search icon
என் மலர்tooltip icon

    மேற்கிந்தியத் தீவு

    • டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்துள்ளன.
    • முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

    முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதியில் வென்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியதாவது:

    கடந்த காலங்களில் மிக முக்கியமான போட்டிகளில் நெருங்கி வந்து தோற்றுள்ளோம். தற்போதைய அணி அப்படி தோற்கவில்லை. இந்த அணி வித்தியாசமான அணி.

    நாங்கள் இந்தத் தொடரில் எல்லைகளை தாண்டி இருக்கிறோம். நாங்கள் சரிசெய்த விஷயங்கள் குறித்து யோசிக்கிறோம். இது ஒரு உலகக் கோப்பையின் அரையிறுதி. அதை நாங்கள் பாராட்டுகிறோம், அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

    அதிர்ஷ்டத்தால் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. சில விஷயங்கள் உங்கள் வழியில் செல்லக்கூடும் என்று நான் நினைக்கிறேன். திறமை எப்போதும் அதிர்ஷ்டத்தை வெல்லும், அது நிச்சயம்.

    நவீன கிரிக்கெட்டில் அணிகளைப் படிப்பது கடினம் அல்ல. ஏராளமான தொழில்நுட்பம் அதன் வசம் உள்ளது. அவர்களின் பல வீரர்கள் உலகெங்கிலும் உள்ள பல லீக் போட்டிகளில் விளையாடுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் வந்துள்ளது கிரிக்கெட் விளையாட்டிற்கு அற்புதமானது. அவர்கள் விளையாடும் விதம் மற்றும் அவர்கள் அதை ஆதரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
    • இதையடுத்து டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்காளதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.

    இதனால் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மோதிய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது.

    இதையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோர் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஐசிசி, அதில் இரு சாம்பியன்கள் என பதிவிட்டுள்ளது.

    ஐ.சி.சி. வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் விராட் கோலி ஓய்வு பெறுகிறார் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இந்தப் பதிவின் மூலம் ஏற்கனவே ஓய்வை அறிவித்த வார்னருடன், விராட் கோலியும் ஓய்வை அறிவிக்க வேண்டும் என ஐசிசி வலியுறுத்துகிறதா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
    • இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அசாதாரண திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் பால் காலிங்வுட் தெரிவித்தார். இதுதொடர்பாக காலிங்வுட் கூறியதாவது:

    இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் பும்ரா முழுமையான ஃபார்மில் உள்ளார்.

    வேகம், துல்லியம் மற்றும் உயர்மட்ட செயல்திறனை பும்ரா வெளிப்படுத்தி வருகிறார். எந்த அணியும் அவரது செயல்பாட்டுக்கு விடைதர முடியாத வகையில் விளையாடி வருகிறார்.

    இன்னிங்சில் 120 பந்துகள் மட்டுமே கொண்ட போட்டியில் பும்ரா மாதிரியான வீரர்கள் வீசும் அந்த 24 பந்துகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்துகின்றன.

    சவாலான, கடினமான அமெரிக்க ஆடுகளத்தில் இந்திய அணி நன்றாக விளையாடியதைப் பார்க்க முடிந்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி கேப்டன் ரோகித் சர்மா தனது திறமையை நிரூபித்துள்ளார்.

    இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த முறை இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அணி அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    கடந்த 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
    • நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.

    கிங்ஸ்டவுன்:

    கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

    இந்தப் போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.

    இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 150 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் படைத்துள்ளார்.

    ரஷித் கான் இதுவரை 92 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    150 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதலிடத்தில் உள்ளார்.

    வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
    • முதல் அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதி சுற்றுகள் நாளை தொடங்குகின்றன.

    குரூப் 1 பிரிவில் முதல் இரு இடங்கள் பிடித்த இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் குரூப் 2 பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தரூபா பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில், தான் ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

    பேட்டிங்கில் டி காக் 199 ரன்கள், டேவிட் மில்லர் 148 ரன்கள், கிளாசென் 138 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 134 ரன்கள் அடித்துள்ளனர்.

    பந்துவீச்சில் அன்ரிச் நார்ஜே 11 மற்றும் ரபாடா 10 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். கேசவ் மகராஜ் 9, ஷம்சி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி வரை முன்னேறும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த முறை இறுதிப்போட்டிக்கு சென்று சாதித்துக் காட்டவேண்டும் என்ற எழுச்சியுடன் உள்ளது.

    இதேபோல், ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை வலுவான அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் உகாண்டா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தையும் வீழ்த்தி உள்ளது.

    ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது.

    பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 281 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சட்ரான் 229 ரன் அடித்து 3-வது இடத்தில் உள்ளர்.

    பவுலிங்கில் ஃபசல்ஹக் பரூக்கி 7 போட்டியில் 16 விக்கெட் வீ்ழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார். கேப்டன் ரஷித் கான் 14 விக்கெட் எடுத்ததுடன், கடைசி கட்டங்களில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்கிறார். நவீன் உல் ஹக் 13 விக்கெட் எடுத்துள்ளார்.

    எனவே இம்முறை ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
    • நாளை நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.

    செயின்ட் வின்சென்ட்:

    செயின்ட் வின்சென்ட் நகரில் நடந்த சூப்பர் 8 போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா 205 ரன்களைக் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் எடுத்தார்.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு நிகராக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர், டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், தான் விக்கெட்டுகள் வீழ்த்தியது குறித்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:

    அனைத்து பாராட்டுகளும் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு செல்லவேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் பேட்ஸ்மேன்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை போடுகிறார்.

    அவர் தன்னுடைய ஓவரில் 3 அல்லது 4 ரன்கள் மட்டுமே கொடுக்கிறார். எனவே எதிரணி பேட்ஸ்மேன்கள் என்னுடைய ஓவரில் ரன்கள் அடிக்க வருகிறார்கள். அப்போது நான் என்னுடைய சிறந்த பந்தை வீச முயற்சிக்கிறேன். அதனால் எனக்கு விக்கெட் விழுவதற்கான வாய்ப்பு நிறைய கிடைக்கிறது.

    ஏனெனில் எதிர்ப்புறம் ரன்கள் வருவதில்லை. அதனால் ரன் ரேட் அதிகமாக உயர்கிறது. எனவே எதிரணியினர் எனக்கு எதிராக அதிக ரிஸ்க் எடுத்து விளையாட முயற்சிக்கின்றனர். அதனால் எனக்கு அங்கே விக்கெட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. எனவே நான் எடுத்துள்ள விக்கெட்டுகளுக்கான அனைத்து பாராட்டுக்களும் பும்ராவை சேரும் என தெரிவித்தார்.

    • நடப்பு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் குர்பாஸ் முதலிடத்தில் உள்ளார்.
    • அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பசுல்லா பரூக்கி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் 7 போட்டிகளில் 281 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த அணியின் பரூக்கு 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    மேலும் முன்னணி அணியான நியூசிலாந்தை லீக் சுற்றிலும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி அசத்தியுள்ளது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் வீடியோ காலில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் இந்த வெற்றி வங்காளதேச மக்களின் இதயத்தை மட்டுமின்றி, ஆஸ்திரேலியா ரசிகர்களின் இதயத்தையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.

    டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக முன்னேறியதை அந்த நாட்டு மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

    அத்துடன் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷித் கான் நிகழ்த்தி உள்ளார்.

    ரஷித் கான் இதுவரை 9 முறை 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்தப் பட்டியலில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 8 முறையும், உகாண்டா வீரர் ஹென்றி சென்யாண்டோ 7 முறையும் வீழ்த்தியுள்ளனர்.

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்.

    மழையை நம்பாமல் 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணியில் சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பவுலிங்கில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் திறமை இருந்தால் சாதிக்க முடியும். மனதளவில் நாங்கள் தயாராகவே இருந்தோம்.

    இந்த வெற்றி எங்கள் நாட்டில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உண்டாக்கும். தற்போது அரையிறுதியில் தெளிவான மனதுடன் விளையாடுவோம் என தெரிவித்தார்.

    • முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    செயின்ட் லூசியா:

    செயின்ட் லூசியாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து 92 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் 31 ரன், ஷிவம் துபே 28 ரன், பாண்ட்யா 27 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 50 போட்டிகளில் 34-ல் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவை உள்ளன.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அமெரிக்கா 115 ரன்களில் சுருண்டது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் பார்படாசில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்த் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 18.5 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் குமார் 30 ரன்னும், கோரி ஆண்டர்சன் 29 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் கிறிஸ் ஜோர்டான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 127 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்ரேலியாவை ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 127 ரன்களில் ஆல் அவுட்டாக்கினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். குல்பதின் நைப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷித் கான் கூறியதாவது:

    இன்று என்னால் நன்றாக தூங்கமுடியும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் மும்பையில் நான் தூங்கவில்லை. மேக்ஸ்வெல் தனி ஆளாக அப்படிப்பட்ட உணர்வை எனக்கு தந்துவிட்டார். ஆனால் இன்று நாங்கள் அதற்கு வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது என்னால் மகிழ்ச்சியால் தூங்கமுடியாது என நினைக்கிறேன்.

    இது உலகக் கோப்பை தொடர். 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு எதிரான வெற்றி இது. இப்படிப்பட்ட அணியை நீங்கள் தோற்கடித்தால் அது உங்களுக்கு எப்போதும் பெரிய ஆற்றலை தருகிறது. மேலும் அது உங்களை தூங்க விடாது.

    எங்களுடைய நாட்டுக்கும், அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. எங்கள் வீரர்களால் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய நாட்டில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள் என தெரிவித்தார்.

    ×