search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    புற்றுநோய் கண்டறிந்த பிறகு முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் தோன்றிய கேட் மிடில்டன்
    X

    புற்றுநோய் கண்டறிந்த பிறகு முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் தோன்றிய கேட் மிடில்டன்

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு பொது வெளியில் தோன்றாமல் இருந்தார்.
    • பின்னர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன். வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

    கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு கேட் மிடில்டனை பொது வெளியில் காண முடியவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுந்த நிலையில், கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியானது.

    புற்றுநோய் குணமாக கேட் மிடில்டன் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியுலகில் தோன்றாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்றுதான் பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்றார்.

    மன்னர் சார்லஸின் பிறந்த நாளை முன்னிட்டு லண்டனில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். இதன்மூலம் சுமார் ஆறு மாதத்திற்கு பிறகு பொது வெளியில் கேட் மிடில்டன் காணப்பட்டார்.

    கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட அதேவேளையில் மன்னர் சார்லஸ்க்கும் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டதால், சிசிக்சை மேற்கொண்டு சில வாரங்களிலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    கேட் மிடில்டன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடைந்ததாக தெரிவித்தார்.

    Next Story
    ×