதுகளை வழங்கினர்.

    லண்டன் :

    இங்கிலாந்து ராணி கமிலாவின் சகோதரரும், மறைந்த வன பாதுகாவலருமான மார்க் ஷண்டால் உருவாக்கப்பட்ட 'எலிபெண்ட் பேமிலி' என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆசிய காடுகளில் யானைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

    இந்த நிறுவனம் ஆசிய காடுகளில் வனவிலங்குகள் மற்றும் காடுகளை பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை தரும் நபர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு 'எலிபெண்ட் பேமிலி' நிறுவனம் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இந்த விருதுகளை வழங்கினர்.

    இந்தியாவில் உள்ள 'ரியல் எலிபெண்ட் கலெக்டிவ்' என்ற தன்னார்வ நிறுவனம், இங்கிலாந்தின் 'எலிபெண்ட் பேமிலி' நிறுவனத்துடன் இணைந்து நீலகிரி மலைப்பகுதியில் அதிகம் காணப்படும் லந்தானா கேமரா என்ற உண்ணி செடியை கொண்டு முழு அளவிலான யானை சிலைகளை உருவாக்கி வருகிறது. பெட்டா குரும்பா பழங்குடி சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் லந்தானா யானை சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

    இந்த கைவினை பொருள்கள் சுற்றுச்சூழலில் இருந்து ஆக்கிரமிப்பு உயிரினங்களை அகற்றுவதுடன் வனத்தை சார்ந்துள்ள சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.

    இந்த நிலையில் லந்தானா யானை சிலைகளை உருவாக்கும் கைவினை கலைஞர்களின் பிரதிநிதிகளாக நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ரமேஷ் மாறன் (வயது 32), விஷ்ணு வர்தன் (29) இருவருக்கும் மதிப்பு மிக்க 'மார்க் ஷண்ட்' விருதை மன்னரும், ராணியும் வழங்கினர்.

    மேலும் இந்த விழாவில் ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படத்தை இயக்கிய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வஸ் 'தாரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். அவருக்கு யானை சிலை வழங்கப்பட்டது.

    முதுமலையில் உள்ள தெப்பாக்காடு யானைகள் முகாமை சுற்றி பயணிக்கும் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை மனதைக் கவரும் வகையில் வழங்கியதன் மூலம் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி.
    • இவர் முதல் ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் விடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடர் நடைபெறுகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர், வார்விக்ஷையர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் மூர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.

    வார்விக்ஷயர் அணி சார்பில் ஹசன் அலி, லிண்டொட் தலா 3 விக்கெட்களும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 169 ரன்கள் இலக்குடன் வார்விக்ஷயர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் டேவிஸ், ராபர்ட் யேட்ஸ் ஆடினர்.

    நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.

    முதல் பந்தில் அலெக்ஸ் டேவிஸ் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    2-வது பந்தில் கிறிஸ் பெஞ்சமின் கிளின் போல்டுஆனார்.

    3-வது பந்தில் டான் மவுஸ்ஸி ஒரு ரன் எடுத்தார்.

    4-வது பந்தில் யேட்ஸ் ஒரு ரன் எடுத்தார்.

    5-வது பந்தில் டான் மவுஸ்ஸி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    6-வது பந்தில் எட் பர்னார்ட் போல்டானார்.

    இதன்மூலம் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், ஷாஷின் அப்ரிடி 4 ஓவர்களில் 29 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு மெய்டன் ஓவரையும் வீசி அசத்தி இருந்தார். ஆட்ட நாயகன் விருது ஷாஹின் அப்ரிடிக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வார்விக் ஷையர் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 279 ரன்கள் எடுத்தது.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ஸ்மித் சதமடித்தார். ஹெட், வார்னர் அரை சதமடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன், ஜோஷ் டங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 98 ரன்னும், ஹாரி புரூக் 50 ரன்னு எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. உஸ்மான் கவாஜா அரை சதமடித்து 77 ரன்னில் அவுட்டானார். இறுதியில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 279 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்தின் பிராட் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் 45 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    5-வது விக்கெட்டுக்கு பென் டக்கெட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து 114 ரன்கள் எடுத்துள்ளது. டக்கெட் 50 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 29 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    கடைசி நாளான இன்று இங்கிலாந்து 257 ரன் எடுத்து வெற்றி பெறுமா அல்லது ஆஸ்திரேலியா விரைவில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது டெஸ்டையும் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • ஆஸ்திரேலிய அணியின் கவாஜா 2-வது இன்னிங்சில் 77 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 100.4 ஓவர்களில் 416 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆலி ராபின்சன், ஜோஷ் டங்கு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் டக்கட் 98 ரன்னும், ஹாரி புரூக் 50 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

    4-வது நாளான இன்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கவாஜா 77 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் சேர்த்தது.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், ஹாரி புருக் 45 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னிலும் 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஹாரி புரூக் அரை சதம் அடித்து வெளியேறினார். பேர்ஸ்டோவ் 16, பிராட் 12, ராபின்சன் 9, ஜோஷ் டங் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். லாபுசேன் 30 ரன்னில் வெளியேறினார். உஸ்மான் கவாஜா அரை சதமடித்தார்.

    மழை குறுக்கிட்டதால் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 58 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதனால் ஆஸ்திரேலியா 221 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 85 ரன்னும், அலெக்ஸ் கேரி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிராவிஸ் ஹெட் 77 ரன்னில் அவுட்டானார். டேவிட் வார்னர் அரை சதம் கடந்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார். லாபுசேன் 47 ரன்னில் வெளியேறினார்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் சதமடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 110 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது. கிராலே 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒல்லி போப் 42 ரன்னில் வெளியேறினார்.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பென் டக்கெட் 98 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 10 ரன்னில் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி புருக் 45 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 110 ரன்கள் விளாசினார்.
    • இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    லண்டன்:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.

    ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லபுஷேன் 47 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் ஜோடி அபாரமான ஆடி ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 110 ரன்களில் வெளியேறினார். அதன்பின், டிராவிஸ் ஹெட் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2ம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

    • கடுமையான உடல் உபாதைகளுக்கு மத்தியில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
    • பற்கள் இல்லாத நிலைமையை ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் வருவது இயற்கை. பிரசவம் முடிந்ததும் இந்த அறிகுறிகள் நின்று விடும்.

    ஆனால் அரிதான ஒரு நிகழ்வாக, பிரிட்டனில் ஒரு பெண் கர்ப்பகாலத்தின்போது கடுமையாக வாந்தியெடுத்ததால் பற்கள் அனைத்தையும் அகற்ற வேண்டிய நிலைக்கு சென்றுள்ளார்.

    கூப்பர் என்பவரின் மனைவி(26), 2017 வருடம் பிரான்சில் உள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் செவிலித்தாயாக பணிபுரிந்தபோது கர்ப்பமானார். பிறகு ஒரு வாரத்திற்குள் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கர்ப்ப காலத்திலேயே அவர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்ப வேண்டியிருந்தது.

    அங்கு அவருக்கு, "ஹைபர்யெமெசிஸ் கிராவிடரம்" (Hyperemesis Gravidarum) என்ற அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஹெச்.ஜி. நோயானது 1% பெண்களை மட்டுமே பாதிக்கின்ற ஒரு அரிய மற்றும் தீவிரமான கர்ப்பகால நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடிக்கடி வாந்தி எடுப்பார்கள்.

    இந்த நோயின் தாக்கம் காரணமாக அவரது பற்கள் விழ ஆரம்பித்தன. அவர் கடுமையாக வாந்தி எடுத்தார். இந்த கடுமையான உடல் உபாதைகளுக்கு மத்தியில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

    பிரசவம் முடிந்ததும் அவருடைய வாந்தியெடுத்தல் மற்றும் குமட்டல் அறிகுறிகள் நின்றுவிட்டன. ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு, வாந்தியின் அமிலத்தன்மையால் சேதமடைந்த பற்கள் அனைத்தையும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    சில வருடங்களுக்கு பிறகு அவர் மேலும் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அந்த 2 முறையும் எச்.ஜி. (HG) நோய் பாதிப்பு இருந்திருக்கிறது.

    இந்த நோய் மற்றும் நோயின் பாதிப்பிலிருந்து மீண்டது, உணவு முறை, மற்றும் தற்போதைய முக தோற்றம் குறித்து அவர் கூறியதாவது:

    இந்த நிகழ்வு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. எனது மோசமான எதிரிக்கு கூட இந்நிலை வர நான் விரும்பமாட்டேன். இறப்பது போல் ஒரு உணர்வு வருவதால், பலர் இதனை புற்றுநோய் சிகிச்சைக்காக கொடுக்கப்படும் கீமோதெரபியின் பக்க விளைவுகளுடன் ஒப்பிடுகிறார்கள். இது ஒரு விரும்பத்தகாத நிலை. இது உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை சோர்வடைய செய்கிறது.

    இப்போது என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. இயல்பு நிலைக்கு திரும்பி விட்டேன். வாழ்க்கை மிகவும் நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஹெச்.ஜி. வந்து 9 மாதங்கள் படுக்கையில் இருக்கும்போது மிகுந்த வேதனை அடைந்தேன். நான் இப்போது பற்கள் இல்லாத நிலைமையை ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட்டேன்.

    எனது உணவுப்பழக்கம் முன்பு போல் இல்லை. ஏனெனில் அது இந்நோயினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நான் இறைச்சியை அதிகம் உண்பதில்லை. முக்கியமாக நான் காய்கறிகளை சாப்பிடுவதை கடைபிடிக்கிறேன். எனக்கு இப்போது செயற்கை பற்கள்தான் உள்ளன. ஆனால், அவை முக அழகுக்காக அணிய வேண்டியவையே தவிர மிக வசதியானவை என்று கூற முடியாது. அதனால் நான் இப்போது பற்கள் இல்லாமல் சகஜமாக வீட்டை விட்டு வெளியேற பழகிக் கொண்டு விட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    ×