search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் சில்மிஷம்"

    சங்கரன்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரை அடுத்த சம்சிகாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி வர்சில்ஜோஸ் (எ) ரோசி. பாலமுருகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். ரோசி மட்டும் சம்சிகாபுரத்தில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் ரோசி மட்டும் தனியாக இருந்தார். 

    அப்போது அங்கு வந்த சம்சிகாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (34), முப்பிடாதி (29) ஆகியோர் கதவை தட்டி தண்ணீர் கேட்டனர். பின்னர் ரோசி கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தனர். இதனால் பயந்து போன ரோசி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். இதனால் கருப்பாமி மற்றும் முப்பிடாதி அங்கிருந்து தப்பி ஓடினர். 

    சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த கரிவலம் போலீசார் தப்பி ஓடிய கருப்பசாமி, முப்பிடாதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மறைவான இடத்தில் வைத்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி  அருகே  உள்ள காஞ்சிரான் கொல்லையைச் சேர்ந்த வேலாயுதம். இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார். இவர் சம்பவதன்று ஆலங்குடியில் வேலைக்கு சென்று விட்டு பஸ்சில் அரசடி பட்டிக்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதி எஸ்.களபத்தைச் சேர்ந்த பழனிவேலு (வயது 36)  என்பவர் மோட்டார் சைக்கிளிலில் வந்தார். அவர் முத்துலட்சுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் மறைவான இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு முத்துலட்சுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் சத்தம் போடவே பழனிவேலு அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

    இது குறித்து முத்துலட்சுமி ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி பழனிவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    குலசேகரம் அருகே மொபட்டில் இருந்து விழுந்த பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து செக்ஸ் சில்மிஷம் செய்த வாலிபர் மீது பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார்.
    குலசேகரம்:

    குலசேகரத்தை அடுத்த உண்ணியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று குழந்தையுடன் பொருட்கள் வாங்க குல சேகரம் சென்றார்.

    குலசேகரத்தில் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். உண்ணியூர்கோணம் அருகே சென்ற போது, இவரது மொபட் நிலைதடுமாறி சரிந்தது. இதில் அந்த பெண்ணும், அவரது குழந்தையும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். இதனை அருகில் உள்ள வீட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர் பார்த்தார். அவர் இளம்பெண் அருகே ஓடிச் சென்று அவரை தூக்கி விட்டார். பின்னர் குழந்தையையும் எடுத்து பெண்ணிடம் கொடுத் தார்.

    அப்போது அந்த வாலிபர், விபத்தில் சிக்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக அந்த பெண், அவரது கணவரி டம் தெரிவித்து அழுதார். பெண்ணின் கணவர் இது பற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
    ×