search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armstrong murder"

    • ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம்.
    • புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதி இருக்கிறார்.

    இதுதொடர்பான அந்த கடிதத்தில், "பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும். புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்."

    "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை என்றும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு உள்ளிட்ட பத்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

    • ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

    • சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    • சென்னை மாநகர் முழுவதும் போலீ சார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக அரக்கோணத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒற்றை கண் ஜெய பால் மற்றும் நெல்லை கூலிப்படையைச் சேர்ந்த ரவுடிகள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த கொலையாளிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் உதவி செய்திருப்பதாக ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதினர். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் தான் கடந்த மாதம் 5-ந் தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்று, சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலுவுடன் கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

    நாளை ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் தரப்பை சேர்ந்தவர்கள் புளியந்தோப்பு வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் போலீ சார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர்.
    • அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குனர் பா.ரஞ்சித், கட்சி ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

    போராட்டத்தின்போது, நீதி வேண்டும் நீதி வேண்டும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு நீதி வேண்டும் னெ பதாகைகளை ஏந்து கோஷமிட்டனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • 23 கூடுதல் சூப்பிரண்டுகள் பதவி உயர்வு.
    • தமிழகம் முழுவதும் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் சூப்பிரண்டுகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மரணம் எதிரொலியாக புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் துணை கமிஷனராக முத்துக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கோவையில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய முத்துக்குமார் பதவி உயர்வு பெற்று பணியமர்த்தப்பட்டுள்ளார். சென்னை சைபர்கிரைம் துணை கமிஷனராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர்களை தவிர 23 கூடுதல் சூப்பிரண்டுகள் பதவி உயர்வு பெற்று சூப்பிரண்டாகியுள்ளனர்.

    கள்ளக்குறிச்சியில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய குத்தாலிங்கம் தி.நகர் துணை கமிஷனராகியுள்ளார். நெல்லையில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய கார்த்திகேயன் தாம்பரம் பள்ளிக்கரணை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் லஞ்ச ஒழிப்பில் பணியாற்றிய தேவநாதன் பதவி உயர்வு பெற்று சென்னை லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி. சங்கு பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பட்டாலியன் சூப்பிரண்டாகியுள்ளார்.

    இதே போன்று தமிழகம் முழுவதும் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் சூப்பிரண்டுகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    • இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
    • பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.ஜனதாவை சேர்ந்த பிரபல பெண் தாதா அஞ்சலை, அ.தி.மு.க.வைச் சேர்ந்த மலர்க்கொடி, த.மா.கா. வக்கீல் ஹரிகரன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் இது போன்று தொடர்ச்சியாக அரசியல் பிரமுகர்கள் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரபல வக்கீல் பால் கனகராஜிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி உள்ளனர்.

    பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார். பாஜகவில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் பால் கனகராஜ் ரவுடிகள் சார்பிலும் ஆஜராகி வாதாடி இருக்கிறார்.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன், சம்பவ செந்தில் ஆகியோர் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களில் நாகேந்திரன் வேலூர் சிறையில் இருக்கும் நிலையில் சம்பவ செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இவர்கள் இருவருக்கும் பால்கனகராஜ் வக்கீலாக செயல்பட்டு இருப்பதாகவும், அதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று பால்கனகராஜ் இன்று எழும்பூரில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

    கடலூர்:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் அவரது வீட்டின் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம், போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனது நண்பனை இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும். அவனை விடுவிக்காவிட்டால் உங்கள் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கடிதத்தை எழுதியவர் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து செம்பியம் போலீசார், படுரில் இருந்த சதீஷை. பிடித்து நடத்திய விசாரணையில் சதீஷ் அப்பாவி என்பதும், தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் யார் என்று கூட தெரியாத படூரை சேர்ந்த சதீஷ் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலீசாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.

    அதில், செங்கல்பட்டை சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தபோது அவரிடம் கடலூரை சேர்ந்த, தனியார் நர்சரி பள்ளி தாளாளர் அருண்ராஜ் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக மனு அளித்த போது, அதை ரோஸ் நிர்மலா நிராகரித்துள்ளார். பின்னர், அந்த பதவியில் இருந்து ரோஸ் நிர்மலா ஓய்வும் பெற்றுவிட்டார். இந்நிலையில், தனது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க மறுத்ததால் அவரை பழி வாங்குவதற்காக அருண் ராஜ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

    ரோஸ் நிர்மலாவின் செங்கல்பட்டு வீட்டின் முன்பும், அவரது மகள் வசிக்கும் படூர் வீட்டின் முன்பும் பல்வேறு அருவருக்கத்தக்க தகவல்களை போஸ்டர்களாக ஒட்டி வந்துள்ளார்.

    மேலும், ரோஸ் நிர்மலாவின் மகள் குறித்தும் அவரது வீடு, கடை ஆகிய பல்வேறு இடங்களிலும் போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து ரோஸ் நிர்மலா அப்போதைய தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்ததை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சாட்சிகளை கலைக்கவும், மிரட்டவும் அருண்ராஜ் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அருண்ராஜை பிடிக்க கேளம்பாக்கம் போலீசார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு அருண்ராஜை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

    சென்னை:

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரை வேவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருமலையின் உறவினரான பிரதீப் மற்றும் முகிலன் ஆகிய 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

    இதுவரை கைதான நபர்களின் செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கி வரும் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் தான் பிரதீப்பும், முகிலனும் தற்போது பிடிபட்டுள்ளனர். இவர்களை தவிர மேலும் 50 பேரும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    இந்த லிங்கை கிளிக் செய்யவும்- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- மேலும் ஒரு வழக்கறிஞர் கைது

    • பெரம்பூரில் பதுங்கி இருந்தது குறித்தும் போலீசாரிடம் அருள் விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.
    • ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எப்போது அழைத்தாலும் நேரில் வரவேண்டும் என்று கூறி மிண்ட் ரமேசை அனுப்பி வைத்துள்ளனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, வக்கீல் அருள், ராமு ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வக்கீல் அருளை, புழல் மற்றும் பெரம்பூர் பகுதிகளுக்கு இன்று காலையில் நேரில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். புழலில் சதிதிட்டம் தீட்டியதாக கூறப்படும் இடம், மற்றும் பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு வேவு பார்த்த இடங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது சதி திட்டம் தீட்டியது பற்றியும், பெரம்பூரில் பதுங்கி இருந்தது குறித்தும் போலீசாரிடம் அருள் விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள் மலர்க்கொடி, ஹரிதரன், த.மா.கா.வை சேர்ந்த வக்கீல் ஹரிகரன், பா.ஜனதாவை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த மிண்ட் ரமேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளராக உள்ள மிண்ட் ரமேசிடம் 2 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடியுடன் மிண்ட் ரமேஷ் தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ? என்கிற கோணத்திலேயே விசாரணை நடத்தப்பட்டது. மிண்ட் ரமேசின் செல்போன் தொடர்புகள், அவரது வங்கி கணக்குகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மிண்ட் ரமேசுக்கு தொடர்பு இருப்பது போன்ற எந்த தகவல்களும் போலீசிடம் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எப்போது அழைத்தாலும் நேரில் வரவேண்டும் என்று கூறி மிண்ட் ரமேசை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதே போன்று இன்னொரு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அவரது வங்கி கணக்குகள் முழுவதையும் போலீசார் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
    • தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு உதவியதாக கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே சிக்கிய வக்கீல்களான ஹரிகரன், அருள் ஆகிய 2 பேருக்கும் ஹரிதரன் நண்பர்களாக இருந்து உள்ளார். அவர்கள் கூறியபடி கொலைகுற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிதரன் வெங்கத்தூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முதல் கூவம் ஆற்றில் தீயணைப்பு வீரர்களுடன், தண்ணீரில் மூழ்கி தேடும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடினர். இதில் 3 செல்போன்கள் மட்டும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதல் 2-வது நாளாக மெரினா மீட்பு குழுவினர், திருவூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 6.30 மணிமுதல் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
    • அஞ்சலையைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடிவரப்பட்ட பெண் தாதாவான அஞ்சலை புளியந்தோப்பில் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    பெண் தாதாவான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

    புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது. கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது புகார்கள் உள்ள நிலையில் பி.வகை ரவுடிகள் பட்டியலில் அஞ்சலை இடம் பெற்றிருக்கிறார். இந்த கொலை வழக்கில் அஞ்சலைக்கு தொடர்பு இருப்பதை தொடர்ந்து பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    அஞ்சலையைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைவாசிகளுக்கு வெளியில் இருந்து பண உதவி, சிறைவாசிகளிடம் இருந்து வெளியில் தகவல்களை கூறுபவராக எல்லப்பன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கோடாரி ஒன்றை வாங்கியதும், அதனை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. முதல் திட்டம் வேலூரில் இருந்து தொடங்கியுள்ளது.

    முதலில் வேலூரில் வைத்து அருள், பொன்னை பாலுவை மூளை சலவை செய்துள்ளார். அதற்காக பாலு, தங்க பிரேஸ்லெட்டை வைத்து ரூ.3.50 லட்சம் பணமாக்கியுள்ளார். சம்போ செந்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஹரிஹரனுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கோடாரி ஒன்றை வாங்கி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அதனை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

    ×