search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "40 special buses"

    • ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
    • பழனி முருகன் கோவிலுக்கும் அதிக அளவில் பக்தர்கள் செல்வதால் அங்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிட ப்பட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணா மலை அருணா ச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

    எனவே, பக்தர்க ளின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு அரசு போக்குவ ரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோட்டில் இருந்தும் திருவண்ணா மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல பழனி முருகன் கோவிலுக்கும் அதிக அளவில் பக்தர்கள் செல்வ தால் அங்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதற்காக 40 சிறப்பு பஸ்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணா மலை, பழனி ஆகிய ஊர்களு க்கு வரும் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை இயக்கப்ப டுகின்றன.

    இவ்வாறு அதில் தெரிவி க்கப்பட்டுள்ளது.

    • மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது.
    • தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உட்பட பல திருவிழா நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும்.

    இது தவிர பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல ஒவ்வொரு அமாவாசை நாட்களில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

    தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வரும் 17-ந் தேதி ஆனி மாத அமா வாசையை முன்னிட்டு, அன்று அதிகாலை முதல் சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் பஸ் நிலையம், தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    ×