search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை மீட்பு"

    • மின்சார ரெயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் வந்தது. அந்த ரெயில் 4-வது நடைமேடையில் நின்றதும் அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.

    அப்போது பெண்கள் பயணம் செய்யும் ரெயில் பெட்டியில் ஒரு கட்டைப்பை கேட்பாரற்று கிடந்தது. சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த கட்டைப்பையில் பார்த்தபோது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பச்சிளம் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர்.

    குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. பெண்கள் பெட்டியில் பயணம் செய்தபோது யாரோ குழந்தையை கட்டைப்பையில் வைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    பெண் குழந்தை என்பதால் அவர் விட்டுச் சென்றாரா? அல்லது அந்த குழந்தை கடத்தி வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தை இருந்த கட்டைப்பையுடன் வந்த பெண் பயணி குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மின்சார ரெயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் நல பிரிவில் அனுமதித்தனர்.

    குழந்தை பிறந்து 10 நாட்களே இருக்கும் என்பதால் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • கணபதி தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஜோகித் சத்திய வெங்கட் ஆகியோருடன் திருப்பதியில் தரிசனம் செய்ய வந்தார்.
    • பஸ் நிலையத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு, சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஜோகித் சத்திய வெங்கட் ஆகியோருடன் திருப்பதியில் தரிசனம் செய்ய வந்தார்.

    நேற்று மாலை தரிசனம் முடித்து திருப்பதிக்கு வந்த கணபதி தம்பதியினர் தூங்கிக்கொண்டு இருந்த தனது குழந்தையை சென்னை பஸ் நிறுத்தம் இடத்தில் விட்டு விட்டு சென்றனர். பெற்றோர் அருகில் இல்லாததை கண்ட குழந்தை அழத்தொடங்கியது. நீண்ட நேரம் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இதனை கண்ட அங்கிருந்த பஸ் டிரைவர்கள் இதுகுறித்து திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    பஸ் நிலையத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையின் பெற்றோர் குழந்தையை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சென்றது பதிவாகி இருந்தது. சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பஸ் நிலையம் அருகே சுற்றிக்கொண்டிருந்த குழந்தையின் பெற்றோரை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

    குழந்தையை எதற்காக பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்றீர்கள், குழந்தையிடம் ஏதாவது குறைபாடு உள்ளதா என போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டில் இருந்து வழி தவறி வெளியே சென்று விட்டான்.
    • குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடி அலைந்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் ‌தாதகாப்பட்டி கேட் சவுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணபதி - கங்கா தம்பதி. இவர்களது ஆண் குழந்தை மாறன் (வயது 3). கணபதி, கங்கா இருவரும் தாதகாப்பட்டி உழவர் சந்தை பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று கணபதி முதலில் கடை திறப்பதற்காக சென்றுவிட்டார்.

    தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டில் இருந்து வழி தவறி வெளியே சென்று விட்டான். கங்கா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவர் குழந்தை வெளியே சென்றதை சரிவர கவனிக்கவில்லை.வழி தவறிய குழந்தை சவுந்தர் நகர் பகுதியில் அழுத படியே சுற்றித் திரிந்தான். அப்பகுதியைச் சேர்ந்த யாருக்கும் குழந்தையை அடையாளம் தெரியவில்லை. இதனிடையே குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடி அலைந்தனர்.

    தாதகாப்பட்டி கேட் உழவர் சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி அங்கு அழுதபடி நின்ற குழந்தையிடம் சென்று பேச்சு கொடுத்தார். இதையடுத்து அருகில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்ததில் காய்கறி வியாபாரிகள் கணபதி - கங்கா ஆகியோரின் ‌ குழந்தை தான் என்பதை உறுதி செய்து கொண்டார்.பின்னர் குழந்தையை அங்கிருந்து உடனடியாக மீட்டு அவனது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் இந்த துரித செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • குழந்தையை கடத்திய நபர் யார்? எதற்காக கடத்தினார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அலிமூப்பன் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி நாகூர் மீராள். இவர்களுக்கு நஜிலா பாத்திமா(வயது 3) என்ற பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சாகுல் அமீது தனது குடும்பத்துடன் சென்றார்.

    அங்கு இரவில் கணவன்-மனைவி 2 பேரும் குழந்தையுடன் பள்ளிவாசலில் தூங்கினர். நள்ளிரவில் அங்கு வந்த ஒரு மர்ம நபர் குழந்தையை நைசாக கடத்தி சென்றார்.

    இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை தேடி வந்தார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஆத்தங்கரை பள்ளி வாசல் மற்றும் அதனை சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகள், கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.

    அப்போது அதில் ஆண் ஒருவர் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கடத்தி செல்வதும், சிறிது தூரம் நடந்து சென்ற பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏறி அந்த நபர் தப்பித்து செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அந்த காரை அடையாளப்படுத்தி தூத்துக்குடி, குமரி மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சாலைகளில் போலீசார் அதிரடி வாகன சோதனையும் செய்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை திருச்செந்தூர்-கரம்பைவிளை சாலையில் 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து திருச்செந்தூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த குழந்தை ஆத்தங்கரை பள்ளிவாசலில் மர்ம நபரால் கடத்தப்பட்ட நஜிலா பாத்திமா என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே கடத்தல் கும்பலை தேடி கூடங்குளம் போலீசாரும் அந்த இடத்துக்கு வந்தனர். அதனை தொடர்ந்து போலீசார் குழந்தையின் பெற்றோரை அழைத்து திருச்செந்தூரில் சென்று குழந்தையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். அதன்படி இன்று காலை குழந்தை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே குழந்தையை கடத்திய நபர் யார்? எதற்காக கடத்தினார்? போலீசார் பின்தொடர்வதை அறிந்து அந்த நபர் குழந்தையை விட்டு சென்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரியானா மாநிலத்தின் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளனர். #18monthboy #60feetdeepborewell #Haryanaborewell #boyrescued
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமன்ட் கிராமத்தில் மூடாமல் விடப்பட்ட 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை குழாய்க்குள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது.

    தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆழ்துளை குழாய்க்கு அருகாமையில் புதிதாக குழிவெட்டி அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக இருநாட்களாக முயன்று வந்தனர்.

    சுமார் 36 மணிநேர போராட்டத்தின் பலனாக அந்த குழந்தை இன்று மாலை உயிருடன் வெளியே எடுக்கப்பட்டது. தயாராக காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தக் குழந்தை அபாயகட்டத்தை கடந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #18monthboy #60feetdeepborewell #Haryanaborewell #boyrescued 
    தென் ஆப்பிரிக்காவில் மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்புக்குழுவினர் தீவிர முயற்சி செய்து பாதுகாப்பாக மீட்டனர். #AfricaBabyRescued
    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், சாலையோரம் குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டடுள்ளது. இதனையடுத்து அவ்வழியே நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவர் கேட்டதும், சுற்றியும் தேடியுள்ளர். தொடர்ந்து சத்தம் கேட்கவே அருகில் இருந்த மழைநீர் வடிகாலுக்கு அருகில் சென்று பார்த்துள்ளார்.

    அப்போது ஆழத்தில் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததை உணர்ந்தார். உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    சுத்தி மற்றும் உளி கொண்டு குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிகாலை மெதுவாக தோண்டினர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.  மீட்கப்பட்ட குழந்தை டர்பனில் உள்ள இன்கோசி ஆல்பர்ட் லுத்துளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.



    அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறும்போது, குழந்தையின் உடலில் லேசான காயங்கள் மற்றும் வெட்டுகள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தையின் பெற்றோரை கண்டறிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  #AfricaBabyRescued
    ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 35 மணி நேரம் சிக்கி தவித்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. #RussiaGasExplosion
    மாஸ்கோ:

    ரஷியாவில் மேக்னி டோகோர்ஸ் நகரில் உள்ள 10 மாடி குடியிருப்பு இடிந்தது. அதில் இருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் இந்த விபத்து நிகழ்ந்தது.

    அதில் 48 வீடுகள் சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இன்னும் 36 பேரை காணவில்லை. காயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மீட்கப்பட்ட உடல்கள் போர்வையில் சுற்றி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். மேக்னி டோகோர்ஸ்க் நகரில் தற்போது மைனஸ் 17 டிகிரி குளிர் நிலவுகிறது. அதை பொருட்படுத்தால் குழுவினர் இடிபாடுகளை அகற்றி கொண்டிருந்தனர்.

    அப்போது இடிபாடுகளுக்கு இடையே குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதன் பின்னர்தான் 11 மாத ஆண் குழந்தை உயிருடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தலையில் பலத்த காயம் இருந்தது. குழந்தையை மீட்ட குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.


    விபத்து நடந்து 35 மணி நேரத்துக்கு பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. குழந்தையின் உடலை படுக்கை சுற்றியிருந்ததால் உயிர் பிழைத்துள்ளது.

    இதை அறிந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இடிந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கூடினர். 35 மணி நேரமாக கடுங்குளிரில் தவித்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையை ஆவலுடன் பார்த்தனர். பின்னர் அக்குழந்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த குழந்தையின் தாய் விபத்தில் இருந்து தப்பினார். அவர் உயிருடன் இருக்கிறார். குழந்தை மீட்கப்பட்டதை அறிந்த அவர் ஆவலுடன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். #RussiaGasExplosion
    வளசரவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பராமரிப்புக்கு மாதந்தோறும் தமிழக அரசு ரூ.2,165 வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #RescueChild
    சென்னை:

    வளசரவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர் பராமரிப்பில் இருந்து வந்தது.

    சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவுப்படி அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வழங்கப்பட்டது. இப்போது அந்த குழந்தை சீராக உடல் ஆரோக்கியமாக உள்ளது.

    இந்த குழந்தையை தொடர் பாதுகாப்புக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கும் விதமாக அமைச்சர் சரோஜாவிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த குழந்தை காருண்யா தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் வழங்கப்படுவதுடன் குழந்தை பராமரிப்புக்காக மாதந்தோறும் தமிழக அரசு ரூ.2,165 வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #RescueChild

    ×