search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arun Karthik"

    • நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • 4 விக்கெட்டுகள் வீழ்த்திய திருச்சி அணி வீரர் சரவண குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    நெல்லை:

    8-வது டி.என்.பி. எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.

    இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் தொடங்கியது.

    நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 51 பந்தில் 84 ரன்கள் குவித்தார். ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    திருச்சி அணி சார்பில் சரவணகுமார் 4 விக்கெட்டும், ஆண்டனி தாஸ், அதிசயராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வசீம் அகமது 27 ரன்னிலும் ராஜ்குமார் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    நிதானமாக விளையாடிய ஷியாம் சுந்தர் 31 ரன்னிலும் ஜபார் ஜமால் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரவி ராஜ்குமார் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசி திருச்சி அணியை வெற்றி பெற வைத்தார்.

    சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய திருச்சி அணி வீரர் சரவண குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நெல்லை அணி 177 ரன்களை சேர்த்தது.

    நெல்லை:

    8-வது டி.என்.பி. எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.

    முதல் 2 சுற்று ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் சூப்பர் கில்லீஸ் 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இன்றைய ஆட்டத்தில் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 51 பந்தில் 84 ரன்கள் குவித்தார். ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    திருச்சி அணி சார்பில் சரவணகுமார் 4 விக்கெட்டும், ஆண்டனி தாஸ், அதிசயராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

    • பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது.
    • கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. கோவையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.

    கேப்டன் அருண் கார்த்திக் 38 பந்தில் 47 ரன்னும் (பவுண்டரி, 2 சிக்சர்) சோனு யாதவ் 26 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ஷாருக்கான், எம்.முகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 18.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் 48 பந்தில் 76 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), சுரேஷ் குமார் 55 பந்தில் 63 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    வெற்றி குறித்து கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக்கான் கூறியதாவது:-

    டி.என்.பி.எல். தொடரில் தொடர்ந்து 10-வது வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் 2 போட்டியில் கடுமையாக போராடி வென்றோம். இனி வரும் போட்டிகளிலும் எங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சொந்த ஊரான கோவையில் வெற்றி பெறுவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் அருண் கார்த்திக் கூறும்போது, 'மழை பெய்ததால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச மிகவும் சிரமப்பட்டனர்'. பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது. கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

    இன்று நடைபெறும் 'லீக்' ஆட்டங்களில் சேலம் ஸ்பார்ட்ன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் (மாலை 3.15), சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிரா கன்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.

    • இயக்குனர் அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரிப்பப்பரி’.
    • இப்படத்தில் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரிப்பப்பரி'.மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    AK THE TALESMAN நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு திவாரகா தியாகராஜன் இசையமைக்க தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.


    இதில், மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது, இந்த விழாவிற்கு வந்த பின்பு தான் நிறைய திறமை உள்ளவர்கள் இந்த படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் எனத் தெரிந்துகொண்டேன். அவர்களின் மற்ற திறமைகள் இங்கே பார்த்தபோது, வியப்பாக இருந்தது. இந்தப்படத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சொல்லவேண்டும். தொழில்நுட்ப குழுவில், அத்தனை பேரும் கடினமாக உழைத்துள்ளார்கள்.

    சகோதரர் நரேன் அவர்களுக்கு நன்றி. ஆர்த்தி கேரளாவில் ஒரு வுமன் ஐகான். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்குக் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மாரி, ஶ்ரீனி இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர்.  இயக்குனர் அருண் கார்த்தி மிகச்சிறந்த நண்பர். படத்தை  வித்தியாசமான ரசனையில் அழகாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 14 ல் படம் வருகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. என்று கூறினார்.


    இயக்குனர் அருண் கார்த்திக் பேசியதாவது, முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும் அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முயற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயாரித்தாலும் உடனிருப்பவர்கள் அந்தக்கதையை நம்புபவர்களாக நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்குச் செல்லும் திறமை கொண்டவர்கள்.

    அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. திவாரகா தியாகராஜன் இசை, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு, முகேன் வேல் எடிட்டிங் இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மாஸ்டர் மகேந்திரன் இந்தப்படம் மூலம் சகோதரராக கிடைத்துள்ளார். எனது வேலையைப் பாதி அவரே செய்து விடுவார், அவருக்குள் சினிமா ஊறியிருக்கிறது. அவருக்கான காலம் விரைவில் வரும். அவரைத்தாண்டி ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி என எல்லோருமே சிறப்பாகச் செய்துள்ளார்கள். இது உங்களை மகிழ்விக்கும் ஒரு அழகான காமெடி படம் என்று கூறினார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் ஆகியோரின் ஆட்டம் முக்கிய காரணம் என்று அந்த அணியின் கேப்டன் டி.ரோகித் பாராட்டினார். #TNPL2018
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது.

    முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 117 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜெகதீசன் 51 ரன்கள் (44 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். பின்னர் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 75 ரன்னும், ஷிஜித் சந்திரன் 49 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதுரை பாந்தர்ஸ் அணி வீரர் அருண் கார்த்திக் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.

    இந்த தொடரில் நடந்த மொத்தம் 32 ஆட்டங்களில் 7,400 பந்துகள் வீசப்பட்டன. 9,769 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதில் 766 பவுண்டரிகளும், 411 சிக்சர்களும் அடங்கும். 2,728 பந்துகள் ரன் எதுவுமின்றி ‘டாட்-பால்’ ஆக அமைந்தன. 401 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. 12 ஸ்டம்பிங், 262 கேட்ச்கள் செய்யப்பட்டன. 40 அரைசதமும், ஒரு சதமும் விளாசப்பட்டன.

    அதிக பவுண்டரிகள் அடித்தவருக்கான விருதை ஜெகதீசனும் (45 பவுண்டரிகள், திண்டுக்கல் டிராகன்ஸ்), அதிக சிக்சர் மற்றும் அதிக ரன்கள் குவித்தவருக்கான விருதை அருண் கார்த்திக்கும் (23 சிக்சர்கள், 472 ரன்கள், மதுரை பாந்தர்ஸ்), அதிக ‘டாட்-பால்’ வீசியவருக்கான விருதை வருண் சக்ரவர்த்தியும் (மதுரை பாந்தர்ஸ்), அருமையான கேட்ச் பிடித்தவருக்கான விருதை ஷாருக்கானும் (கோவை கிங்ஸ்), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான விருதை அபிஷேக் தன்வாரும் (15 விக்கெட், மதுரை பாந்தர்ஸ்) தட்டிச் சென்றனர்.

    வெற்றிக்கு பின்னர் மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் டி.ரோகித் அளித்த பேட்டியில், ‘நம்பமுடியாத உணர்ச்சிகள் எங்களை சுற்றி உலவுகிறது. முதல் 2 ஆண்டுகளில் எந்தவித வெற்றியும் பெறாமல் துவண்டு இருந்த நாங்கள் வீறு கொண்டு எழுந்து கோப்பையை கைப்பற்றி இருப்பது சிறப்பானதாகும். அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் ஆகியோரின் ஆட்டமே எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்’ என்று தெரிவித்தார்.

    மதுரை பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் அருண்குமார் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தோல்வியால் சோர்ந்து போய் இருந்த எங்கள் அணிக்கு வீரர்களின் கடின உழைப்பால் வெற்றி கிடைத்து இருக்கிறது. குறைந்த நம்பிக்கையுடன் போட்டியை தொடங்கிய நாங்கள் கோப்பையை வென்று இருப்பது பெரிய விஷயமாகும். இந்த போட்டி தொடர் எங்களுக்கு சிறப்பான பயணமாக அமைந்தது’ என்றார்.

    தொடர்நாயகன் விருது பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் பேசுகையில், ‘இந்த வெற்றியை அற்புதமாக உணருகிறேன். இந்த சீசனில் எங்கள் அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள். முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடம் தோல்வி கண்ட நாங்கள் இறுதிப்போட்டியில் அந்த அணியை வீழ்த்தியது மிகவும் முக்கியமானதாகும்’ என்று கூறினார்.  #TNPL2018


    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் மூன்றாவது தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணியை சேர்ந்த அருண் கார்த்திக் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். #TNPL2018 #ArunKarthik
    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    இதில் திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    இந்த தொடரில் வீரர்கள் வென்ற விருதுகளின் விவரம்:

    ஆட்ட நாயகன் மற்றும் தொடரில் அதிக ரன்கள் (472) எடுத்து தொடர் நாயகன் விருது ஆகியவற்றுடன் அதிக சிக்சர்கள் (23) அடித்த வீரர் விருது அருண் கார்த்திக்க்கு வழங்கப்பட்டது.

    தொடரில் அதிக விக்கெட் (15) வீழ்த்திய வீரர் அபிஷேக் தன்வருக்கு அளிக்கப்பட்டது.

    சிறந்த கேட்ச் பிடித்த வீரர் ஷாருக் கானுக்கும், தொடரில் அதிக பவுண்டரிகள் (45) அடித்த வீரர் விருது ஜெகதீசனுக்கும் வழங்கப்பட்டது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    ×