search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரசேகர ராவ்"

    • கொண்டா சுரேகாவை கண்டித்த நடிகை சமந்தா அரசியலுக்காக என் பெயரை இழுக்க வேண்டாம் என கூறினார்.
    • கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்கு தொடர்வதாக கூறினார்.

    கொண்டா சுரேகாவை கண்டித்த நடிகை சமந்தா அரசியலுக்காக என் பெயரை இழுக்க வேண்டாம் என கூறினார். மேலும் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நானி, நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே மந்திரி சுரேகா தெரிவித்த கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். 24 மணி நேரத்திற்குள் பெண் மந்திரி மன்னிப்பு கேட்க தவறினால் அவதூறு வழக்கு மற்றும் தொடர்புடைய கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தொடங்குவேன் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

    இருப்பினும், சமந்தாவிடம் மன்னிப்பு கோரிய சுரேகா, கே.டி.ராமராவ் மீதான தனது விமர்சனத்தை திரும்பபெற மாட்டேன் என்றும் மன்னிப்பு கோர முடியாது என்றும் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், சந்திரசேகர ராவ் எங்கே என வினவியுள்ள சுரேகா, பொது வெளியில் சந்திரசேகர ராவ் காணாமல் போனதற்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என்று கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சந்திரசேகர ராவ் போட்டியிட்டு வெற்றி பெற்ற கஜ்வேலி தொகுதிக்கு சென்ற சுரேகா கட்சி நிர்வாகிகளிடம், சந்திரசேகர ராவ் காணாமல் போனதாக வழக்கு கொடுக்குமாறு கூறியுள்ளார்.

    கே.சி.ஆர். மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர் பொதுவெளியில் வராததற்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என் கொண்டா சுரேகா பேசி உள்ளார்.

    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
    • ஒரு பொது பிரச்சனையும் இருந்தால் அவர்கள் அந்த விஷயத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஜக்கா ரெட்டி ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர். எந்த ஒரு பொது பிரச்சனையும் இருந்தால் அவர்கள் அந்த விஷயத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.

    அதனை மீறி தெலுங்கானா முதல் மந்திரியை விமர்சித்தால் காங்கிரஸ் கட்சியினர் அவர்களை பிடித்து நாக்கை அறுப்பார்கள்.

    அது பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே. டி.ராமராவ் அல்லது அவருடைய தந்தை முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவாக இருந்தாலும் அவர்களின் நாக்கும் அறுந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூத்த காங்கிரஸ் தலைவரின் இந்த மிரட்டல் பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன.இதற்கு பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கு போட்டியாக ரேவேந்த்ரெட்டியின் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழகத்தில் தி.மு.க. ஆழமான கட்டமைப்பை பெற்றுள்ளது.
    • சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்திப்பதால் அவருடைய கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகிறது.


    தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை பறி கொடுத்தார்.

    அதற்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தார். பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்ட சந்திரசேகரராவ் கட்சிக்கு தொடர்ந்து தெலுங்கானாவில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

    அவருடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆளுங்கட்சியான காங்கிரசில் சேர்ந்து வருகின்றனர்.

    சந்திரசேகர ராவின் மகள் கவிதா மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்திப்பதால் அவருடைய கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகிறது.

    கட்சியை எப்படி வலுப்படுத்துவது என வழி தெரியாமல் சந்திரசேகர ராவ் திண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவருடைய பார்வை தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வின் பக்கம் திரும்பி உள்ளது.

    கருணாநிதி மறைவிற்குப் பிறகு கூட தி.மு.க. மாபெரும் வெற்றியை தேர்தலில் சந்தித்து வருகிறது.


    தி.மு.க.வின் கட்சி கொள்கை, செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதனை பின்பற்ற சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக அவருடைய கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் எம்.பி. பால்க சுமன், முன்னாள் விளையாட்டு ஆணைய தலைவர் ஆஞ்சநேயலு கவுட், ரவீந்தர் ரெட்டி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 11 மற்றும் 12-ந் தேதிகளில் சென்னை திருவள்ளூர் உட்பட தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க.வின் கட்சி செயல்பாடுகள் கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர்.

    தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களிடம் அமைப்பு மற்றும் பலம் குறித்து கேட்டறிந்தனர்.

    தி.மு.க. மற்றும் பி.ஆர்.எஸ். ஆகிய இரு கட்சிகளும் மாநில அளவில் தனி கொள்கை, கலாச்சாரம் மொழிகளை மேம்படுத்து வது போன்ற ஒற்றுமைகளை கொண்டுள்ளன.

    தி.மு.க.வில் கருணாநிதியைப் போல பி.ஆர்.எஸ். கட்சிக்கு சந்திரசேகர ராவ் பலமான தலைவராக உள்ளார்.

    இதனால் தி.மு.க.வின் செயல்பாடுகளை பின்பற்றி எளிதில் தெலுங்கானாவில் கட்சியை வலுப்படுத்த முடியும் என சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் ஆய்வு செய்த சந்திரசேகர ராவ் கட்சி முக்கிய தலைவர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆழமான கட்டமைப்பை பெற்றுள்ளது. தி.மு.க.வில் கிராமம், தொகுதி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கிட்டத்தட்ட 2 கோடி உறுப்பினர்கள் மற்றும் குழுக்கள் உள்ளன. குழு உறுப்பினர்கள் மாவட்டத்திற்கு 2 அல்லது 3 முறை தொடர்பு கொள்கிறார்கள்.

    கட்சி நிகழ்ச்சிகளை திறம்பட ஏற்பாடு செய்கிறார்கள். உள்ளூர் பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிளைகள் உள்ளன. இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மாணவர் பிரிவுகள் மகளிர் அணி என கிராமங்கள் தோறும் கமிட்டிகள் உள்ளன.

    மாநிலத்தில் 38 மாவட்டங்கள் இருந்தாலும் தி.மு.க. கிட்டத்தட்ட 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் செயல்பாடுகளை பின்பற்றி அடிமட்டத்தில் இருந்து பி.ஆர்.எஸ். கட்சியை வலுப்படுத்த விரும்புகிறோம்.

    தி.மு.க. செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்து வருகிறோம். இதனை எங்களுடைய கட்சி செயல் தலைவர் கே.டி.ராமராவிடம் சமர்ப்பிப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • எதிர்க்கட்சித் தலைவராக உள்ள போதும் கஜ்வேல் தொகுதி பக்கம் வரவில்லை என கூறப்படுகிறது.
    • காணாமல் போன சந்திரசேகரராவை கண்டுபிடித்து தர வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரியும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் கடந்த 3 முறையாக கஜ்வேல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.

    சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள போதும் கஜ்வேல் தொகுதி பக்கம் வரவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கஜ்வேல் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி தொழிலாளர்கள் சந்திரசேகரராவை காணவில்லை அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என தொகுதி முழுவதும் போஸ்டர்களை ஒட்டினர். மேலும் சாலையில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


    சந்திரசேகர ராவ் அவரது முகாம் அலுவலகம், இந்திரா பார்க், சவுரஸ்தா பஸ் நிறுத்தம், அம்பேத்கர் சதுக்கம், கஜுவேல் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியவில்லை என போஸ்டரில் கூறியிருந்தனர்.

    மேலும் காணாமல் போன சந்திரசேகரராவை கண்டுபிடித்து தர வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்திரசேகரராவை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது.
    • தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள்.

    தெலுங்கான மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.

    அப்போது சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

    நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது. தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள். இது என்டிஏ அல்லது இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் பிராந்திய கட்சிகள் அல்ல. அது போன்று நடக்காது. பா.ஜனதா தலைமையிலான என்டிஏ அல்லது காங்கிரஸ் தலைமையலான இந்தியா கூட்டணி பிராந்தியக் கட்சிகளின் குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும். இது ஒரு தலைகீழ் விஷயமாக இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள்.

    தெலுங்கானாவில் கடந்த முறை 17 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை இரண்டு இலக்க எண் இடங்களில் வெற்றி பெறுவோம்.

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் மட்டுமே காங்கிரஸ் அளித்த வாக்குறுதியில் நிறைவேற்றியுள்ளது. அதுவும் பெரிய நகைச்சுவையாகிவிட்டது. பெண்கள் பேருந்துகளிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளிலும் (போராட்டம்) போராடுகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். எனது ஆட்சியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற விவசாய சமூகமும் கடும் கோபத்தில் உள்ளது. இது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என நினைக்கிறேன்.

    கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மக்களவை தேர்தலில் தெலுங்கானாவில் பா.ஜ.,வுக்கு ஒன்று அல்லது எதுவுமே கிடைக்காது.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரசேகர ராவ் இழிவாக பேசியுள்ளார் என்று காங்கிரஸ் தேர்தல் ஆணையதிடம் புகார் அளித்தார்
    • சந்திரசேகர ராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 5-ம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது.

    இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரசேகர ராவ் இழிவாக பேசியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ஜி நிரஞ்சன் தேர்தல் ஆணையதிடம் புகார் அளித்தார்.

    இந்த புகார் தொடர்பாக சந்திரசேகர ராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த புகாரின் விசாரணையில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் காங்கிரஸ் தொண்டர்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்தது.

    இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இன்று இரவு 8 மணி முதல் இந்த தற்காலிக தடை அமலுக்கு வருகிறது.

    இந்த 48 மணி நேர தடையில் பொதுக் கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், பொது பேரணிகள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்கள், ஊடகங்களில் (மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள்) பகிரங்கமாக பேச கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் 324 வது பிரிவை மேற்கோள் காட்டி இந்த தடையை விதித்துள்ளது.

    • தெலுங்கானா தனி மாநிலம் என்பது என்னுடைய கனவு.
    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

    பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

    தெலுங்கானா தனி மாநிலம் என்பது என்னுடைய கனவு. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர். காங்கிரஸ் மீது பயங்கர கோபமாக உள்ளனர். நாங்கள் 17 தொகுதிகளில் குறைந்தது 12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம்.

    இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி கூறுவது, மிகவும் முன் செயலாகும். தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி முழு மெஜாரிட்டியை பெறாது. பா.ஜனதா 272 இடங்களை பிடிக்காது.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் நெருங்கிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காங்கிரஸ் பற்றி சந்திரசேகர ராவ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கடந்த 5-ம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.எஸ்.ஆர். தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நாய்களின் மகன்கள் என்றும், விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.500 போனஸ் வழங்காவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டையை கடிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். சந்திரசேகர ராவின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி மூத்த துணை தலைவர் ஜி. நிரஞ்சன், ஏப்ரல் 6 அன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புகார் தொடர்பாக ஏப்ரல் 18-ம் தேதி காலை 11 மணிக்குள் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால் ஆணையத்தின் உரிய நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
    • 2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தெலுங்கானா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்து 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது. ஐதராபாத், வாரங்கல், கம்மம் உள்ளிட்ட 14 பெரிய நகரங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன.

    2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3 கோடியே 51 லட்சத்து 93 ஆயிரத்து 978 ஆக உள்ளது. 119 சட்டமன்ற தொகுதிகள் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளில் பயணித்த கே.சந்திரசேகர ராவ் 2001-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை தொடங்கினார். அவரது முன்னிலையில் எடுக்கப்பட்ட போராட்டங்களால் தெலுங்கானா மாநிலம் உருவானது. இதனால் அசைக்க முடியாத தலைவராக சந்திரசேகர ராவ் உருவானார்.

    தொடர்ச்சியாக 2 முறை தேர்தலில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

    சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி 39 இடங்களிலும் பா.ஜ.க-8 இடங்களிலும் வென்றது. தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 13-ந் தேதி ஒரே கட்டமாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 - ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி-9 இடங்களிலும் பாஜக- 4, காங்கிரஸ் -3, இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தெலுங்கானாவில் போட்டியில் இருந்து விலகின.

    2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தென்னிந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவற்றை விட தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. கூடுதல் கவனம் செலுத்துகிறது. சட்டமன்றத் தேர்தலில் டார்கெட் 75 இலக்குடன் களமிறங்கிய பா.ஜ.க., இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் இலக்குடன் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக களம் இறங்கியுள்ளது.

    பெண்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்து முதன் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

    கட்சிக்கு புதியவரான ரேவந்த் ரெட்டி பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்வதன் மூலம் கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இருந்து ஓட்டம், வேட்பாளர்கள் பின்னடைவு, ஜெயிலில் மகள் என பல்வேறு சிக்கலில் உள்ள சந்திரசேகர ராவ் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க தீவிரமாக செயல்பட்டுகிறார்.

    சந்திரசேகர ராவ் மற்றும் அவருடைய மகன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானாவில் மண்ணின் மைந்தர் என்ற கோஷத்துடன் புறப்பட்ட பி. ஆர்.எஸ்.கட்சி இந்த தேர்தலில் ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெலுங்கா னாவை பொருத்தவரை காங்கிர சுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    • பா.ஜனதா சுமார் 10 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
    • பிஆர்எஸ் அறிவித்த வேட்பாளரை, காங்கிரஸ் கட்சி அதே தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சியிலிருந்து முக்கியமான தலைவர்கள் வெளியேறி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவில் இணைந்தனர்.

    மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் வெளியேறி பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து வெளியேறிய பெரும்பாலான தலைவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் வாய்ப்பு அளித்துள்ளன.

    மொத்தம் 17 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அதில் பி.ஆர்.எஸ். கட்சியின் முன்னாள் தலைவர் எட்டாலா ராஜேந்தரும் அடங்குவார்.

    2021-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியில் இவர் இணைந்தார். இதனால் பிஆர்எஸ் இவரை கட்சியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் மல்காஜ்கிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அதைத் தவிர பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து வெளியேறி கட்சியில் இணைந்த சில மணி நேரத்தில் பலர் பா. ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளனர்.

    ஜகீராபாத் பி.ஆர்.எஸ். எம்.பி. கட்சியிலிருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இணைந்த சில மணி நேரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பி.ஆர்.எஸ். எம்.பி. ராமுலு மகன் பாரத் நகர்குர்னூல் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமுலு தனது மகனுடன் கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாகட்சியில் இணைந்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில்தான் அரூரி ரமேஷ் வாரங்கல் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதே அடிப்படையில்தான் காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் தலைவர்களை வரவேற்று உள்ளது. செவால்லா எம்.பி. ரஞ்சித் ரெட்டி பிஆர்எஸ் சார்பில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    பிஆர்எஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தனம் நாகேந்தர் எம்எல்ஏ தற்போது செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    முன்னாள் பிஆர்எஸ் மந்திரி பட்னம் மகேந்தர் ரெட்டியின் மனைவி சுனிதா மகேந்தர் ரெட்டி விகார்பத் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் மல்காஜ்கிரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்

    பிஆர்எஸ் கட்சி வாரங்கல் தொகுதியில் கடியம் காவியாவிற்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால் அவர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்று அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தந்தை கடியம் ஸ்ரீஹரி பிஆர்எஸ் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

    சந்திரசேக ராவின் கட்சி முதலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தெலுங்கானா மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு முறை முதல்வராக இருந்தார்.

    தேசிய அளவிலான தலைவர் என்ற பார்வை ஏற்படுத்த விரும்பிய அவர், தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றினார். இந்த முயற்சி அவருக்கு கை கொடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அவரை படுதோல்வி ஆக்க செய்தது.

    மேலும் ஊழல் குற்றச்சாட்டு அவரது மகள் கே கவிதா டெல்லி மாநில மதுபான கொள்கை வழக்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ஆகியவை பின்னடைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது.
    • காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சந்திரசேகர ராவ் ஆட்சியில் துணை முதல் மந்திரியாக இருந்தவர் கடியம் ஸ்ரீ ஹரி.

    இவரது மகள் கடியம் காவ்யா. சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    இதனால் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

    கடியம் ஸ்ரீ ஹரியன் மகள் காவ்யா வாரங்கல் தொகுதியில் போட்டியிட பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

    அவர் திடீரென போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கேசிஆருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    • போட்டியில் இருந்து விலகியதற்காக தலைவர் மற்றும் பிஆர்எஸ் ஆர்வலர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் தொகுதியில் சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) வேட்பாளராக முன்னாள் துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரியின் மகள் காவ்யா காடியம் அறிவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    சந்திரசேகரராவுக்கு எழுதிய கடிதத்தில், காவ்யா தனது முடிவின் பின்னணியில் முந்தைய பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான சமீபத்திய ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் கட்சியின் கவுரவத்தைக் குறைத்து விட்டன.

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கேசிஆருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். போட்டியில் இருந்து விலகியதற்காக தலைவர் மற்றும் பிஆர்எஸ் ஆர்வலர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

    ×