search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cognizant"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காக்னிசன்ட்டின் குற்றச்சாட்டுக்களை இன்போசிஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
    • வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

    ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் மென்பொருள் தொடர்பான வர்த்தக ரகசியங்களை திருடியதாக இன்போசிஸ் நிறுவனத்தின் மீது டெக்ஸாஸ் பெடரல் நீதிமன்றத்தில் காக்னிசன்ட்டின் துணை நிறுவனமான டிரிசெட்டோ வழக்கு தொடர்ந்துள்ளது.

    ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிர்வாக பணிகளுக்கு காக்னிசன்ட்டின் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதன் துணை நிறுவனமான டிரிசெட்டோ தயாரித்துள்ளது.

    காக்னிசன்ட்டின் இந்த மென்பொருளை அனுமதியின்றி பயன்படுத்தி போட்டியாக மற்றொரு தயாரிப்பை இன்போசிஸ் தயாரித்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால் காக்னிசன்ட்டின் குற்றச்சாட்டுக்களை இன்போசிஸ் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், காக்னிசன்ட் தொடர்ந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

    • ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என காக்னிசன்ட் தெரிவித்தது.
    • காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதுடெல்லி:

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தின. அதன்பின், படிப்படியாக சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு கூறின.

    இந்தியாவிலும் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் அதன் ஊழியர்களை வாரத்தில் சில நாட்கள் வந்து வேலை செய்யும்படியும், மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யும்படியும் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் சில ஐடி நிறுவனங்கள் தன் ஊழியர்களை வாரம் முழுவதும் அலுவலகம் வந்து வேலைசெய்யுமாறு கூறி வருகின்றன.

    இதற்கிடையே, காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்ய தேவையில்லை. அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கடந்த ஆண்டு தெரிவித்தது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    இந்நிலையில், காக்னிசன்ட் நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் எனவும், அப்படி வேலை செய்யவில்லை என்றால் வேலையை விட்டு சென்று விடுங்கள் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • பணியாளர்களுடன் மென்பொருள் நிறுவனங்கள் "நான்-காம்படீஷன்" ஒப்பந்தம் போடுவது வழக்கம்
    • விப்ரோவிலிருந்து விலகிய ஜதின், 3 மாதங்களில் காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்

    கல்லூரி முடித்து வேலை தேடும் இந்திய இளைஞர்களுக்கு மென்பொருள் துறைதான் கனவுத்துறையாக உள்ளது. ஏசி அறை வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பு, அதிகளவு ஊதியம், அதிக எண்ணிக்கையில் விடுமுறைகள் என பல காரணிகள் இதற்கு கூறப்படுகின்றன.

    ஆனால், அத்துறையில் ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மாற வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதல்ல. போட்டி நிறுவனத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் பணியாளர்கள் சேர்வதை தடுக்கும் விதமாக மென்பொருள் நிறுவனங்கள் "நான்-காம்படீஷன்" (non-competition) ஒப்பந்தங்கள் போடுவது பரவலான வழக்கம்.

    இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர் அஜிம் பிரேம்ஜி (Azim Premji). இவர் துவங்கிய மென்பொருள் நிறுவனம் விப்ரோ (Wipro). தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் போட்டி நிறுவனங்களில் சேர்வதற்கு சுமார் 12 மாதங்களுக்கு விப்ரோ தடை செய்திருந்தது.

    2002ல் விப்ரோவில் சேர்ந்து 21 வருடங்கள் தலைமை நிதி அதிகாரியாக பணி புரிந்தவர் ஜதின் தலால் (Jatin Dalal). இவர் தேசிய தொழில்நுட்ப மையத்தில் (National Institute of Technology) பொறியியல் பட்டம் பெற்றவர்.

    விப்ரோவில் ரூ.12 கோடியாக இருந்த அவரது ஆண்டு ஊதியம், ரூ.8 கோடியாக குறைந்தது.

    இதையடுத்து, அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்த ஜதின், 3 மாதங்களில் காக்னிசன்ட் (Cognizant) எனும் வேறொரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தார்.

    இதையடுத்து அவரிடம் ரூ.25,15,52,875.00 நஷ்ட ஈடு கோரி விப்ரோ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணை ஜனவரி 3 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    காக்னிசன்ட் நிறுவனத்தில் ஜதினுக்கு ரூ.43 கோடி ஆண்டு ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×