search icon
என் மலர்tooltip icon

    T20 உலகக் கோப்பை திருவிழா 2024

    • நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம்.
    • முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.

    பிரிஜ்டவுன்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப்2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் இந்திய அணி சூப்பர்8 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் எனது இலக்கு பும்ரா மட்டும் அல்ல, இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவருமே என ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரர் குர்பாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையாக, எனது இலக்கு ஜஸ்பிரித் பும்ரா மட்டும் அல்ல. நான் அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களையும் அடிக்க பார்க்கிறேன். பொதுவாக ஐந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். அவர்களை நான் சமாளிக்க வேண்டும். இது பும்ராவுக்கு எதிரான ஒரு போர். ஒருவேளை மற்றொரு பந்துவீச்சாளர் என்னை வெளியேற்றலாம். ஆனால், எனக்கு அவரை (பும்ரா) அடிக்க வாய்ப்பு கிடைத்தால் அடிப்பேன். அது பும்ராவாகவோ, அர்ஷ்தீப்பாகவோ அல்லது சிராஜாகவோ இருக்கலாம். எனது ஏரியாவில் பந்து வீசினால் நான் அவர்களை அடிப்பேன் அல்லது நான் ஆட்டமிழந்து வெளியேறுவேன்.

    நாங்கள் இதற்கு முன்பு உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. முன்பு, உலகக் கோப்பையில் எப்படியாவது பங்கேற்பதாக எங்கள் மனநிலை இருந்தது. ஆனால் இப்போது எங்கள் மனநிலை சாம்பியன் ஆக வேண்டும் என்பது மட்டுமே. கோப்பையை வெல்வதில் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை.

    நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம். முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு குர்பாஸ் கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சால்ட் 87 ரன்கள் குவித்தார்.
    • இதன்மூலம் இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை சால்ட் தட்டிச் சென்றார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.

    இதனையடுத்து இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட்டின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 47 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இதன் மூலம் பில் சால்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பில் சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    அந்த பட்டியல்:-

    இங்கிலாந்து எதிராக வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகளில் அதிக ரன்கள்:-

    478 - பில் சால்ட் (9 இன்னிங்ஸ்)

    423 - அலெக்ஸ் ஹேல்ஸ் (13 இன்னிங்ஸ்)

    422 - கிறிஸ் கெய்ல் (14 இன்னிங்ஸ்)

    420 - நிக்கோலஸ் பூரன் (15 இன்னிங்ஸ்)

    390 - ஜோஸ் பட்லர் (16 இன்னிங்ஸ்)

    இதை தவிர ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    எதிரணிக்கு எதிராக இங்கிலாந்து அடித்த அதிக சிக்ஸர்கள் (டி20)

    32 - பில் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ்

    26 - இயன் மார்கன் எதிராக நியூசிலாந்து

    25 - ஜோஸ் பட்லர் எதிராக ஆஸ்திரேலியா

    24 - ஜோஸ் பட்லர் எதிராக தென் ஆப்பிரிக்கா

    இதேபோல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் சால்ட் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 4-வது இடத்தில் உள்ளார்.

    டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக தனிநபர் ஸ்கோர்கள்:-

    116* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இலங்கை, சட்டோகிராம், 2014

    101* - ஜோஸ் பட்லர் எதிராக இலங்கை, ஷார்ஜா, 2021

    99* - லூக் ரைட் எதிராக ஆப்கானிஸ்தான், கொழும்பு 2012

    87* - பிலிப் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ், க்ரோஸ் ஐலெட், 2024

    86* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இந்தியா, அடிலெய்டு, 2022

    • நிக்கோலஸ் பூரன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • பில் சால்ட் 87 ரன்களை விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

    இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 குவித்தது.

    பிறகு 20 ஓவர்களில் 181 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    அதன்படி, இன்று வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

    பின்னர் களமிறங்கிய பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்து தங்களது பங்களிப்பை அளித்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ரூதர்போர்டு சில பவுண்டரிகள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    • அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
    • தென் ஆப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக விளையாடி 40 பந்தில் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. கிளாசன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, அமெரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டெய்லர் - ஆண்ட்ரிஸ் கௌஸ் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி டெய்லர் 24 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஸ் குமார் 8, ஜோன்ஸ் 0, ஆண்டர்சன் 12, ஷயான் ஜஹாங்கீர் 3 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    இந்நிலையில் ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஹர்மீத் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் அரை சதம் விளாசினார்.

    அதிரடியாக விளையாடி ஹர்மீத் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த போது இவர் தான் நடுவராக இருந்தார்.
    • இவர் நடுவராக செயல்பட்ட 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்று வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் இதற்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எமனாக கருதபடும் ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இடம் பிடித்தது மட்டுமல்லாமல் இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டிக்கு இவர் நடுவராக செயல்பட உள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏனென்றால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்த அத்தனை போட்டிகளிலும் ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக செயல்பட்டுள்ளார். இவர் நடுவராக இருந்த 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதேபோல் 2015 உலக்கோப்பை அரையிறுதியில் இந்தியா அடைந்த தோல்வி, 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

    அதேபோல் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் டோனி ரன் அவுட்டான போது, நடுவராக இருந்து கெட்டிபரோ கொடுத்த ரியாக்ஷன் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும். அதேபோல் 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் கெட்டில்பரோ.

    இதை தவிர ஒருநாள் உலகக் கோப்பை இறுதி போட்டியிலும் இவர் தான் நடுவராக செயல்பட்டார். இதிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் என்ன நடக்கும் என ரசிகர்கள் பீதியுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    சூப்பர் 8 சுற்றுக்கான நடுவர்கள் விவரங்களையும் எந்தெந்த போட்டிக்கு யார் நடுவர் என்பதையும் ஐ.சி.சி அறிவித்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 ஆட்டங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சூப்பர் 8 சுற்றுக்கான நடுவர்கள் விவரம்:-

    1.) அமெரிக்கா - தென் ஆப்பிரிக்கா (ஆண்டிகுவா)

    நடுவர்: ரஞ்சன் மதுகல்லே

    கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ

    டிவி நடுவர்: ஜோயல் வில்சன்

    நான்காவது நடுவர்: லாங்டன் ருசரே

    2.) இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் (செயிண்ட் லூசியா)

    நடுவர்: ஜெப் குரோவ்

    கள நடுவர்கள்: நிதின் மேனன் மற்றும் அஹ்சன் ராசா

    டிவி நடுவர்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்

    நான்காவது நடுவர்: கிறிஸ் பிரவுன்

    3.) ஆப்கானிஸ்தான் - இந்தியா (பார்படாஸ்)

    நடுவர்: டேவிட் பூன்

    கள நடுவர்கள்: ரோட்னி டக்கர் மற்றும் பால் ரீபெல்

    டிவி நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர்

    நான்காவது நடுவர்: அலெக்ஸ் வார்ப்

    4.) ஆஸ்திரேலியா - வங்காளதேசம் (ஆண்டிகுவா)

    நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

    கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கேல் கோப்

    டிவி நடுவர்: குமார் தர்மசேன

    நான்காவது நடுவர்: அட்ரியன் ஹோல்ஸ்டாக்

    5.) இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா (செயிண்ட் லூசியா)

    நடுவர்: ஜெப் குரோவ்

    கள நடுவர்கள்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித் மற்றும் கிறிஸ் பிரவுன்

    டிவி நடுவர்: ஜோயல் வில்சன்

    நான்காவது நடுவர்: கிறிஸ் கேப்னி

    6.) அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் (பார்படாஸ்)

    நடுவர்: டேவிட் பூன்

    கள நடுவர்கள்: பால் ரீபெல் மற்றும் அல்லாஹுதீன் பலேக்கர்

    டிவி நடுவர்: ரோட்னி டக்கர்

    நான்காவது நடுவர்: அலெக்ஸ் வார்ப்

    7.) இந்தியா - வங்காளதேசம் (ஆண்டிகுவா)

    நடுவர்: ரஞ்சன் மதுகல்லே

    கள நடுவர்கள்: மைக்கேல் கோப் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்

    டிவி நடுவர்: லாங்டன் ருசரே

    நான்காவது நடுவர்: ரிச்சர்ட் கெட்டில்பரோ

    8.) ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (செயிண்ட் வின்செண்ட்)

    நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

    கள நடுவர்கள்: குமார் தர்மசேனா மற்றும் அஹ்சன் ராசா

    டிவி நடுவர்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

    நான்காவது நடுவர்: நிதின் மேனன்

    9.) அமெரிக்கா - இங்கிலாந்து (பார்படாஸ்)

    நடுவர்: டேவிட் பூன்

    கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி மற்றும் ஜோயல் வில்சன்

    டிவி நடுவர்: பால் ரீபெல்

    நான்காவது நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர்

    10.) வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா (ஆண்டிகுவா)

    நடுவர்: ரஞ்சன் மதுகல்லே

    கள நடுவர்கள்: ரோட்னி டக்கர் மற்றும் அலெக்ஸ் வார்ப்

    டிவி நடுவர்: கிறிஸ் பிரவுன்

    நான்காவது நடுவர்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்

    11.) இந்தியா - ஆஸ்திரேலியா (செயிண்ட் லூசியா)

    நடுவர்: ஜெப் குரோவ்

    கள நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

    டிவி நடுவர்: மைக்கேல் கோப்

    நான்காவது நடுவர்: குமார் தர்மசேனா

    12.) ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் (செயிண்ட் வின்செண்ட்)

    நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

    கள நடுவர்கள்: லாங்டன் ருசேரே மற்றும் நிதின் மேனன்

    டிவி நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்

    நான்காவது நடுவர்: அஹ்சன் ராசா.

    • 2-வது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த வனிந்து ஹசரங்கா 2-வது இடத்தில் உள்ளார்.
    • வங்காளதேச வீரர் சகிப் அல் ஹசன் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்டோய்னிஸ் பேட்டிங்கில் 156 ரன்களும் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதனால் ஐசிசி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    2-வது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த வனிந்து ஹசரங்கா 2-வது இடத்தில் உள்ளார். வங்காளதேச வீரர் சகிப் அல் ஹசன் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி 3 இடங்கள் பின் தங்கி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    டாப் 10-ல் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார்.


    இந்த பட்டியலில் நேபாள் வீரர் சிங் ஐரீ 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். மேலும் இந்திய ஆல் ரவுண்டரான அக்சர் படேல் மற்றும் மேக்ஸ்வெல் 18-வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.

    • சூப்பர்-8 சுற்று இன்று தொடங்குகிறது.
    • விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    பிரிட்ஜ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    குரூப் -1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான், வங்காள தேசமும், குரூப் 2 பிரிவில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கவும் இடம் பெற்றுள்ளன.

    சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு நடை பெறும் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரை இறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். இதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முன்னேற இந்திய அணி முயற்சிக்கும்.

    அமெரிக்க ஆடுகளங்கள் பந்துவீச்சுக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது சவாலாக இருந்தது. இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் வெஸ்ட் இண்டீசில் தான் நடக்கிறது. இங்குள்ள 'பிட்ச்கள்' சமமானதாக இருக்கும்.

    இந்திய அணி லீக் சுற்றில் அயர்லாந்து (8 விக்கெட்), பாகிஸ்தான் (6 ரன்), அமெரிக்கா (7 விக்கெட்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. கனடாவுடன் மோத வேண்டிய ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப் பட்டது. தோல்வியை சந்திக்காத இந்திய அணி நம்பிக்கையுடன் ஆப் கானிஸ்தானை சந்திக்கும்.

    'சூப்பர் 8' சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. அதேநேரத்தில் ஆப்கானிஸ் தானை சாதாரணமாக கருதிவிட முடியாது. அந்த அணி இந்த தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதனால் கவனமுடன் விளையாட வேண்டும்.

    கடந்த 2 போட்டியிலும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமான 'சூப்பர் 8' சுற்றில் மாற்றம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான குல்தீப் யாதவ் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வில்லை. அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அக்ஷர் படேல் அல்லது ஜடேஜா கழற்றி விடப்படலாம். முகமது சிராஜ் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். இதனால் அவரது நிலையும் கேள்வி குறியாக இருக்கலாம். அர்ஷ்தீப் சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக உள்ளனர்.

    பேட்டிங்கில் ரிஷப்பண்ட், கேப்டன் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். உலகின் முன்னணி பேட்ஸ்மேனான வீராட் கோலி இந்த தொடரில் ஜொலிக்க வில்லை. 3 ஆட்டத்திலும் சேர்த்து 5 ரன்களே எடுத்தார். ஐ.பி.எல்.

    போட்டியில் அதிரடியாக விளையாடியதால் வாய்ப்பை பெற்றார். தொடக்க வீரரான அவரது வரிசையில் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. வெற்றி அணியே போதுமானது என்று கருத்தினால் மாற்றம் இருக்காது.

    ரஷீத்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி லீக் ஆட்டத்தில் உகாண்டா (125 ரன்), நியூசிலாந்து (84 ரன்) பப்புவா நியுகினியா (7 விக்கெட்) ஆகியவற்றை தோற்கடித்து இருந்தது.

    வெஸ்ட் இண்டீசிடம் (104 ரன்) மட்டும் தோற்றது.

    ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கிறது. ரகுமதுல்லா குர்பாஸ், இப்ராகிம் சர்தான் ஆகியோர் பேட்டிங்கிலும், பரூக்கி, ரஷீத்கான் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    • இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்.
    • பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ரசிகர் ஒருவருடன் பாகிஸ்தான் வீரரான ஹரிஸ் ரவுப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ரசிகரை தாக்க முயல்வது போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில் எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன் என ஹரிஸ் ராஃப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் இப்போது வீடியோ வெளியானதால், நிலைமையை நிவர்த்தி செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். பொது நபர்களாக, பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன். மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் தொழில்களைப் பொருட்படுத்தாமல் மரியாதை காட்டுவது முக்கியம்.

    • பாகிஸ்தானில் உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி.
    • இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள்.

    மும்பை:

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியும் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.

    இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிர்ஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அனைத்து வீரர்களும் பிரிந்து கிடப்பதாக தெரிவித்த அவர் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிர்ஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அங்கே (பாகிஸ்தான்) உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி. இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள். கேரி கிர்ஸ்டன் ஒரு அரிதான வைரம். ஒரு சிறந்த பயிற்சியாளர், வழிகாட்டி, நேர்மையான மற்றும் எங்கள் 2011 அணியில் உள்ள அனைவருக்கும் மிகவும் அன்பான நண்பர். 2011 உலகக் கோப்பையை வென்ற எங்கள் பயிற்சியாளர். சிறப்பு மனிதர் கேரி.

    இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

    2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டன். இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    புளோரிடாவில் உள்ள ஒரு நகரத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் தனது மனைவியுடன் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒருவர் ஹரிஸ் ராஃப்பை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோபமடைந்த ராஃப், அந்த நபரை தாக்குவதற்காக செருப்பை கூட கழற்றி விட்டு ஓடினார்.

    இதனை பார்த்த அவரது மனைவி ஹரிசை சமாதானம் படுத்த முயற்சித்தார். ஆனால் ஹரிஸ் அந்த நபரிடம் சென்று வார்த்தை போரில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஹரிஸ், டிரோல் செய்தவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தார். உடனே அந்த நபர் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என பதிலளித்தார்.

    வாக்குவாதம் தொடர்ந்ததால் ரஃப்பின் மனைவி அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஹரிஸ் அந்த நபருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் அதிக ரன்கள் விளாசியுள்ளனர்.
    • 91 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை வெஸ்ட் இண்டீஸ் முறியடித்துள்ளது.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 104 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. முதல் ஆறு ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 92 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் குவித்தது.

    இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது.

    டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணிகள் விவரம்:-

    வெஸ்ட் இண்டீஸ் - 92 ரன் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024)

    நெதர்லாந்து - 91 ரன் (அயர்லாந்துக்கு எதிராக, 2014)

    இங்கிலாந்து - 89 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2016)

    தென் ஆப்பிரிக்கா - 83 ரன் (இங்கிலாந்துக்கு எதிராக, 2016)

    இந்தியா - 82 ரன் (ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021)

    மேலும் இந்த போட்டியில் நிக்கோளஸ் பூரன் மற்றும் சார்லஸ் இணைந்து ஒரு ஓவரில் 36 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். உமர்சாயின் ஓவரில் 10 எக்ஸ்ட்ராக்கள் (5 வைடுகள், ஒரு நோ-பால் மற்றும் நான்கு லெக்-பைகள்) அடங்கும்.

    ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:-

    36 - யுவராஜ் சிங் (இந்தியா) எதிராக ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), டர்பன், 2007

    36 - கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அகிலா தனஞ்சய (இலங்கை), கூலிட்ஜ், 2021

    36 - ரோஹித் சர்மா & ரிங்கு சிங் (இந்தியா) எதிராக கரீம் ஜனத் (ஆப்கானிஸ்தான்), பெங்களூரு, 2024

    36 - திபேந்திர சிங் ஐரி (நெதர்லாந்து) எதிராக கம்ரன் கான் (குவைத்), அல் அமேரத், 2024

    36 - நிக்கோலஸ் பூரன் & ஜான்சன் சார்லஸ் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), செயின்ட் லூசியா, 2024

    ×