search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AP Assembly election"

    • தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது.
    • ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.

    ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 134 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய சந்திரநாயுடுக்கு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதே போல் நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்போது ஆந்திராவில் அதிக இடங்களை வென்ற பவன் கல்யாணுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் கட்சி தற்போது ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    • 135 இடங்களில் முன்னிலை பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
    • ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.

    ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

    இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. 

    • ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.
    • சந்திரபாபு நாயுடு வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 131 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும், மற்றவை 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரோபோ யார் எந்த கேள்வி கேட்டாலும் கைகளை அசைத்து சைகைகளை காட்டி பதிலளிக்கிறது.
    • மாயா ரோபோ பதில் அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசியல் ஆய்வாளர்கள் கூட இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தற்போது திணறி வருகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் மறைந்திருக்கும் உண்மை என்ன? வாக்காளர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

    இதனால் அந்த மாநில மக்கள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதனிடையே துபாய் சென்ற ஆந்திர நபர் ஒருவர் ரோபோவிடம் இது பற்றி கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    துபாயில் உள்ள ஆப் பியூச்சர் என்ற இடம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இங்குள்ள மியூசியம் ஒன்றில் மாயா ரோபோ உள்ளது.

    இந்த ரோபோ யார் எந்த கேள்வி கேட்டாலும் கைகளை அசைத்து சைகைகளை காட்டி பதிலளிக்கிறது. உலகில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல ஒரு கணம் கூட யோசிப்பதில்லை.

    இந்த ரோபோ அருகில் சென்ற ஆந்திர நபர் ஒருவர் ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போவது யார்? என கேள்வி எழுப்பினார்.

    இதனை கேட்டதும் ரோபோ ஒரு கணம் அப்படியே அசையாமல் நின்றது. இந்த கேள்விக்கு பதில் தெரிந்தாலும் சொல்ல முடியாது என ரோபோ கைகளை காட்டி பதில் அளித்தது. இதனைக் கேட்டதும் ஆந்திர நபர் திகைத்து போனார்.

    மாயா ரோபோ பதில் அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மனிதர்கள் மட்டுமின்றி மனிதர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் கூட தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து ஆந்திரா தேர்தல் குறித்து அசத்தலாக பதில் அளித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
    • வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு வருகிற 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

    ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இந்த தேர்தல் அறிக்கையின் முகப்பு பக்கத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி தலைவர்கள் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று இருந்ததாகவும், பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும், நேற்று விழாவில் கலந்து கொண்ட, ஆந்திர மாநில பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்து விட்டதும் கூட்டணியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

    இந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை பிரசாரத்தில் இறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    இதனால் ஆந்திர மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் தெலுங்கானா வி.ஐ.பி.க்கள் மதிக்கப்படவில்லை. சிபாரிசு கடிதங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

    • திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும்.
    • வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

    இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.

    நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள் நலமடையவும், ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரி ஆக வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    நான் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சரவை கூட்டங்களிலும் முன் வரிசையில் இருந்து வருகிறேன்.

    நகரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். அது பலிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்கள் வைத்த நம்பிக்கையை ஜெகன்மோகன் ரெட்டி நிச்சயம் காப்பாற்றுவார் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்தார்.
    நகரி:

    நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே படம் ஆந்திராவிலும் வருகிற 31-ந்தேதி தெலுங்கில் வெளியாகி உள்ளது. அதுகுறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐதராபாத் வந்த நடிகர் சூர்யா ஆந்திரா அரசியல் குறித்து நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவர் குடும்பத்தை சேர்ந்த அனில் ரெட்டி என்னுடன் படித்தவர். ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி சாதித்த வெற்றி அபூர்வமானது. அவரது தந்தை முதல்வராக இருந்த போது அவர் அமல்படுத்திய பல நலத்திட்டங்கள் ஏழைகளுக்கு எவ்வளவு பயன் அளித்தது என்பது தெரியும். எதிர்பாராத வகையில் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பிறகு ஜெகன்மோகன் ரெட்டி செய்து வரும் அரசியல் போராட்டம் குறித்தும் தெரியும். 10 ஆண்டுகளாக மக்கள் மத்தியிலேயே இருந்து எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தார். 14 மாதங்கள் 3664 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.


    எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் காப்பாற்றும் குணம் அந்த குடும்பத்திற்கு ஒரு சிறப்பு அம்சம். அதனாலேயே மக்கள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து இமயமலை அளவுக்கு பொறுப்பையும் கொடுத்துள்ளனர். அவர்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர் நிச்சயம் நிலை நிறுத்துவார். வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். மிகக்குறைந்த வயதில் முதல்வரான இரண்டாம் நபர் ஜெகன்மோகன் ரெட்டி என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மீண்டும் மீண்டும் முதல்வராக வெற்றிபெற்று ஆட்சியில் நீடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ‘‘யாத்ரா’’ என்ற சினிமா படம் வெளியிடப்பட்டது. இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    இந்தநிலையில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய அரசியல் போராட்டம், பாதயாத்திரை, சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை வைத்து யாத்ரா-2 படம் தயாரிக்க உள்ளதாகவும் அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது குறித்து நிருபர்கள் கேட்டனர், அதற்கு சூர்யா பதில் கூறும்போது, ‘‘யாத்ரா’’ படத்திற்கு நல்ல டீம் அமைந்தது. மாபெரும் வெற்றியும் பெற்றது. ‘‘யாத்ரா-2’’ குறித்து இன்னும் யாரும் என்னோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கதை அனைவரையும் கவரும் விதமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் சந்தேகமே இல்லை என்றார்.
    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் ஆந்திராவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் காளிபாக்கம் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    நடிகை ரோஜாவை சந்தித்து தொண்டர்களும், தலைவர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நகரி தேசம்மா தாயார் கோவிலுக்கு சென்ற ரோஜா அம்மனை தரிசித்தார். அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.

    பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாதம் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால்தான் மனநிறைவு ஏற்படும். கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவாலும் 2-வது முறையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி ஏழுமலையான் பிரசாதத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
    திருமலை:

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்கும் நிகழ்ச்சி 30-ந்தேதி விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணியளவில் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி சினிவாசராஜீ, டாலர் சேஷாத்திரி, பொக்கா‌ஷம் கிளார்க் குருராஜாராவ் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள தாடப்பள்ளியில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் வீட்டிற்கு நேரில் சென்றனர்.

    ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேவஸ்தானம் சார்பில் சே‌ஷ வஸ்த்திரம் போர்த்தி கவுரவித்தனர். அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் கையில் மஞ்சள் கயிறு கட்டினர். முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கும் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வாழ்த்து வழங்கினர்.
    சந்திரபாபு நாயுடுவை கண்டித்தும், தனது கட்சியை பலப்படுத்துவதற்காகவும் பவன் கல்யாண் நடத்திய பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பேரணியில் திரண்டனர். #PawanKalyan #ChandrababuNaidu
    நகரி:

    நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், ஜனசேனை கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்தார்.

    சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற அவர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து ஆந்திராவில் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். 2019-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகவும், தனது கட்சியை பலப்படுத்துவதற்காகவும் பேரணி நடத்த முடிவு செய்தார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே தபலேஸ்வரம் பாலம் அருகே இந்த பேரணி நடந்தது. இதில் பங்கேற்க தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்று 1 லட்சம் தொண்டர்கள் பேரணியில் குவிந்தனர்.

    பேரணியில் பவன் கல்யாண் நடந்து செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் குவிந்திருந்ததால் நெரிசல் ஏற்படும் என்று கருதி அவரை போலீசார் நடந்து செல்ல அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து பேரணியின் போது பவன்கல்யாண் காரில் சென்றார். தொண்டர்கள் அவரது காரை பின் தொடர்ந்து பேரணியாக சென்றனர்.

    பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது:-

    சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. இதுபற்றி கேள்வி எழுப்பினால் சந்திரபாபு நாயுடு வாய் திறப்பதில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஒரு வார்டில் கூட போட்டியிடாத அவரது மகனை எம்.எல்.சி. ஆக்கி உள்ளாட்சித் துறை மந்திரியாக்கி விட்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்றார். ஆனால் அவரது மகனுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.

    தேர்தலின் போது 600 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எதையும் அமல்படுத்தவில்லை. 6 வயது குழந்தையை கேட்டால் கூட சந்திரபாபு நாயுடு அரசின் ஊழலை எடுத்துச் சொல்கிறது. நலத்திட்டங்கள் எல்லாம் ஆளும் கட்சியினருக்கு மட்டுமே கிடைக்கிறது. மக்களுக்கு கிடைக்கவில்லை.

    ஜெகன்மோகன் ரெட்டி மீது எனக்கு கோபம் இல்லை. அவரது தந்தை ராஜசேகர ரெட்டி மீது தான் எனக்கு கோபம் உண்டு. 2007-ம் ஆண்டு அவர் முதல்-மந்திரியாக இருந்த போது அவரது கட்சியினர் என்னை வைத்து படம் எடுக்க முயன்றனர். அதற்கு நான் மறுத்தேன். எனவே என்னை மிரட்டினார்கள். அதனால்தான் ராஜசேகர ரெட்டி மீது எனக்கு கோபம் வந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பவன் கல்யாண் நேற்று ஆந்திரா மாநிலம் ஸ்ரீகா குளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.  #PawanKalyan #ChandrababuNaidu
    ×