search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooking Tips"

    • சிறிது இட்லி மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பி வரும், உடலுக்கு கெடுதல் கிடையாது.
    • காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    * இட்லி கல் மாதிரி இருப்பதாக தெரிந்தால், நான்கு பச்சை அப்பளத்தை தண்ணீரில் நனைத்து பின் மிக்சியில் அரைத்து எடுத்து வேக வைக்கும் இட்லி மாவில் சேர்த்து அவித்தால் இட்லி பூ போல வரும்.

    * ஒரு வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, நீரில் போட்டு இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் காலை அந்த நீரை சப்பாத்தி செய்யும் மாவில் கலந்தால், சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

    * பஜ்ஜி போடும்போது உப்பி வர சமையல் சோடா சேர்க்க வேண்டாம். சிறிது இட்லி மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பி வரும், உடலுக்கு கெடுதல் கிடையாது.

    * தேங்காய் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்துவிட்டு பிறகு கை பொறுக்கும் சூட்டில் எடுத்து பிசைந்தால் நல்ல கெட்டியான தேங்காய் பால் கிடைக்கும்.

    * காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    * முருங்கை கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து சமைத்தால் முருங்கை இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.

    * பொரித்த அப்பளத்தை நொறுக்கி இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கருவேப்பிலை, புளி, ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரையுங்கள். அசத்தலான அப்பள துவையல் ரெடி!

    * உங்கள் வீட்டில் ஜவ்வரிசி பயன்பாடு இல்லாமல் இருந்தால் அதை கொண்டு சூப்பராக உடனடி ஸ்நாக்ஸ் செய்யலாம். அதற்கு ஜவ்வரிசியை கடாயில் வறுத்து உப்பு, காரம் தேவையான அளவு சேர்த்துக் கொண்டால் போதும். சுவையான காராப்பூந்தி தயார். மேலும் ருசி கூட்ட கருவேப்பிலை, இடித்த பூண்டுவை எண்ணெய்யில் பொரித்து அதனுடன் சேர்த்தால் அருமையாக இருக்கும்.

    • கொழுப்பு பதார்த்தங்களை சாப்பிட்ட பின்பு வெங்காயம் சாப்பிட்டால் கொழுப்பு உடலில் தங்காது.
    • பாலை லேசாக சூடு படுத்தி அரை ஸ்பூன் சர்க்கரை கரைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.

    கார அடைக்கு பச்சரிசி சேர்ப்பது போல, கோதுமை ரவையை மற்ற பருப்புகளுடன் ஊற வைத்து அரைத்து வார்த்தால், அடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

    கேசரி செய்யும்போது நீரின் அளவைக்குறைத்து பால் கலந்து செய்தால், நல்ல மணத்துடன் இருக்கும். அதில் பேரீச்சை, அன்னாசி பழங்களையும் வெட்டிப்போட்டு பழக்கேசரி செய்தால் சுவையும், சத்தும் கூடும்.

    தேநீர் டிகாஷனில் எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து குடித்தால் மணமாக இருக்கும். வாயுத்தொல்லை நீங்கும்.

    நாள்பட்ட உளுந்தில் இட்லி, வடைக்கு அரைக்கும்போது மாவு பொங்கி வராது. பிரிட்ஜில் உளுந்தை வைத்து தேவைப்பட்டபோது பயன்படுத்தினால், உளுந்து நன்றாக பொங்கிவரும்.

    புதுப்புளி விறைப்பாக இருக்கும். உருட்டி கல் உப்பு ஜாடியில் போட்டு வைத்தால், மிருதுவாகிவிடும், புளியை கரைப்பது எளிதாக இருக்கும்.

    கொழுப்பு பதார்த்தங்களை சாப்பிட்ட பின்பு வெங்காயம் சாப்பிட்டால் கொழுப்பு உடலில் தங்காது.

    அகத்திக்கீரைக்கு தண்ணீர் அதிகம் ஊற்றி, பச்சை நிறம் மாற சமைக்க வேண்டும். முருங்கைக்கீரையை நிறம் மாறும் முன்பு எடுத்துவிட வேண்டும்.

    சீயக்காய் அரைக்கும்போது மற்ற பொருட்களுடன் வேப்பிலையையும் காயவைத்து அரைத்தால் பேன் வராது.

    பாலை லேசாக சூடு படுத்தி அரை ஸ்பூன் சர்க்கரை கரைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும். ருசியும் மேம்படும்.

    • புளிக்குழம்பு, ரசம், போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
    • சோறு குழையாமல் இருக்க, சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும்.

    * தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.

    * வற்றல் மிளகாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீரில் கழுவிக்கொள்வது சுகாதாரமானது.

    * தாளிக்கும்போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க அதை தண்ணீரில் கழுவி எடுத்துக்கொண்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.

    * புளிக்குழம்பு, ரசம், போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சுவையும் நன்றாக இருக்கும்.

    * காய்கறிகள் வாடிப்போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக இருக்கும்.

    * சோறு குழைந்து விடாமல் இருக்க, சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டும் வடிக்கலாம். சோறு பொல பொலவென்றிருக்கும்.

    * இரவே உருளைக்கிழங்கை நறுக்கி வைக்க வேண்டுமா? எலுமிச்சை சாற்றில் கிழங்கு துண்டுகளைப் போட்டு பிரட்டி எடுத்து வைத்தால் கிழங்கு கருத்துப் போகாமல் இருக்கும்.

    * முருங்கைக்கீரை தண்ணீர் சாறு வைக்கும்போது அரிசி களைந்த நீரில் அளவான உப்பிட்டு வெங்காயம் அரிந்து போட்டு தண்ணீர் கொதி வந்ததும் கீரையைப் போடவேண்டும். தாளிக்கும்போது மிளகாய் போட்டு சீரகத்தை நுணுக்கிப் போடவேண்டும். கடுகு போட வேண்டாம். நல்ல சுவை கிடைக்கும்.

    * சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும். காய்கள் வெந்ததும் புளி கரைசலில் கலந்து அதன்பிறகு தாளிக்கவேண்டும். தாளித்து கொதித்த பின் அரைத்த தேங்காய் விழுதைக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கினால் சாம்பார் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * பச்சை மஞ்சள் கிடைக்கும்போது இரண்டு கிலோ வாங்கி கொதி தண்ணீரில் நன்றாக அவித்து நன்றாக உலர வைத்து சுத்தம் செய்து, மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் சுத்தமான மஞ்சள் தூள் கிடைக்கும். சமையலில் இந்த மஞ்சள்தூள் நல்ல நிறமாக கண்ணைப் பறிக்கும்.

    * அரிசியையும், பருப்பையும் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் களைந்து போட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்து விடுவதுடன் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    • கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும்.
    • மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம்.

    சப்பாத்தி மாவுடன் சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கையும், சிறிதளவு பாலையும் சேர்த்து பிசைந்து தயார் செய்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    ஒரு துணியில் ஒருஸ்பூன் அளவு உப்பு முடிந்து மாவில் போட்டுவைத்திருந்தால் மாவில் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

    கொத்தமல்லி தழை, புதினா வாடி விட்டால் அவற்றை தூக்கி எறிந்துவிடாமல் மிக்ஸியில் அரைத்துப்பொடி செய்து காய்கறி வறுவலில் தூவி இறக்கினால் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும். இலைப்பாகத்தை ஈரத்துணியில் மூடி வைக்கலாம். அப்படி செய்தால் கீரைக்கட்டு வாடாமல் இருக்கும்.

    சுண்டல் கெட்டுப்போகாமல் இருக்க கொப்பரைத்தேங்காயைத் துருவி, வதக்கிப் போடவும்.

    சாதம் குழைந்து போய் விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அடுப்பை சிறு தீயில் சிறிது நேரம் வைத்துவிட்டு வடித்தால் சாதம் குழைவாக இல்லாமல் கொஞ்சம் பதமாக இருக்கும்.

    மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம். மீன் தண்ணீருக்குள் மூழ்கினால் கெடவில்லை என்பதை அறியலாம்.

    உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன்பு உருளைக்கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவ வேண்டும். பின்பு மோரில் சிறிதுநேரம் ஊற விட்டு வடித்து எடுத்து பொரித்தால் சிப்ஸ் வெள்ளையாக இருக்கும்.

    தக்காளிப் பழங்களை சிறிது உப்பு கரைத்த நீரில் போட்டு வையுங்கள். பழம் கெடாது, சுவையும் மாறாது.

    • வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
    • பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம்.

    * தேங்காய்க்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்துச் சமைத்தால் குருமா புதுமையான சுவையுடன் இருக்கும்.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    * புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

    * பெருங்காயம் கட்டியாகி விட்டதா? அதில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வையுங்கள். இளகி விடும்.

    * தோசை மாவு சற்று புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் தயார் செய்யலாம்.

    * சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காதீர்கள். அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.

     

    * பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம். அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.

    * ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியல் மிகவும் ருசியாக இருக்கும்.

    * இட்லிக்கு சட்னி செய்யும்போது பொட்டுக்கடலை, தேங்காயுடன் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் ருசியாக இருக்கும்.

    * ரவா கேசரி, அல்வா போன்ற இனிப்பு வகைகள் செய்யும்போது கடைசியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பு திகட்டாது. சுவையாக இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.
    • எரிவாயுவை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

    இன்று பெரும்பாலானோர் சமையல் எரிவாயுவை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றனர். இந்தநிலையில் சில விஷயங்களைப் பின்பற்றினால், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த முடியும்..

    * சமையல் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பு சமையலுக்குத் தேவையான சமையல் பொருட்களை எரிவாயு அடுப்பின் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு சமையல் பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

    * சமையல் வேலைகளுக்கு பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ஒரே சமயத்தில் பருப்பையும், அரிசியையும் வேகவைத்து விடலாம். இதனால் எரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.

    * சமையல் பாத்திரங்களில் தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன் தீப்பிழம்பை குறைத்து வைத்தால் எரிவாயு குறைவாக காலியாகும்.

    * உணவுப்பொருட்கள் வேக வைப்பதற்கு அதிக நேரம் தேவை என்றால், எரிவாயு அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்தினால் எரிவாயு அதிகம் காலியாகாது.

    அடுப்பு சரியாக எரியவில்லை என்று எரிவாயு வரும் பர்னரை குத்தி குத்தி பெரிது செய்தால், பிழம்பு சிவப்பாக எரியும், எரிவாயுவும் வீனனாகும்.

    • காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.
    • முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

    • வாழைக்காய் பஜ்ஜி செய்யும் போது, 1 குழி கரண்டி இட்லி மாவு சேர்த்து கலந்து பஜ்ஜி சுட்டு பாருங்க, சுவையா இருக்கும்.

    • பூரிக்கு மாவு பிசையும் போது 1/2 ஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்து பிசைந்தால், நீண்ட நேரம் பூரி உப்பலாக, மொறுமொறுப்பாக இருக்கும்.

    • காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.

    • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் 1 ஸ்பூன் முகத்துக்கு போடும் பவுடரை போட்டு, அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டால் சமையலறையில் வீசும் துர்நாற்றம் நீங்கும்.

    • அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரை கீழே கொட்டாதிங்க. நீங்கள் வைக்கும் புளிக்குழம்பில், இந்த அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டால் குழம்பு திக்காகவும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் கிடைக்கும்.

    • உதிர்த்து வைத்திருக்கும் பூண்டுடன் உருளைக்கிழங்கை வைத்தால், சீக்கிரம் முளைத்து வராமல் இருக்கும்.

    • குழம்பு கொதிக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுடுதண்ணீரை மட்டுமே ஊற்றவும். அப்போதுதான் குழம்பின் சுவை மாறாது.


    • முட்டைகோஸ் பொரியல் தாளிக்கும் போது கடுகு, வரமிளகாயோடு சேர்த்து, கொஞ்சம் துருவிய இஞ்சி, 2 கிராம்பு சேர்த்துக்கோங்க. முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

    • தேங்காய் சட்னி அரைக்கும் போது அதில் கோலி குண்டு சைஸ் புளி சேர்த்து அரைத்தால், சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாது.

    • கடாயில் இருந்து அந்த பொரியலை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, அதன் மேலே 1 பிரட்டை வைத்து, மூடி போட்டு 1/2 மணி நேரம் கழித்து, அந்த பிரட் துண்டை எடுத்து விட்டால், பொரியலில் தீய்ந்த வாடை வீசாது.


    • 1 கப் கோதுமை மாவுக்கு, 1 ஸ்பூன் உருக்கிய வெண்ணெயும், தேவையான அளவு தண்ணீரும், விட்டு பிசைந்து சப்பாத்தி சுட்டால் 10 மணி நேரம் ஆனாலும் சப்பாத்தி சாஃப்டா இருக்கும்.

    • பூண்டை குக்கரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, 5 - 6 விசில் விட்டு வேக வைத்து கடைந்து, பூண்டு குழம்பு வைத்தால், ஒரு பூண்டு கூட ஒதுக்கி வைக்க மாட்டாங்க.

    • புளித்த தோசை மாவின் மேலே பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் தூவி, இட்லி பொடியையும் தூவி, நெய்விட்டு மிதமான தீயில் ஓரம் எல்லாம் முறுகலாக வரும்படி சுட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    • பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • பருப்பு வேகவைக்கும்போது, விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    ஆட்டுக்குடல் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால், ஆட்டுக்குடல் சீக்கிரம் வெந்து விடும்.

    பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    முட்டை ஆம்லெட் செய்யும்போது, காரம் சாப்பிடாதவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து குடை மிளகாயை சேர்த்தால், சுவை கூடுதலாகும்.

    ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளுவையும் சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.

    சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது, அதில் விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    புளிச்சோறு, ரசம், வத்தக்குழம்பு போன்ற புளி சம்பந்தப்பட்ட உணவு தயார் செய்யும்போது அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவை கூடும்.

    புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு, நிலக்கடலையை வறுத்துப் போடாமல், எண்ணெய்யில் பொரித்துப்போட்டால், மொறு மொறு என்று இருக்கும்.

    பீன்ஸ், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால், ருசியாக இருக்கும்.

    பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் செய்யும்போது, தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சுவை கூடும்.

    குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

    • ஊறுகாய், கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது.
    • வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி ஆப்பம் வார்த்தால் சுவையாக இருக்கும்.

    * பொதுவாக எந்த ஊறுகாய் செய்தாலும் கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது. வடநாட்டினர் பெரும்பாலும் பின்பற்றும் வழியும் இதுதான்.

    * குலோப்ஜாமூனை ஆறவைத்த சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் விரிசல் விழாது, உடைந்தும் போகாது.

    * முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

    * பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து செயற்கை கலருக்கு பதிலாக பயன்படுத்தலாம். உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகான நிறங்களில் இருக்கும். உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

    * தேங்காயோடு பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * கோதுமை மாவு போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பிரியாணி இலைகளையும் சேர்த்தால் வண்டு வராது.

    * சமையல் செய்யும்போது உடலில் சூடான எண்ணெய் பட்டுவிட்டால், அந்த இடத்தில் உருளைக்கிழங்கை அரைத்து பூசினால் கொப்பளம் வராது.

    * குலோப்ஜாமூன் ஜீரா மீந்துவிட்டால், அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெய்யில் பொரித்தால் சுவையான இனிப்பு பிஸ்கட் ரெடி.

    * ஆப்பத்திற்கு மாவு கலக்கும் போது இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டி தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    • மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை போட்டு வைத்தால் போதும்.
    • இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை போட்டு வைக்கலாம்.

    * கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் போதும்.

    * காப்பர் பூசப்பட்ட பாத்திரம் மங்காமல் இருப்பதற்கு சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி, துணியால் அழுத்தி தேய்த்தால் போதும். பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

    * இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் அதன் உள்பகுதியை மாவில் போட்டு வைக்கவும். மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

    * மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். பின்பு நீரை ஊற்றிவிட்டு முயற்சி செய்தால் பிளேடை எளிதாக கழற்றலாம்.

    * மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து இட்லி சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்.

    * வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் மணமாக இருக்கும்.

    * சப்பாத்தியை சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரம் காயாமல் இருக்கும்.

    * ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

    * தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும்.

    * முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டு வைத்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    • சப்பாத்தி மாவு பிசையும் போது பால் சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்.
    • கருணைக்கிழங்கு பொரியலுக்கு வேர்க்கடலையை பொடி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

    1. நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி, புதினா துவையல் அரைக்கும்போது அதனுடன் சேர்த்து அரைத்தால் சுவையான நெல்லி-புதினா துவையல் ரெடி.

    2. எந்த பதத்தில் அரைத்தாலும் இட்லி பூ போல மென்மையாக வரவில்லையா? கவலை வேண்டாம். கழுவி ஊற வைத்த அரிசியுடன் ஒரு டம்ளருக்கு நான்கு ஸ்பூன் என்ற விகிதத்தில் பொட்டுக் கடலையை சேர்க்கவும். இதை எப்போதும் போல அரைத்து இட்லி சுட்டால் பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.

    3. சாம்பாரிலோ அல்லது காரக்குழம்பிலோ புளிப்புச்சுவை அதிகமாகிவிட்டால் ஒரு துண்டு வெல்லம் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொதிக்க விடவும். புளிப்பு சுவை மட்டுப்படும்.

    4. கருணைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதனுடன் வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து சேர்த்தால் கருணைக்கிழங்கு பொரியல் சுவையாக இருக்கும்.

    5. புட்டுமாவு அரைக்கும்போது அதனுடன் நான்கிற்கு ஒன்று என்ற விகிதத்தில் சிறுதானியமான கம்பு சேர்த்து அரைத்து வேகவைத்து அதனுடன் வெல்லம், நெய், துருவிய தேங்காய், வாழைப்பழத் துண்டுகள் மற்றும் பொடித்த வேர்க்கடலை சேர்த்தால் சத்து நிறைந்த புட்டு தயார்.

    6. முள்ளங்கியை நறுக்கிய பிறகு அந்தத் துண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைத்துப் பின்னர் சமைத்தால் முள்ளங்கியின் வாடை துளி கூட வராது.

    7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதனுடன் வெந்நீர் அல்லது சூடான பால் சேர்த்துப் பிசைந்தால் சுவையான சப்பாத்தி செய்யலாம்.

    8. பூரிக்கு கிழங்கு மசால் செய்யும்போது மற்ற பொருள்களுடன் பொட்டுக்கடலைப் பொடியை சிறிதளவு சேர்த்தால் கிழங்கு மசாலாவின் சுவையும், மணமும் கூடும்.

    9. தயார் செய்த குழம்பில் உப்பு அதிகமானால் வறுத்து அரைத்த அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு இவையில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கலாம். உப்பு மட்டுப்படும்.

    10. மெதுவடை செய்யும்போது அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன், ஊற வைத்த பயத்தம் பருப்பை சிறிதளவு கலந்து வடை சுட்டெடுங்கள். வடை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

    11. பஜ்ஜி செய்யும்போது சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாகவும், மொறுமொறுப்பாகவும் வரும்.

    12. கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த வேர்க்கடலை மாவைச் சிறிது கலந்து சத்து நிறைந்த பூரி செய்யலாம்.

    • முந்திரி பருப்புகளை வறுத்து வைத்தால் கெடாது.
    • அடைக்கு பருப்புடன் ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்தால் அடை மொறுமொறுப்பாக கிடைக்கும்.

    * முற்றிய தேங்காயை துண்டுகளாக வெட்டுவது சிரமம். அதை பிரீசரில் 10 நிமிடங்கள் வைத்து விட்டு தண்ணீரில் கழுவி கீறினால் ஓடு கழன்று வந்துவிடும்.

    * பிரிட்ஜ் கதவு எப்போதும் பளிச்சென இருக்க, லிக்விட் சோப்புடன் சொட்டு நீலத்தை நுரை வரும்வரை கலந்து, அந்த நுரையால் துடைத்தால் போதும்.

    * சவ்சவ் நறுக்கும்போது விரல் பிசுபிசுப்பாகி விடும். சவ்சவ்வை நீளவாக்கில் இரண்டாக வெட்டி ஒன்றோடு ஒன்று தேய்த்து, பின்பு நீரில் கழுவி விட்டு நறுக்கினால் பிசுபிசுப்பாக இருக்காது.

    * முழு முந்திரி பருப்புகளை விரைவில் பூச்சி அரித்து விடும். அவற்றை ஒன்றிரண்டாக உடைத்து, வெறும் வாணலியில் வறுத்துவிட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.

    * ரோஜா, சாமந்தி பூக்களின் காம்புகள் ஒடிந்த நிலையில் இருந்தால் சாமி படங்களுக்கு வைப்பது சிரமம். ஊதுவர்த்தியின் கீழ்பாகம் போன்ற சிறு குச்சிகளை பூ நடுவில் சொருகி விட்டால் அழகாக பூ சூட்ட முடியும்.

    * குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது காய்ச்சிய பாலை சேர்க்கலாம்.

    * பாகற்காயுடன் பீட்ரூட், கேரட் கலந்து பொரியல் செய்தால், அதன் கசப்பு தன்மை குறைந்து விடும்.

    * வெயில் காலத்தில் தயிர் வேகமாக புளித்து விடும். டிபன் கேரியரில் பால் உறை ஊற்றி மேல், கீழ் பாத்திரங்களில் நீர் நிரப்பி வைத்தால் எளிதில் புளிக்காது.

    * அடைக்கு பருப்பு ஊற வைக்கும்போது கைப்பிடி ஜவ்வரிசியையும் அதனுடன் ஊற வைத்தால் மொறுமொறு அடை கிடைக்கும்.

    * பால் சேர்த்து பாயசம் செய்யும்போது அடுப்பில் வைத்து சர்க்கரை கலந்தால் திரிந்தது போல் ஆகிவிடும். இறக்கிவிட்டு பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.

    * வெயில் காலத்தில் பூக்கள் சீக்கிரம் வாடாமல் இருக்க, ஸ்பாஞ்சை தண்ணீரில் நனைத்து அதன் மேல் பூக்களை வைத்து ஈரத்துணியால் சுற்றவும்.

    ×