search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arvind Kejrwal"

    • கெஜ்ரிவாலை கைது செய்யத்தேவையில்லை என்று 22 மாதங்களாக சி.பி.ஐ. நினைத்திருந்தது.
    • அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதால், டெல்லியில் நிர்வாக நெருக்கடி இருக்காது என்று கூறினார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்தது.

    இருப்பினும், அதற்கு முன்பே ஜூன் 26-ந் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது. அதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    அந்த உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தார். அம்மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், கடந்த 5-ந்தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தது. ரூ.10 லட்சம் ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான 2 பேரின் உத்தரவாதத்துடன் கெஜ்ரிவாலை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

    நீதிபதி சூரியகாந்த் தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது சுதந்திரத்தை பறிப்பதாக ஆகிவிடும். புதிய சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, விசாரணை உரிய நேரத்தில் முடிவடையாது. மனுதாரர், ஜாமீன் பெற தகுதியானவர்.

    கெஜ்ரிவாலை கைது செய்ததற்கான காரணங்களை சி.பி.ஐ. தனது மனுவில் தெரிவித்துள்ளது. அவற்றில் விதிமீறல்கள் இல்லை. எனவே, கைதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை.

    கெஜ்ரிவால் சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் தேவையற்றது. இருப்பினும், வழக்கின் தகுதிநிலை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது. ஒவ்வொரு வாய்தாவின்போதும் அவர் ஆஜராக வேண்டும். அமலாக்கத்துறை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள், இவ்வழக்குக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    அமலாக்கத்துறை ஜாமீன் அளித்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஜாமீன் காலத்தில் தனது அலுவலகத்துக்கோ, தலைமை செயலகத்துக்கோ செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. கவர்னரின் ஒப்புதல் பெற தேவையில்லாதபட்சத்தில், கோப்புகளில் அவர் கையெழுத்திடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. சாட்சிகளுடன் பேசக்கூடாது என்றும் கூறியது.

    மேற்கண்ட நிபந்தனைகள் இப்போதும் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

    நீதிபதி உஜ்ஜால் புயன், தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அதில், சி.பி.ஐ.யை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    சி.பி.ஐ. ஒரு முதன்மையான விசாரணை அமைப்பு. சி.பி.ஐ., சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருப்பது மட்டுமின்றி, அப்படி இருப்பது கண்முன்பு தெரிய வேண்டும். விசாரணை நியாயமாக நடத்தப்படவில்லை என்றோ, பாரபட்சமான முறையில் கைது செய்யப்பட்டதாகவோ கண்ணோட்டம் உருவாவதை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

    சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஜனநாயகத்தில், கண்ணோட்டம் மிகவும் முக்கியமானது. சீசரின் மனைவி போல், ஒரு விசாரணை அமைப்பு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

    சிறிது காலத்துக்கு முன்பு, சி.பி.ஐ.யை கூண்டுக்கிளியுடன் ஒப்பிட்டு, இதே கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. கூண்டுக்கிளியாக இருக்கிறது என்ற எண்ணத்தை சி.பி.ஐ. அகற்றுவது முக்கியம். கூண்டில் அடைக்கப்படாத கிளியாக இருப்பதாக உணர்த்த வேண்டும்.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கடுமையான சட்டப்பிரிவுகளில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில், அதே குற்றத்துக்காக சி.பி.ஐ. வழக்கில் காவலில் வைத்திருப்பது தேவையற்றதாகி விட்டது. அது நீதியை கேலி செய்யும் செயல்.

    கெஜ்ரிவாலை கைது செய்யத்தேவையில்லை என்று 22 மாதங்களாக சி.பி.ஐ. நினைத்திருந்தது. ஆனால், அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கப்போகிறது என்றவுடன் சி.பி.ஐ. அவசரமாக கைது செய்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    கெஜ்ரிவால் சரிவர பதில் அளிக்கவில்லை என்ற காரணத்தை காட்டி, அவரை கைது செய்ததை சி.பி.ஐ. நியாயப்படுத்த முடியாது.

    அதுபோல், அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீது எனக்கு கடுமையான ஆட்சேபனைகள் உள்ளன. ஆனால், நீதித்துறை ஒழுக்கம் காரணமாக, அந்த நிபந்தனைகள் பற்றி நான் கருத்து கூற மாட்டேன்.

    இவ்வாறு நீதிபதி உஜ்ஜால் புயன் கூறியுள்ளார்.

    இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் இருக்கும் போது எந்த கோப்புகளிலும் கையெழுத்திட முடியாது என்று தகவல் பரவியது.

    இந்நிலையில், எந்த கோப்புகளிலும் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்திட முடியாது என்று பரவும் தகவல் தவறானது என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது;-

    பிஎம்எல்ஏ வழக்கில் ஏற்கனவே ஜூலை 12-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, இன்றைய (நேற்று) உத்தரவில் கமா அல்லது முற்றுப்புள்ளியோ சேர்க்கவில்லை.

    கெஜ்ரிவால் கையெழுத்திட வேண்டிய ஒரே கோப்புகள் லெப்டினன்ட் கவர்னிடம் செல்ல வேண்டும். லெப்டினன்ட் கவர்னரிடம் செல்ல வேண்டிய அனைத்து கோப்புகளிலும் கெஜ்ரிவால் கையெழுத்திடலாம் என்று ஜூலை 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மற்றவற்றில் அவரது அமைச்சர்கள் கையெழுத்திடலாம். அவரால் செயல்பட முடியாது என்று கூறுவது அரசியல். தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இதுபோன்ற தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யக் கூடாது என்றுதான் நான் கூறுவேன்.

    அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதால், டெல்லியில் நிர்வாக நெருக்கடி இருக்காது என்று கூறினார்.

    • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக தீர்ப்பில் அறிவித்தார்.
    • அரியானா சட்டசபை தேர்தலையொட்டி கெஜ்ரிவால், வெளியே வந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.

    சுப்ரீம் கோர்ட்டு வலைதளத்தில் செப்டம்பர் 13-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சூரியகாந்த் தீர்ப்பை வெளியிட்டார்.

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக அவர் தீர்ப்பில் அறிவித்தார்.

    அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    ஜாமின் உத்தரவை தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொட்டும் மழையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் வரவேற்றனர்.

    அரியானா சட்டசபை தேர்தலையொட்டி கெஜ்ரிவால், வெளியே வந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • விசாரணை நீதிமன்றம் நேற்று கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
    • அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததால் ஜாமின் நிறுத்தி வைப்பு.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

    இதனால் இன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாமின் வழங்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தள்ளார்.

    சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர டுடேஜா கொண்ட பெஞ்ச் முன்பு உடனடியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டு என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். இன்று மாலை 4 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் வெளியில் வருவதாக இருந்தது. அவருக்கு சிறந்த வரவேற்பு கொடுக்க ஆம் ஆத்மி கட்சியினர் தயாராக இருந்தனர்.

    மக்களவை தேர்தலின்போது உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு சுமார் 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×